Wednesday, November 24, 2021

காணாமல் போன உன் செல்லப்பிராணி உனக்கு மீண்டும் கிடைத்துவிட்டது. இந்நிகழ்வுகளைப் பொருத்தமான வர்ணனைகளுடன் விளக்கி எழுதுக. கேரன் பெனீட்டா 107 - 2021

“டிம்மி! டிம்மி!” என்று காதை பிளக்கும் வண்ணம் அலறிக் கொண்டிருந்தேன். நான் கத்திக்கொண்டே இருந்தது கண்டிப்பாக அடுத்த நாள் என்னை குரல் இல்லாமலேயே ஆக்கிவிடும் என்று என்னை உறுதியாக நினைக்க வைத்தது. அன்று குளிர்காற்று என்னை முத்தமிட்டு சென்றது. எங்கும் பச்சே பசேலென இருந்தது. அங்கும் இங்கும் மலர்கள் பூத்துக் குலுங்கின. மாலை மங்கி இலேசாக இருள் வானைக் கௌவத் தொடங்கியது. என் நாய்க்குட்டி, டிம்மியுடன், பூங்காவில் நடக்க இது என்ன ஒரு அருமையான நாள் என்று நினைத்திருந்தேன். ஆனால் வழியில் கண்ட நண்பனிடம் ஐந்து நிமிடம் பேசிய நான் அந்நேரத்தில் என் செல்லப்பிராணி தொலைந்து போய் விடும் என்று சிந்தித்தே பார்க்கவில்லை. என்னுடன் நெருக்கமாகப் பழகியிருந்த என் தாத்தா இறப்பதற்கு முன் எனக்கு அளித்த கடைசிப் பரிசு டிம்மிதான். தாத்தா இறந்த பிறகு அதனுடன்தான் என் முழு நேரத்தை செலவழித்தேன். எப்போதும் என் அறுகிலேயே இருக்கும் டிம்மி இப்பொழுது காணாமல் போனது என் வயிற்றில் இடி விழுந்தது போலிருந்தது. “கண்டிப்பாக யாராவது டிம்மியை நான் கவனிக்காதபோது தூக்கியிருப்பார்கள்!” என்று எண்ணிப் பதறினேன். அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த என்னால் சோர்வைத் தாங்க முடியவில்லை. என் முகம் சிவந்திருந்தது. என் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வீழ்ச்சியைப் போல் வழிந்தது. “டிம்மி அடுத்த நிமிடமே என் கைகளில் இருக்க வேண்டும்!” என்று கடவுளிடம் என் மனதில் கெஞ்சினேன். யாரை வினவினாலும் டிம்மியை பார்க்கவில்லை என்று பதிலளித்தனர். அப்பொழுது நிறைய நீர் ஒரு ஆறுபோல் ஓடுவதைச் செவி மடுத்தேன். திரும்பிப் பார்த்த நான், என் அருகே ஒரு பெரிய கால்வாய் இருப்பதை அறிந்தேன். கருப்பு நிறமான ஒரு பை கால்வாயின் நேரில் என் கண்ணுக்கு புலப்பட்டது. உற்றுப் பார்த்த நான் அந்த பையினுள் எதோ நகர்வது போல் இருப்பதை உணர்ந்தேன்! “யாரோ டிம்மியை பையினுள் அடைத்து வைத்து விட்டார்களா ? என்ற கேள்வி என் மனதில் எழும்பியது. என் இதயம் “படக் படக் “ என்று பதற்றத்தில் தாளம் போடுவது என் கைக்கடிகாரத்தின் “டிக் டிக் “ ஒலியை விட சத்தமாக இருப்பதை போல் இருந்தது. என் சிந்தனைகள் பயத்தில் அங்கும் இங்கும் அலை பாய்ந்தது. “டிம்மியை காப்பாற்ற ஒரே வழிதான் உள்ளது,” என்று எண்ணினேன். நான் எதிர்பாராததைச் செய்தேன் ஒரு கணம் கூட செலவழிக்காமல் கால்வாயினுள் இறங்கி நீரினுள் குதித்தேன்! வேகமாக ஓடிக் கொண்டிருந்த நீர் என்னைத் தள்ள கடினமாக உழைத்து நீச்சலடித்தேன். “டிம்மி!” என்று அலறியபடியே என் அருகில் நீருடன் ஓடிக்கொண்டிருந்த கருப்பு பையை நீட்டி பிடித்து கொண்டபின் ஆனந்த கண்ணீர் வடித்தேன். என் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தது. டிம்மியை பையிலிருந்து மீட்க பையைத் திறந்தேன். கருப்பு பையினுள் ஒரு காலணிதான் இருந்தது என்று அறிந்த எனக்கு யாரோ ‘டமார்!’ என்று தலையில் அடித்ததுப் போலிருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. டிம்மி என்னிடம் இல்லை! கால்வாயிலிருந்து வெளியே வர முயன்ற நான் அப்பொழுதுதான் என் முட்டாள்தனத்தை புரிந்துகொண்டேன். நான் நீரின் வேகத்தைப் பற்றி யோசிக்காமல் கால்வாயினுள் குதித்திருந்தேன். நீர் என்னை இழுத்துக்கொண்டே இருந்தது. அச்சம் என் மனதை கௌவியது. எப்படி நீரிலிருந்து வெளியே வருவது என்று தெரியவில்லை. பயத்தால் என் இரதம் பனிக்கட்டியைப்போல் உறைந்தது. “காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!” என்று நான் காது பிள்ளைக்கும் வண்ணம் அலறினேன். ஏன் நான் சிந்திக்காமல் கால்வாயினுள் இறங்கினேன் என்று வருந்தினேன். அப்பொழுது, “எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவ மென்ப திழுக்கு” என்ற திருக்குறள் என் ஞாபகத்திற்கு வந்தது. நல்ல வேலை சில பேர் கைத்தொலைப்பேசியைப் பயன்படுத்தி மீட்புக் குழுவை அழைத்தனர். அவர்கள் உடனே என்னைக் காப்பாற்றினார்கள். நான் சிந்தித்து செயல்படாததற்கு என்னைக் கண்டித்தார்கள். என்னை அவர்கள் காப்பாற்றாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று சிந்தித்துப் பார்க்கவே பயமாக இருந்தது. டிம்மியை இன்னும் காணவில்லை என்ற வருத்தமும் நான் செய்த முட்டால் செயலினாள் எனக்கு என் மீது ஏற்பட்ட கோபமும் சேர்த்து கண்ணீராக வெளிவந்தது. அப்பொழுது என் கையை யாரோ தொடுவதுப் போல் இருக்க நான் திரும்பிப் பார்த்தேன். என்னால் என் கண்களை நம்ப முடியவில்லை. ஓர் ஆடவர் டிம்மியை தன் கையில் ஏந்தியவாறு நின்றுகொண்டிருந்தார்! “நீ முன்பு என்னிடம் ஒன நாய்க்குட்டியைப் பார்த்தாயா என்று வினவியிருந்தாய். அதன் பிறகு அதை ஒரு புதரினருகில் பட்டாம்பூச்சியுடன் விளையாடுவதைக் கண்டேன்,” என்று கூறினார். வானிலிருந்து வந்த தெய்வம் போல் அவர் எனக்குத் தோற்றமளித்தார். நான் என் நன்றியைப் பலமுறை தெரிவித்த பிறகு டிம்மியை ஆரத்தழுவிக்கொண்டேன். அந்த சம்பவம் என் மனதில் பசுமரத்தாணியைப்போல் பதிந்தது. அன்றிலிருந்து நான் எப்பொழுதும் ஒரு செயலைச் செய்வதற்கு முன் இரண்டு முறையாவது சிந்தித்து பார்க்க முடிவு செய்தேன். மேலும் டிம்மியை இன்னும் கவனத்துடன் பார்த்துக்கொள்ள தொடங்கினேன். ~முற்றம்~

1 comment:

Tamil said...

பணம், முதலீடு, காப்பீடு, க்ரிப்டோகரன்ஸி, சினிமா விமர்சனம், உள்ளிட்ட உங்களுக்குப் பிடித்த தலைப்புகளில் எதில் வேண்டுமானாலும் கட்டுரை எழுதி ரூ.30,000 வரை சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுங்கள். உங்கள் கட்டுரை valaithamil.com தளத்தில் வெளியிடப்பட்டால் ரூ.50 முதல் ரூ.1000 தினந்தோறும் வெல்ல வாய்ப்பு உள்ளது. மேலும் விவரங்களுக்கு valaithamil.com/contentwriter.html என்கிற முகவரிக்குச் செல்லுங்கள்.

மேலும் வலைத்தமிழ் நடத்தும் கதை & கவிதைப் போட்டிகளில் கலந்துகொண்டு ரூ.1000 வரை பரிசு வெல்லும் வாய்ப்பையும் பெறுங்கள்.