Friday, November 19, 2021

சிங்கப்பூரின் குடியிருப்புப் பேட்டைகளிலுள்ள விளையாட்டு வசதிகள், மக்கள் உடல் ஆரோக்கியத்தோடும் சமூக நல்லிணக்கத்தோடும் வாழ உதவியாக உள்ளன. கருத்துரைக்க.

Janarakshini_ 2021 சிங்கபூரில் இருக்கும் குடியிருப்பு பேட்டைகளில் பலவிதமான விளையாட்டு வசதிகள் உள்ளன. எல்லா வயதிற்கும் உட்பட்டு இந்த விளையாட்டு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. நமது குடியிருப்பு பேட்டைகளை சுற்றி நடக்கும்போது, நிறைய மக்கள் அங்குமிங்கும் உரையாடிக்கொண்டும் உடற்பயிற்சி செய்துகொண்டும் இருப்பதை காணலாம். "ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு" என்ற பழமொழிக்கு ஏற்ப, நம் சமுதாயங்களில் எப்பொழுதும் ஒற்றுமையாக காணப்படுகிறார்கள். இதற்கு ஒரு காரணம், எல்லாரும் இணைந்து பயன்படுத்தும் இந்த விளையாட்டு வசதிகளே என்று நம்புகிறேன். நமது குடியிருப்பு பேட்டைகளில் எல்லாரும் இணைந்து பயன்படுத்தும் வசதிகளில் பிள்ளைகளுக்கான விளையாட்டு திடல், உடற்பயிற்சி பூங்கா, பூபந்தாட்டம் அல்லது கூடைபந்தாட்டம் திடல்களும் உள்ளன. இந்த வசதிகள் சமூக நல்லிண்க்கத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கின்ற்ன என்பது நிச்சயம். முதலாவதாக, தொடக்கப் பள்ளி ஒன்று அல்லது இரண்டாம் மாணவர்கள் நிறையபேர் பிள்ளைகளுக்கான விளையாட்டு வசதிகளில் நிறைய நேரத்தை செலவிடுகின்றனர். இவர்களின் பெற்றோர்கள், விளையாட்டு திடலில் விளையாடுவது பிள்ளைகளுக்கு உடற்பயிர்சியாக விழங்கும் என்ற நோக்கத்துடன் தான் அவர்களை அங்கு அனுப்புகிறார்கல். இவர்களின் பெற்றோர்கள், விளையாட்டு திடலில் விளையாடுவது பிள்ளைகளுக்கு உடற்பயிர்சியாக விழங்கும் என்ற நோக்கத்துடன் தான் அவர்களை அங்கு அனுப்புகிறார்கல். ஆம். நாமும் பார்த்திருக்கிரோம். விளையாட்டு மைதானத்தில் பிள்ளைகள் உற்சாகதுடன் ஓடிப் பிடித்து விளையாடுவதோடும் விளையாட்டு வசதிகளில் விளையாடுகின்றனர். இது பிள்ளைகளுக்கு போதுமான உடற்பயிற்சியையும் மகிள்ச்சியையும் தருகிறது. உடற்பயிற்சியைவிட, நிறைய மாணவர்களுள் நட்பு மலர்கிறது. நீண்ட நாள் அதே இடத்தில் விளையாடும் பிள்ளைகள் ஒருவருடன் ஒருவர் நட்பு கொள்வர். "குணம்நாடிக் குற்றமும்நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்" என்ற குறளுக்கு ஏற்ப்ப, நிறைய மாணவர்கள் மற்ற பிள்ளைகளுடன் பழகி வந்து அவர்கள் பற்றி நன்றாக தெரினந்தவுடன் அவர்களுடன் நட்புக்கொள்வர். அவ்வாறு தோன்றும் நட்பு சில சமயங்களில் நீண்ட காலமாக இருக்கும். இவ்வாறு தான் பிள்ளைகளுக்கான விளையாட்டு வசதிகள் மாணவர்களிடையே நட்பையும் நல்லினக்கத்தையும் உருவாக்குகின்றது. மாணவர்கள் வளர, நிச்சியமாக அவர்கள் பிள்ளைகளின் வசதிகளில் விளையாடுவதை நிறுத்திக்கொள்வர். ஆனாலும், மாணவர்கள் இன்னும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்று நமது அரசாங்கம் பூப்பந்தாட்டாம் மற்றும் கூடைப்பந்தாட்ட திடலை அமைத்துள்ளது. இந்த திடல்கள், மாணவர்களுக்கும் மட்டுமின்றி, பெற்றோர்களுக்கும் வேலை செல்லும் பெரியவர்களுக்கும் ஒரு உடற்பயிற்சி செய்யும் இடமாக திகழ்கிறது. எனது சமூதாயத்திலே, நிறைய பெரியவர்களுக்கும் மாணவர்களுக்கு பூப்பந்து, கூடைப்பந்தாட்டம், காற்பந்தாட்டம், காற்பந்து போன்ற விளையாட்டுகளை விளையாட பிடிக்கும். அதனால், அவர்கள் இவ்விடங்களுக்கு செல்வார்கள். அங்கே, தன்னைப்போல் ஆர்வ்த்தால் வந்தவர்களை சந்திப்பார்கள். நீண்ட காலமாக அதே இடத்தில் விளையாடும்போது, நட்பு அவர்களுக்கிடையே மலரும். சில சமயங்களில், தெரியாதவர்களுக்கும் ஏதாவது காரணத்தால் மக்கள் அவர்களுக்கு உதவுவார்கள். "நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று" என்ற குறலுக்கு ஏற்ப, மக்கள் அவர்களின் உதவியை நினைவில் வைத்துகொண்டு வாய்ப்பு கிடைக்கும்போது அவர்களுக்கு திருப்பி உதவுவர். இது சமூதாயத்தில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும். இதனால்தான் பூபந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், காற்பந்தாட்டம் திடல்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, சமூக நல்லினக்கத்தையும் வலுபடுத்த்கின்றன. அடுத்தாக, வயதானவர்களுக்காகவும் பெரியவர்களுக்காகவும் உடற்பயிற்சி பூங்காக்கள் அமைத்துள்ளன. இந்த இடங்களில் நிறைய வயதானவர்கள் உடற்பயிற்சி செய்வதை காணலாம். இங்கு சற்று சுலபமான உடற்பயிற்சி வசதிகள் உள்ளதால் வயதானவர்களுக்கு இங்கே உடற்பயிற்சி செய்ய தூண்டும். வேலையிருந்து ஓய்வெடுத்த நிறைய வயதானவர்கள் தங்கள் மாலை நேரங்களில் இங்கு வந்து விடுவர். நான் பார்த்ததில் அங்கு மற்றவர்களை முதியவர்கள் பார்க்கும்போது சுலபமாக உரையாடலைத் தொடங்கி உடற்பயிற்சி செய்தவாறு மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருப்பர். இதனால்தான் நிறைய சமயங்களில் முன்பின் தெரியாதவர்களும் முதியவர்கள் சுலபமாக நட்பு கொள்வர். உடற்பயிற்சி செய்யும் போது உங்களை ஊக்கப்படுத்தி உங்களோடு உடற்பயிற்சி செய்பவர் இருந்தால் அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். அதனால்தான் முதியவர்கள் தங்களுக்குள் நட்பை கொண்டுள்ளனர் என்று நம்புகிறேன். இதிலிருந்து உடற்பயிற்சி பூங்காக்கள் சமூக நல்லிணக்கத்தையும் நட்பையும் மேம்படுத்துவதோடு பெரியவர்களின் உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. மேற்கூறிய உதாரணங்களை தவிர நம் அரசாங்கம் நமக்கு நிறைய விளையாட்டு வசதிகளை அமைத்துள்ளது. பூங்கா, ஓடும் திட போன்ற வசதிகளும் சில வட்டாரங்களில் காணலாம். அந்த வசதிகள் நிச்சயமாக மக்களை உடற்பயிற்சி செய்யத் தூண்ட வைக்கும். எப்படி? எனது கருத்தில், நமது அரசாங்கம் இந்த வசதிகளையும் நாம் குடியிருப்பு பேட்டைகளின் நடுவில் கட்டி அமைத்திருக்கிறார்கள். அதனால் மக்கள் வேலை, அல்லது பள்ளி, அல்லது மற்ற சமுதாய வசதிகளுக்குச் செல்லும்போது இந்த விளையாட்டு வசதிகளை தாண்டி செல்வார்கள். மற்றவர்கள் அங்கே உடற்பயிற்சி செய்து தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதை கண்டு அவர்களுக்கும் உடற்பயிற்சி அல்லது விளையாட வேண்டும் என்ற ஆவல் வரும். நமது அரசாங்கம் திட்டமிட்டு வசதிகளை நடுவில் கட்டி இருப்பதால் நிறைய குடிமக்களுக்கும் உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்று தூண்டும். அவர்கள் போல் அங்கு வந்த மற்றவர்களை காணும்போது நட்பு மலரலாம். சில சமயங்களில் குடும்பம் ஒன்றாக செல்லும்போது பெற்றோர்களுக்கு அல்லது பிள்ளைகளுக்கு அறிந்தவரின் குடும்பத்தை காணலாம். இதனால் இரு குடும்பங்களும் ஒருவருக்கு ஒருவருடன் நட்புகொள்வர். பெற்றோர்கள் அவர்களுடன் உரையாடி நட்பு கொள்வதோடு பிள்ளைகளும் அவ்வாறு செய்த நட்பு கொள்வார்கள். இவ்வாறு நிறைய குடும்பங்கள் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு வசதிகள் வழி நட்பு கொள்கின்றனர். இவ்வாறுதான் நம் குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள விளையாட்டு வசதிகள் மக்கள் உடல் ஆரோக்கியத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் வலுப்படுத்துகிறது. நமது அரசாங்கம் நமக்கு அமைத்திருக்கும் விளையாட்டு வசதிகள், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு நட்பையும் உருவாக்குகிறது. நிறைய மக்களின் கண்ணோட்டத்தில் இது அவ்வளவு முக்கியமின்றி காணப்படலாம், ஆனால் இதனால் வரும் நட்பும் நல்லிணக்கமும் எதிர்காலத்தில் நமக்கு பெரும் உதவியாக அமையலாம். "காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற செயலுக்கு ஏற்ப, நாம் இந்த வசதிகளைப் பயன்படுத்தி நம் ஆரோக்கியத்துவதையும் தை நல்ல நட்புகளையும் வளர்த்துக்கொள்ளவேண்டும். எதிர்காலத்தில் நமக்கு படிப்பு அல்லது வேலையால் நேரம் இல்லாத போது நழுவ விட்ட இந்த வாய்ப்பை பற்றி எண்ணி வருந்த கூடாது. இதனால்தான் குடியிருப்பு பேட்டைகளில் உள்ள விளையாட்டு வசதிகள் மக்களை இன்னும் மகிழ்ச்சியாக வாழ விடுகின்றன என்று நம்புகிறேன்.

No comments: