Wednesday, November 24, 2021

உன் நண்பர் எப்போதும் எதிலும் பிடிவாதமாக நடந்துகொள்வார். ஆனால், அவரது வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் அது தவறென்பதை அவருக்கு உணர்த்தி அவரிடம் மாற்றத்தைக் கொண்டுவந்தது. அதுபற்றி விளக்கி எழுதுக - Darshana Ganesan 105 - 2021

“அவன்தான் பிடிவாதமாக எல்லாவற்றையும் ஒரே காலில் நின்று கேட்டுக்கொண்டிருக்கிறான் என்றால் நீங்களும் எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு கொடுத்துக்கொண்டிருக்கிறீகள்? சிறிது புத்திமதி கூறவேண்டியதானே?” என்று எப்போதும் போல ரவியின் அம்மா ரவியின் அப்பாவை வினவினார். ரவியின் அம்மா எதிர்பார்த்தது போலவே அவர், “விடு விடு , சின்னப் பையன் தானே” என்று கூறி வேலைக்குப் புறப்பட்டார். ரவியின் அப்பா நீங்கள் நினைப்பது போல பணக்காரர் அல்ல. அவர் ஒரு சாதாரண மனிதர். மிகவும் கடினமாக வேலை செய்யும் மனிதர். அவர் நெகிழி பொருட்கள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்பவர். ஒரு காக்கிச் சட்டையையும் காலச்சட்டையையும் தான் அவர் எப்போதுமே அணிந்து காணப்படுவார். அதில் வேலை செய்யும் இடத்திலிருந்து கறைகள் ஏராளமாகப் படிந்து இருக்கும். ஆனால் அதையெல்லாம் அவர் கண்டுக்கொள்ளாமல், இருப்பதை வைத்துக்கொண்டு இது போதும் நமக்கு என்று வாழ்வார். அவருக்கு மிகவும் பிடித்த பாடல், “ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே.. வாழ்வென்றால் போறாடும் போர்களமே,” என்றும் அது அவருடைய வாழ்கைக்கு மிகவும் பொருந்தும் என்றும் என்னிடமும் ரவியிடமும் அடிக்கடி கூறுவார். ஆனால் தன்னுடைய அப்பாவின் குணங்கள் சுத்தமாகவே இல்லாதவந்தான் ரவி. ரவி மிகவும் பிடிவாதமாக எல்லாவற்றுக்கும் நடந்துகொள்வான். ஒரு பொருள் அவனுக்கு வேண்டும் என்றால், அது கிடைக்கும் வரை அடம்பிடிப்பான். என்னதான் இவனின் குடும்பம் வசதியில்லாத குடும்பமாக இருந்தாலும், வேண்டியவற்றை எப்படியாவது வாங்கிக்கொள்வான். என் பெயர் கதிர். ராமு என்னுடைய நெருங்கிய நண்பன். நாங்கள் மேகமும் வானமும் பொல நண்பர்கள். அவனில்லாமல் நான் இல்லை. நான் இல்லாமல் அவனில்லை. எல்லா நட்பு பொல நாங்களும் சில சமயங்களில் சண்டைபோடுவோம். பெரும்பாலும் எங்களிடையே நடக்கும் சண்டைக்கு காரணம் அவனுடைய பிடிவாதத்தனம். அவன் பிடிவாதமாக நடந்துகொள்வது என்னை கடுப்பாக்கும். ஆனால் நண்பந்தானே என்கிற காரணத்தால் அமைதியாக இருப்பேன். ஒரு நாள், ரவியும் அவனுடைய குடும்பமும் தீபாவளிக்குத் துணி வாங்கச் செல்லும்போது, அவனுடைய கண்களில் படக்கூடாத ஒரு பொருள், அவனுடைய பார்வையை ஈர்த்தன. அது அவனை “வா, வா” என கூப்பிடுவது போல இருந்தது. அவன் உடனே தன்னுடைய அப்பவின் சட்டையை இழுத்து, “அம்மா, அப்பா, எனக்கு அந்த விளையாட்டுக் கருவி வேண்டும்!” என்று அடம்பிடித்தான். ரவியின் அப்பா அந்த பொருளின் மதிப்பைப் பார்த்தார். அவ்வளவுதான்! அவருடைய கண்கள் பிதுங்கின. நெஞ்சுவலியே வந்து விடுவது போலிருந்தது. அவருடைய மனத்திற்கு தெரியும், இதை இப்போது கண்டிப்பாக வாங்கித் தர முடியாது என்று. ஆனால், அவரால் தன்னுடைய மகனிடம் முடியாது என்று சொல்லமுடியவில்லை. “இங்குப்பாருப்பா கண்ணா! இதை நான் உன் பிறந்தநாளுக்கு வாங்கித்தரேன்!” என்று மெல்லிய குரலில் கூரினார். ரவியின் முகம் வாடியது. அவன் முகத்தை தூக்கிவைத்துக்கொண்டான். நீண்ட நேரம் அடம்பிடித்த பிறகு, சரி! அன்று அவன் கோபமாக கூறினான். “ஆனால், நீங்கள் இதை வாங்கியே ஆகனும்!” என்று அடம்பிடித்தான். தன் மகன் இவ்வாறு நடந்துகொண்டதைப் பார்த்து, ரவியின் அம்மா அவனை கண்டித்தார். “பரவாயில்லை விடு,” அன்று ரவியின் அப்பா ரவியின் அம்மாவிடம் கூறினார். பிறகு, மூவரும் அந்த இடத்தைக் காலிச்செய்தனர். ரவியின் அப்பாவிற்குத் தெரியும். அவர் நீண்ட நேரம் வேலை பார்த்தால் ஒழிய ரவிக்கு விளையாட்டுக் கருவியை வாங்கித் தர இயலாது. ஆகையால் தான் பெற்ற மகனுக்காகத்தானே இவ்வளவு உழைக்கிறார், இன்னும் சிறிது கடினமாக உழைப்பதில் ஒன்றும் ஆக போவதில்லை என்று 10 மணி நேரம் பார்த்துக்கொண்டிருந்த வேலையை 12 மணினேரம் பார்க்க ஆரம்பித்தார். அவருடைய மனைவி வேண்டாம் என்று கூறியும் அவர் மறுத்து நீண்ட நேரம் வேலைக்குச் சென்றார். ரவியின் அம்மா ரவியிடம் இந்த விளையாட்டுக் கருவியை வாங்கினால், அவனுடைய அப்பாவுக்கு இன்னும் கஷ்டம் என்று எடுத்து கூறியும் அவன் அந்தக் கருவி வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றான். அவர், ரவியின் பிடிவாத்த்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கமுடியாது என்று எண்ணியபடியே பெருமூச்சு விட்டார். ஒரு வாரம் சென்றது. இரண்டாவது வாரமும் சென்றது. மூன்று வாரங்களாக ரவியின் அப்பா தினமும் நீண்ட நேரமாக தொழிற்சாலையில் வேலை செய்தார். அன்று எதிர்பாராத விதமாக இரவு நேரத்தில் தொலைப்பேசி மணி ஒலித்தது. அதில் ஒருவர், ரவியின் அப்பா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார், சீக்கிரம் கிளம்பி அங்கு வாங்கள் என்று ரவியின் அம்மாவிடம் சொன்னார். ரவியின் அம்மாவிற்கு உலகமே இருட்டியது போல இருந்தது. ரவி அதைக் கேட்டவுடன் அதிர்ச்சியில் ஒன்றும் புரியாமல் ஒரு கணம் திகைத்துப் போய் சிலையாய் நின்றான். பிறகு இருவரும் என்ன ஆகிவிட்டதோ ஏது ஆகிவிட்டதோ என்று அறியாமல் மருத்துவமனைக்கு ஓடோடி சென்றனர். அங்கு மருத்துவர், “உங்களுடைய கனவரின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு காரணம், அவர் தொழிற்சாலையில் நீண்ட நேரம் வேலைப்பார்த்ததே ஆகும். அங்கிருக்கும் கெடுதலான புகைமூட்டம் அவருடைய நுரையீறலைப் பாதித்துவிட்டது.” என்று சொன்னார். உடனே குற்ற உணர்ச்சி ரவியின் மனதைத் தாக்கியது. அவன் மட்டும் பிடிவாதமாக இல்லாவிட்டால் இதெல்லாம் நடந்திருக்காது. “மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்” என்று உலகநீதியில் சும்மாவா சொல்லியுள்ளார்கள். ரவி அழ ஆரம்பித்தான். அவன் தன் அப்பவிற்கு ஒன்றும் ஆகக்கூடாது என வேண்டினான். “நாம் நேசிப்பவர்கள் எல்லாரும் நம்மோடு நிலைத்துவிட்டால், நினைவின் மொழியும் பிரிவின் வலியும் தெரியாமல் போய்விடும்” என்று அவன் படித்தது ஞாபகம் வந்தது. அது போன்று ஒன்றும் ஆகக்கூடாது என அவன் வேண்டாத கடவுள் இல்லை. இனிமேல் பிடிவாதமாக இருக்கக்கூடாது என்றும் இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்றும் முடிவெடுத்தான். அப்போது மருத்துவர் வெளியே வந்து, “கவலைப்படுவது போல இப்போது ஒன்றும் இல்லை! சரிசெய்து விட்டேன். அவர் சிறிது நேரம் உறங்கட்டும். பிறகு நீங்கள் அவரிடம் பேசலாம்,” என்று தெய்வம் போல வந்து கூறிச் சென்றார். அப்போது அடைந்த மகிழ்ச்சி இதுவரை ரவி அடைந்த்ததே இல்லை. “தெய்வங்கள் எல்லாம் தோற்றுப் போகும் தந்தையின் அன்பின் முன்னே!” என்ற பாடல் வரிகள் உண்மையிலையே ரவி அப்போது உணர்ந்தான். என்னதான் ரவி அடம்பிடித்தாலும் அவனின் அப்பா ரவிக்கு எல்லாவற்றையும் செய்துள்ளார். ரவி தன் வாழ்நாள் முழுவதுமே தன் தந்தக்கு நன்றிக்கடன் பட்டுள்ளான்.

No comments: