Friday, November 5, 2021

ஓர் உணவகத்திற்குச் சென்ற நீ, உன் நண்பர்களுக்காகச் சில இடங்களை ஒதுக்கிவைத்துவிட்டு அவர்களது வருகைக்காகக் காத்துக்கொண்டிருந்தாய். அப்போது அவசரமாக வந்த வாடிக்கையாளர் ஒருவர், அவற்றுள் ஒன்றைத் தம் வசமாக்கிக்கொண்டார். அந்தச் சம்பவத்தையும் அதன்பின் நடந்தவற்றையும் பொருத்தமான வர்ணனைகளோடு விளக்கி எழுது

 

RADINKA SHANMUGANATHAN   - 2021 

ரிங்! ரிங்!” என்று என் தொலைபோசி அடித்தது. அழைப்பாளரை கண்டவிடும் என் முகம் ஒரு நொடியில் மலர்ந்து. “ரதின்கா, நானும் கமலாவும் உனக்குப் பிடித்த உணவங்காடிக்குச் சென்று உணவு உண்ண போகிறோம். உனக்கு அங்குள்ள கோழி கறி மிகவும் பிடிக்கும் அல்லவா? நீ எங்களோடு சேர்ந்து சாப்பிட விரும்புகிறாயா?” என்று என் நெருங்கிய தோழி, ஓவியா மறுமுனையிலிருந்து வினவினாள். அவள் சொற்கள் என் காதில் தேன் ஊற்றுவதுபோல் இருந்தது. நான் இருமுறைகூட யோசிக்காமல் அவர்களின் அழைப்பை ஏற்றுக்கொண்டேன். நாங்கள் அனைவரும் உணவங்காடியில் இருபது நிமிடங்களில் சந்திக்கவிருந்தோம். ஆனால் அந்த உணவங்காடி எப்போதும் பழத்தை மொய்க்கும் ஈக்களைப்போல் கூடமாக இருக்கும் என்பதை உணர்ந்து நான் சில நிமிடங்களுக்கு முன்பே உணவங்காடிக்குச் சென்று என் நண்பர்களுக்கு இருக்கைகளை பிடித்து வைக்க தீர்மானித்தேன்.

நான் உணவகத்திற்கு ஒட்டமும் நடையுமாகச் சென்றேன். உணவங்காடிக்குச் சென்றதும் அங்கே இருந்த உணவுப் பொருட்களின் வாசனைகம கம' என்று வீச என் நாவில் எச்சில் ஊரத் தொடங்கியது. அனைத்து கடைகளின் முன் பாம்பைப்போல் நீளமான வரிசைகள் இருந்தது நான் உணவங்காடியின் ஓரத்தில் மூன்று இருக்கைகள் காலியாக இருப்பதைக் கண்ணுற்று விரைந்தேன். நான் ஒரு மேசையில் அமர்ந்து மற்ற இரண்டு இடங்களில் ஒருடிசு' தாளைவைத்தேன். என் நன்பர்கள் வருவதற்கு இன்னும் சில நிமிடங்கள் இருந்ததால் நான் என் கைத்தொலைபோசியை பயன்படுத்த தொடங்கினேன். அப்போது என் தோளை யாரோ தட்டுவதை உணர்ந்து திரும்பினேன். என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. என் முன் என்னுடைய தொடக்கப்பள்ளி தோழி, கல்யாணி நின்றுகொண்டிருந்தாள். ஐந்து வருடங்களிக்கு முன் நானும் கல்யாணியும் நகமும் சதையும் போன்ற இனைபிறியா தோழிகளாக இருந்தோம். ஆனால் தொடக்கப்பள்ளிக்கு பிறகு நாங்கள் இருவரும் வெவ்வேறு உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றதாலும், கல்யாணி வீடு மாறிச் சென்றதாலும் நாங்கள் அதற்குபின் தொடர்புகொள்ளவோ சந்திக்கவோ இல்லை. நாங்கள் இருவரும் அளவளாவத் தொடங்கினோம்.

அப்போது ஓவியாவும் கமலாவும் எங்களை அருகுவதைக் கூட கவனிக்கவில்லை. “ரதின்கா!” என்று அவர்கள் என்னை அமைத்தபிறகுதான் நான் அவர்களை கவனித்தோம். நானும் கல்யாணியும் தொலைபோசி என்னை மாற்றிக்கொண்டபின் கல்யாணி விடைபெற்றுக்கொண்டாள். நான் கமலாவிடமும் ஓவியாவிடமும் என் எதிர்பாராத சந்திப்பைப் பற்றிக் கூறி அவர்களுக்கு இருக்கைகளை கண்டுபிடுத்துவிட்டேன் என்ற நற்செய்தியை பகிர்ந்துகொண்டேன். ஆனால் அதை செவியுற்றதும் அவர்கள் இருவரும் மகிழ்ச்சி அடையாமல் ஒருவரை யொருவர் குழப்பத்தோடு பார்த்தார்கள். நான் திரும்பி பார்த்தபோது நான் கண்ட காட்சி என்னைதிடுக்கிட்டன

மூன்று இருக்கைகளில் ஒரு ஆடவர் உட்கார்ந்திருப்பதைக் கண்டதும் என் முகம் தக்காளி பழத்தைப்போல் சிவந்தது. நான் எந்த சொல்லையும் வாயால் பேச இயலவில்லை. வார்த்தைகள் முட்டிமோத நான் எரிமலையைப்போல் வெடித்து, “ஐயா, உங்களுக்கு கண்கோலாறு ஏதுவும் உள்ளதா? அள்ளது என்டிசு' தாளை கண்டும் அதை பொருட்டடுத்தாமல் இந்த இருக்கையில் அமர்ந்து விட்டீர்களா? நான் பதின்னைந்து நிமிடங்களுக்கு முன்பே உணவங்காடிக்கு வந்து இவ்விடங்களை என் நண்பர்களுக்கு ஒதுக்கிவைக்க வேண்டியிருந்தது என்று தெரியுமா?” என்று அவரை திட்டத்தொடங்கினேன். இக்காட்சியைக் கண்டு கமலாவும் ஓவியாவும் அதிர்ந்து போய்விட்டனர். உணவங்காடியில் இருந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் தன்  உடலை என் வசப்படுத்திக்கொண்டு நான் எழுப்பிய சத்தத்தினால் என்னை எரிச்சலோடு பார்த்தார்கள். அந்த ஆடவர் செய்வதரியாது வாயைப் பிளந்தவாறு இருந்தார்.  அப்போதுதான் நான் மேசையில் வைத்தடிசு' தாள் மின்விசிறியிலிருந்து வந்த காற்றினால் பறந்து தரையில் விழுந்துவிட்டது என்பதையும் அவர் உடல் குறையுள்ளோர் என்பதையும் அவர் கூடல் குறையுள்ளோர் என்பதையும் நான் உணர்ந்தேன்.

நான் அந்த ஆடவரை கடிந்துகொண்டு திட்டினாலும், அவர் நிதாரனமாகவும் எரிச்சலடையாமலும், “ என்னை மன்னித்துவிடு, உன்டிசு தாள்' விழுந்துவிட்டதால் இந்த இருக்கையை யாரும் பயன்படுத்தவதில்லை என்று எண்ணி அதில் அமேர்ந்தேன். அதுமட்டுமில்லாமல் நான் வேலைக்கு செல்ல இன்று சிறிது தாமதமாகிவிட்டதால் நான் அவசர அவசரமாக உணவை வாங்கி உன்னிடம் இந்த இருக்கையை பயன்படுத்துகிறாயா என்பதை கேப்காமல் அதை பயன்படுத்திவிட்டேன். அதற்கு என்னை மன்னித்துக்கொள். ஆனால் என்னுடைய காரணத்தை அறிவதற்கு முன் என் மீது சினங்கொண்டதும் உன்னுடன் வயதில் பெரியவரை கடுமையான சொற்களை பயன்படுத்தி ஏசியதும் தவறான செயலாகும். இப்பழக்கத்தை சிறுவயதிலேயே மாற்றிக்கொள்வது சிறப்பாக இருக்கும்" என்று மன்னிப்பு கேட்டு அறிவுரையும் கூறினார்.

அதை செவியுற்றதும் என் முகம் காற்றுபோன பலுனைப்போல் ஆனது. நான் அனைவருக்கும்முன் வெட்கி தலைகுணியும் நிலை ஏற்பட்டது. நான் உடனடியாக அந்த ஆடவரிடம் என் மன்னிப்பைக்கூறி வெட்கத்தால் கமலாவுடனும் ஓவியாவுடனும் உணவங்காடியைவிட்டு வெளியேறினேன். அப்போது கமலா என்னிடம்

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு"

என்ற திருக்குறளை படித்து என்ன பயன். அதை கற்பதோடு மட்டுமில்லாமல் அவ்வாறு வாழ்க்கை நடத்துவதும் மிகவும் அவசியம். இனிமேல் எல்லா சூழ்நிலைகளிலும் கோபட்பட்டு பேசுவதற்கு முன் சிந்திப்பதை பழக்கமாக்கிக்கொள்என்று கூறினாள். ஓவியாவும் அதை ஆமோதித்தாள். “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு" என்ற தொடர் எத்தனை உண்மை என்பதை அன்றுதான் நான் அனுபவத்தின் மூலம் கற்றுக்கொண்டேன். நான் கமலா மற்றும் ஓவியாவிடம் இன்று நேர்ந்த சமவத்திற்காக மன்னிப்பு கூறி இனிபேசுவதற்கு சிந்தித்து செயல்படுவேன் என்று உறுதி பூண்டேன்.

No comments: