Wednesday, January 25, 2012

இலக்கியமும் அதன் அடிப்படைக் கூறுகளும்

மொழி

மனிதன் பேசுவதற்கும் எழுதுவதற்கும் படைத்துக்கொண்ட மொழி இல்லை என்றால், இன்றைய நாகரிக வளர்ச்சியே இல்லை. உலகின் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் அடிப்படையான மொழியை மிகமிகச் சிறந்த நாகரிகக் கருவி எனலாம். அத்தகைய மொழியை, மொழியின் சொற்களையே பயன்படுத்தி அமைப்பது இலக்கியம். ஆகையால், இலக்கியம் சிறந்த ஒரு கலை ஆகும். ஆனால், இலக்கணம் என்பது மொழியின் அமைப்பையும் சொல்லின் அமைப்பையும் பற்றிப் பேசுவது ஆகும்.
ஆகையால், இலக்கியமும் இலக்கணமும் வேறு வேறு.

செய்தித்தாள் இலக்கியம் ஆகுமா?

செய்தித்தாளில் இடம்பெறும் தகவல் ஒரு நாளுக்கு உரியது. அது அடுத்த நாளுக்குப் பெரிதும் பயன்படுவதில்லை. ஆனால், நூல்கள் பல ஆண்டுகள் மக்கள் மத்தியில் வாழ்கின்றன. பிறகு அழிகின்றன. ஆனால், அத்தகைய நூல்களுள் சில அழிவதே இல்லை. அந்தச் சில தான் இலக்கியங்களாகப் போற்றத் தக்கவை. அத்தகைய இலக்கியங்கள் தமிழில் எண்ணற்றவை உள்ளன.


இலக்கியம் செய்யுளிலோ உரைநடையிலோ அமையலாம்:
இலக்கியம் செய்யுள் வடிவமாகவும் அமையும். உரைநடையாகவும் அமையும். இலக்கியம் செய்யுள் வடிவில் அமைந்தவைக்கு எடுத்துக்காட்டாக, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலியவ்ற்றைக் குறிப்பிடலாம். ஆனால், தமிழில் உள்ள நாவல்கள், சிறுகதைகள் ஆகியவை அனைத்தும் உரைநடையில் அமைந்த இலக்கியத்துக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

செய்யுள், பாட்டு , உரைநடை ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடு:
பாட்டு,செய்யுளுக்கு மாறானது அல்ல. உணர்ச்சியும் கற்பனையும் அமைந்த செய்யுள் (Verse) எல்லாம் பாட்டு (Poetry) எனத் தகும். செய்யுள் உரைநடைக்கு மாறானது. ஏனென்றால் செய்யுளுக்கு எதுகை, மோனை, யாப்பு ஆகியவை அவசியம். உரைநடைக்கு அவை தேவை அல்ல.

இலக்கியத்துக்கு அடிப்படை அம்சங்கள்:
இலக்கியத்துக்கு  உணர்ச்சி, கற்பனை, வடிவம், கருத்து, என்னும் நான்கு கூறுகள்  முக்கியம். இதையே இலக்கியத்தின் நான்கு பக்கங்கள் உண்டு என்றும் கூறுவர். அவற்றுள்  முதலில் உணர்ச்சி பற்றிப் பார்ப்போம்.






உணர்ச்சி:
இலக்க¢யம் படைப்பவர் ஒரு சம்பவத்தை உணர்ச்சி பூர்வமாகப் படைக்கிறார். அவ்வாறு படைக்கும்பே¡து கதாப்பாத்திரத்தில் அந்த உணர்ச்சியைச் சிறப்பாக அமைத்துத் தருகிறார். உதாரணமாக, ஓர் எழுத்தாளர் ஒருதாய் தன் குழந்தையை இழந்து துயரத்தில் வாடுவதைப் பார்த்தால் அதை அப்படியே கதையாகவோ, கவிதையாகவோ வடித்துத் தருக¢றார். பிறகு, ஒரு வாசகன் அந்த இலக்கியத்தைப் படிக்கும்போது அந்தப் பாத்திரம் அனுபவிக்கும் உணர்ச்சியோடு ஒன்றித் தானும் அந்த உணர்ச்சியை அடைகிறான். அவ்வாறு வாசகன் ஒன்றும்போது இலக்கியம் க¡லத்தை வென்று வாழ்கிறது. மகிழ்ச்சி, வேடிக்கை, மனநிறைவு முதலிய உணரச்சிகளைக்கொண்ட இலக்கியத்தைவிட அச்சம், துயரம், கவலை முதலிய உணர்ச்சிகளை உடைய இலக்கியமே மக்களால் விரும்பிப் படிக்கப்படுகிறது.

அடுத்ததாக இலக்கியத்துக்குத் தேவையான கற்பனை குறித்துக் காண்போம்

கற்பனை: எழுத்தாளர்கள் தாம் பார்த்ததையோ கேட்டதையோ அனுபவித்ததையோ அவ்வாறே எழுதுவதில்ல; பாடுவதில்லை. அதில் சிறிது குறைத்தும் சிறிது கூட்டியும் கதையாகவோ கவிதையாகவோ படைக்க¢றார்கள். எழுத்தாளர்கள் தமது கற்பனை சிறப்பாக அமைய உவமை, உருவகம் முதலியற்றைப் பயன்படுத்தி எழுதுகிறார். எடுத்துக்காட்டாகப் பின்வரும் கற்பனையைப் பாருங்கள்.

மழைக்காலத்தில் திரும்பி வருவதாகக் கூறிச் சென்றான் ஒரு காதலன். மழைக்காலம் தொடங்கிவிட்டது. அதற்கு அடையாளமாக முல்லைக்கொடிகளில் அரும்புகள் தோன்றிவிட்டன. ஆயினும், அவன் வரவில்லை. முல்லை அரும்புகள் நிறைந்த முல்லைக்கொடியைப் பார்க்கிறாள் காதலி. கார்காலம் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடுவதாக அதாவது ஏளமாகச் சிரிப்பதாக உணர்கிறாள் காதலி. சிரிக்கும்போது பற்கள் தெரியும் அல்லவா? சிரிக்கும் கார்காலத்தின் பற்களாக அந்த முல்லைக்கொடியின் வெள்ளைநிற அரும்புகளைக் கற்பனை செய்கிறார் கவிஞர். இதோ அந்தப்பாடல்,




இளமை பாரார் வளநசைஇச் சென்றோர்
இவணும் வாரார்
எவண ரோவெனப்
பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்
தொகுமுகை இலங்கெயி றாக
நகுமே தோழி நறுந்தண் காரே.
( நூல் - குறுந்தொகை - புலவர் : ஒக்கூர் மாசாத்தியார்.)
இனி இலக்கியத்துக்கு அடிப்படையான கருத்துக் குறித்துக் காண்போம்.


கருத்து: ஒவ்வொரு எழுத்தாளரும் தம் படைப்பின் வழியாகச் சமுதாயத்துக்கோ ஒரு தனிமனிதனுக்கோ ஏதோ ஒரு கருத்தையோ பல கருத்துகளையோ சொல்ல விரும்புகிறார். அதனால்தான் அவர் இலக்கியத்தைப் படைக்கிறார். மேலே கொடுக்கப்பட்டுள்ள பாடலில் ஒரு காதலன், காதலிக்குச் சொன்ன வாக்கைக் காப்பாற்றாதபோது, அக்காதலியின் இக்கட்டான நிலையைச் சித்தரிப்பதன் மூலம் ஆண்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். அவ்வாறு அவன் அதைக் காப்பாற்றாதபோது, அவனை நம்பிய பெண்ணின் ந¢லை சமுதாயத்தில் பலரும் பார்த்துச் ச¢ரிக்கும்படி ஆகிவிடும். அவளின் நிலை கவலைக்கு உரியதாகிவிடும் என்பதைப் படிப்பவர் மனத்த¢ல் பதிய வைக்கிறார்.

அடுத்ததாக இராமணயத்தை எடுத்துக்கொண்டால் தந்த சொல் மிக்க மந்திரமில்லை. சகோதரபாசம், தர்மமே வெல்லும் அதர்மம் அழியும், பிறர் மனைவியைக் கவர்தல் கூடாது என்று பல்வேறு கருத்துகள் வலியுறுத்தப்படுகின்றன. ஆகையால், இலக்கியத்தின் நோக்கம் படிப்பவர்க்கு இன்பம் தருவதோடு அறக்கருத்துகளை வலியுறுத்துவதும் ஆகும் என்பது தெளிவு.

நிறைவாக இலக்கிய வடிவம் குறித்துக் காண்போம்:

வடிவம்: உணவைப் பரிமாற நினைக்கும் தாயார், அதை வட்டமான தட்டிலோ, ஓவல் வடிவிலான தட்டிலோ, குழியான பீங்கான் கோப்பையிலோ, வ¡ழை இலையிலோ பரிமாறுகிறார் இல்லையா? அதுபோல எழுத்தாளரும் தாம் பார்த்த ஒரு சம்பவத்தை, தம்முடைய அனுபவத்தை, சொல்ல நினைக்கும் கருத்தைக் கவிதையாகவோ, சிறுகதையாகவோ, நீண்ட நாவலாகவோ, நாடகமாகவோ படைத்துத் தருகிறார். அது எழுத்தாளரின் விருப்பம். ஆக இலக்கியம் கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் என்னும் எந்த வடிவத்திலும் பிறக்கலாம் என்பதுதான் உண்மை. (இப்பாடத் தயாரிப்புக்குத் துணை நின்ற நூல்: இலக்கியத் திறன். டாக்டர் மு. வரதராசன்)
மாணவர் ஒப்படைப்பு:

1.இப்பாடம் தொடர்பான உனது புரிந்துணர்வை வெளிப்படுத்தும் வகையில் ஒரு மன
வரைபடம் தயார் செய்து ஒப்படைக்கவும்.
                                                     (அல்லது)
2. இப்பாடம் வழி நீ புரிந்துகொண்ட கருத்துகளை ஒன்றின் கீழ் ஒன்றாக ( Point form)
எழுதி ஒப்படைக்கவும்.

3. இறுதியில் இப்பாடம் குறித்த உமது கருத்துகளைக் குறிப்பிடவும். வேறு
     எதுபற்றி அறிந்துகொள்ள விருப்பம் என்பதையும் குறிப்பிடவும்.

Sunday, January 8, 2012

செல்லக் கிளிகளாம் பள்ளியிலே

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்




இந்தப்பாடலின் வழிக் கவிஞர், சமுதாயத்துக்கு எவற்றை வலியுறுத்த விரும்புகிறார்؟
அவற்றுள் நீங்கள் எவற்றை ஒத்துக்கொள்வீர்கள்؟ ஏன்؟

தாய்நாட்டுப் பற்று



பாடலைக் கருத்தூன்றிக் கேளுங்கள்.
பாடலில் இடம்பெற்றுள்ள எந்தக் கருத்துகள் மிகவும் முக்கியம் என்று நினைக்கிறீர்கள்؟ ஏன்؟
உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.