Saturday, November 13, 2021

சிங்கப்பூர் இளையர்களுள் பெரும்பாலோர் பரிவுணர்வு மிக்கவர்கள். விவாதிக்க - ஸ்ரேயா (303) 2021

ஸ்ரேயா (303) 2021 ‘அன்பிருந்தால் ஆகாததும் ஆகும்.’ இன்றைய பரபரப்பான, போட்டித்தன்மை மிகுந்த உலகத்தில், பரிவுணர்வு காண்பது அரிது. பொதுவாக, மனித இனத்தினர், தங்களது சொந்த செயலுகளில்தான் கவனம் செலுத்தி, பிற மனிதர்களுக்கு உதவிக் கரம் நீட்டுவதில்லை; நீட்டும்பொழுது, அவர்கள் வழக்கமாக முழு ஈடுப்பாட்டுடன் கைகொடுப்பதில்லை. இது வருந்தத்தக்க நிலைதான். ஆனால், இந்நிலைக்கும் அடிமையாகாத குழு ஒன்று இருக்கின்றது: சிங்கை நாட்டின் இளையர்கள். பெற்றோரின் அரவணைப்புடனும், பள்ளி ஆசிரியர்களின் அறிவுரை மற்றும் ஆதரவுடனும், அவர்கள் தன்னலமற்ற, பரிவுணர்வுடையவர்களாகத் திகழ்கின்றனர். சக மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மட்டுமின்றி, முன்பின் அறிமுகமில்லாதவர்களுக்கும் சமுதாய உறுப்பினர்களுக்கும் அன்றும் இன்றும் உதவிக் கரம் நீட்டி, தங்களது பரிவுணர்வை வெளிக்காட்டுகின்றனர்; சமூகத்தை மேன்மையடையச் செய்கின்றனர். முதலாவதாக, சிங்கப்பூர் இளையர்கள் தங்களது சக இளையர்களுக்கும் மாணவர்களுக்கும், பல்வேறு அம்சங்களிலும் பல்வேறு வகைகளிலும் உதவுகின்றனர். அவர்கள், பள்ளியின் ஏட்டுக்கல்வியென்ற அம்சத்திலும், உடல்நலம் மற்றும் மனநிலையென்ற அம்சத்திலும், வெவ்வேளு வகைகளில் கைகொடுக்கின்றனர். உதாரணமாக, வயதில உயர்ந்த மாணவர்கள், வயதில் குறைந்த மாணவர்களுக்குப் பாட ஐயங்களுக்குப் பதிலளித்து, புதுமையான கருத்துகளை அவர்களுக்கு விரிவாக விளக்கி கூறுவதும் உண்டு. குறிப்பாக, இது மாணவர்களின் இணைப்பாட நடவடிக்கை குழுக்களில், ஓய்வு நேரத்தின்போது காணலாம். அதுமட்டுமல்லாமல், இளையர்கள் ஒருவரொருவருடைய மனநிலையின் மேல் அதிக அக்கறை செலுத்துவதையும் காணலாம். பள்ளித் தேர்வுக் காலத்தின்போது, சில மாணவர்கள், குழுக்களாகச் சேர்ந்து படித்து, ஒருவரொருவருக்கு ஆதரவு அளிக்கின்றனர். வகுப்புகளிற்குள், மாணவர்கள் சிறு சிறு நொறுக்குத்தீணிகள் அல்லது மிட்டாய்களை வாங்கி, சக மாணவர்களோடு பகிர்ந்து, ஆதரவு அளிக்கின்றனர். அவர்கள், சக மாணவர்களின் மன உளைச்சலைக் குறைக்கும் நோக்கத்துடன் இம்முயற்சிகளை வழக்கமாக எடுக்கின்றனர். இவற்றின் மூலம், இளைஞர்கள் எப்பொழுதுமே தங்களது சக மாணவர்களின் மீது அக்கறை கொள்கின்றனர் என்பதையும், அதனால் பரிவுணர்வு மிக்கவர்கள் என்பதையும் காண முடிகின்றது. இரண்டாவதாக, இளைஞர்கள், பொதுவிடங்களில் இருக்கும் முன்பின் அறிமுகமில்லாதவர்களுக்கும், முடிந்தவரை பரிவுணர்வை வெளிகாட்டுகின்றனர், ஆம், சில சமயங்களில், இளைஞர்கள் உதவிக் கரம் நீட்ட தயங்குகின்றனர். ஆனால், பெரும்பாலான இளைஞர்கள், ‘இளங்கன்று பயமறியாது’ என்பது போலவே தாமதமின்றி, வினாடியைக்கூட விரயமாக்காமல் மற்றவர்களுக்கு உதவியளிக்கின்றனர். உதாரணமாக, பல இளைஞர்கள் – குறிப்பாக இளம் வயதினர் – பொது இடங்களில் நாற்காலியில் அமரும்போது, முதியவர் அல்லது கற்ப்பணி பெண்ணைக் காணும்போது, தயக்கமின்றி தங்களது இருக்கையை விட்டுகொடுக்கின்றனர். ஓர் இடத்திற்குத் தாமதமாகச் செல்லும்போதும், அவர்கள் ஓர் அறையின் கதவை மற்றவர்களுக்குத் திறந்து வைத்து, உள்ளே வர அனுதிப்பர். முதியவர்களைக் கைப்பற்றி சாலையைக் கடக்க உதவுகின்றனர். இச்செயல்களிலிருந்து, இளைஞர்கள், தங்களது நலனில் மட்டும் அக்கறை கொள்ளாமல், மற்றவர்களைக் கருதியும் செயல்படுகின்றனர் என்பதைக் காண முடிகின்றது. ஆம், முற்காலத்தில், இச்செயல்களைக் காண்பது அரிதாக இருந்தது, எண்ணிக்கையிலும் குறைந்ததாக இருந்தது. ஆனால், காலச்சக்கரம் உருண்டோட, அதிகமான இளைஞர்கள், பொதுவிடங்களிலும் தேவைப்படும்போது கைகொடுக்கத் தொடங்குகின்றனர். பொதுவிடங்களிலும் உதவிக் கரம் நீட்ட பெருமளவு துணிவு இருக்க வேண்டும், அல்லவா? ஆகையால், இதிலிருந்து, இளைஞர்களுக்குப் பெருமளவில் பரிவுணர்வு இருக்கின்றது என்பதை அறிய முடிகிறது. மூன்றாவதாக, இளைஞர்கள் பல்வேறு வகைகளில் சமூகத்திற்குத் திருப்பிக் கொடுக்கின்றனர். இதை சிறு வயது மற்றும் பதின்ம வயதினரிடம் காண முடியும் தணித்துவமான பண்பாகும். சிறு வயதிலிருந்தே, இளைஞர்கள் பள்ளியால் கட்டாயப்படுத்தப்பட்ட தொண்டூழிய நடவடிக்கைகளில் முழு மனதோடு ஈடுபடுவதனால், அவர்களது மனதில், மற்றவர் மேல் ஒரு வகையான அன்பும் அக்கறையும் மலர்கின்றன. அதனால், உயர்நிலை பள்ளியில் பயிலும்போது, பல மாணவர்கள் சொந்தமாகவே பள்ளியால் அளிக்கப்பட்ட தொண்டூழிய வாய்ப்புகளையெடுத்து, சமூகத்தை மேம்படுத்தும் வழிகளில் உதவுயாற்றுகின்றனர். அதுமட்டுமல்லாமல், சிலர் தற்முயற்சியெடுத்து, சொந்த தொண்டூழிய குழுக்களையும் (SVIA) தொடங்கி, அனாதப் பிள்ளைகள், முதியவர்களுக்குச் சேவையாற்றுகின்றனர். சிலரோ, கோவிட்-19 ஏற்பட்டபோது, சொந்த தொண்டூழிய அமைப்புகளையும் தொடங்கி, பொதுமக்களையும் அவற்றில் ஈடுபட செய்யும் வகையில் தொழிலாளர்களுக்கும், அவதிப்பட்டவர்களுக்கும் சேவையாற்றினர். இவற்றின் மூலம், இளைஞர்கள் சமூகத்தை மேம்படுத்தவும், அவதி்ப்படுபவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் பெருமுயற்சிகளையெடுத்து, தங்களது பரிவுணர்வைத் தெள்ளத்தெளிவாகக் காட்டுகின்றர். இருந்தும், சிலரோ, போட்டித்தன்மை மற்றும் விறுவிறுப்பான வாழ்க்கை முறையின் தாக்கத்தினால், இளைஞர்கள் தங்களது பள்ளி படிப்புகளில்தான் அதிக கவனம் செலுத்தி, மற்றவர்களின்மீது அக்கறை செலுத்துவதில்லை என்கின்றனர், மேலும், மற்றவர்களுக்கு உதவியளிக்கும்போது, ஒரு வகையான பயன் அவர்களுக்குப் பெற வேண்டும் என்ற சுயநலமான மனநிலையோடு செயல்படுகின்றனர் என்று கூறுவர். ஆம், சில இளையர்கள், துரதிர்ஷ்டவசமாக இம்மனநிலையோடு செயல்படுகின்றனர். இவ்வுலகத்தின் இயல்புதான் போட்டித்தன்மையும் அவசரமும் — ஆகையால், அவற்றின் இறுக்கமான பிடியைத் தவிர்ப்பது மிகவும் கஷ்டமானது என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்ற கருத்தாகும். ஆனால், இது சில இளைஞர்களின் நடப்புதான். பெரும்பாலான இளைஞர்கள், போட்டித்தன்மை மற்றும் பரபரப்பைப் பொருட்படுத்தாமல், மனிதநேயமுடைய மனப்போக்கோடு செயல்படுகின்றர். சில சமயங்களில், சுயநலத்திற்கு அடிமையாகிவிடுகின்றனர்; ஆனால், பெரும்பாலானோர், மற்றவர்களைக் கருத்தில் கொண்டு செயல்படுவதன் முக்கியத்துவத்தை அறிந்திருக்கின்றனர். தங்களது நேரம் பொன் போல் இருந்தாலும், மற்றவர் மேல் பரிவு செலுத்தி, அவர்களது மலர்ந்த முகங்களைக் காண்பது விலைமதிப்பற்றது என்பதை உள்வாங்கிக்கொண்டிருக்கின்றர். ஏனெனில், இளைஞர்கள் பெரும்பாலானோர், தாங்கள் முடிந்தவரை எப்பொழுதும் பரிவுடனும் அக்கறையுடனும் செயல்படுகின்றனர். இன்றைய இளைஞர்கள், நாளைய தலைவர்கள். இளைஞர்கள் போட்டித்தன்மையைப் பொருட்படுத்தாமல் சக மாணவர்களுக்கு உதவியளித்து, முன்பின் அறிமுகமில்லாதவர்களுக்குத் துணிவோடு பொதுவிடங்களில் உதவியளித்து, சமூகத்தையும் சமூகத்தினரது வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்த உதவியளித்து, தங்களது மனதில் வேரூன்றியிருக்கும் பரிவுணர்வைத் தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர். ஆகையால், வண்ண வண்ண பூக்களைப் போல் அமையும் இளைஞர்கள், தோட்டமாக இருக்கும் சிங்கை நாட்டை அழகப்படுத்தியுள்ளனர், அதற்கு உயிரளித்துள்ளனர். ‘ஒழுக்கம் எய்துவர் மேன்மை’ என்பதகேற்ப, இளைஞர்களின் பரிவுணர்வு, நாட்டை மேம்படுத்துவதோடு, இளைஞர்களின் மனதையும் மேம்படுத்துகின்றது. தொடர்ந்து எதிர்காலத்திலும் வரும் சிங்கப்பூர் இளைஞர்கள், இன்றைய இளைஞர்களைப் போலவே பரிவணர்வு மிக்கவர்களாகத் திகழ்வார்கள் என்பதில் ஐயமில்லை.

No comments: