Friday, November 19, 2021

சிங்கப்பூரின் குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள விளையாட்டு வசதிகள், மக்கள் உடல் ஆரோக்கியத்தோடும் சமூக நல்லிணக்கத்துடனும் வாழ உதவியாக உள்ளன. கருத்துரைக்க.

ஷ்ரேஸ்டா சுரேஷ - 207 - 2021 “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்று நாம் முன்னோர்கள் கூறியுள்ளனர். நாம் எப்போதும் ஒரு சமுதாயத்தில் ஒன்றுகூடி வாழ்ந்தால்தான் நன்மைகளை அடைய முடியும். சமூகம் என்பது ஓர் இயந்திரம் போன்றது. இயந்திரத்தில் ஒரு பகுதி பாழைடைந்துவிட்டாலும் அல்லது நின்றுவிட்டாலும் இயந்திரத்தால் நன்றாக இயங்க முடியாது. அது போலவே சமூகத்தில் எல்லோரும் சண்டை சச்சரவு இன்றி ஒற்றுமையாக வாழ்ந்தால்தான் சமுதாயமும் நன்கு இயங்கும். இதை ஒட்டியே நம் சிங்கப்பூர் அரசாங்கம் குடியிருப்பு பேட்டைகளை அமைத்துள்ளனர். வெவ்வேறு மக்களுக்கு நன்மை அடையும் வகையில் வசதிகளை ஆமைத்துள்ளனர். மேலும் இவை வெவ்வேறு மக்களை ஒன்றினணந்து வாழ வைக்கின்றது. சிங்கப்பூர் குடியிருப்பு பேட்டைகளில் உள்ள விளையாட்டு வசதிகள் மக்கள் ஆரோக்கியத்தோடும் சமூக நல்லிணைக்கத்தோடும் வாழ எப்படி உதவியாக உள்ளது என்பதை இனிக்காண்போம். நமது வாழக்கையில் உடற்பயிற்சி செய்வது மிக முக்கியம். உடற்பயிற்சி செய்யும்போதுதான் நம்மால் சுறுசுறெப்பாக இயங்க முடியும். நமது சிங்கப்பூர் அரசாங்கம் எப்போதும் நமது நலனைக் கருதிதான் முடிவுகள் எடுக்கும். அதனால் அவர்கள் மக்களின் அத்தியவசமான உடற்பயிற்சியை செய்வதற்காக பல வசதிகளை அமைத்துள்ளனர். முதலாவதாக எல்லா சிங்கப்பூர் குடியிருப்பு பேட்டைகளில் குறைந்தது மூன்று விளையாட்டு கூடங்களாவது இருக்கும். இவை சிறுவர்களை ஈர்க்கும் வகையாக உள்ளன. இந்த விளையாட்டு கூடங்களில், சருக்கு, கல் ஏறுதல் (rock climbing) போன்ற விளையாட்டு வசதிகள் உள்ளன. இவை பிள்ளைகளை ஓடி ஆடு விளையாட செய்கின்றன. மேலும், இவ்விளையாட்டு கூடங்கள் குடியிருப்பு வட்டாரங்களுக்கு அருகிலேயே உள்ளதால் அடிக்கடி வந்து நண்பர்களோடு விளையாட சிறுவர்கள் தவறுவதில்லை. “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்பதற்கு ஏற்ப, சிறுவயதிலிருந்தே பிள்ளைகளை சுறுசுறுப்பாக விளையாட விளையாட்டு கூடங்கள் ஊக்குவிப்பதால், எப்போதும் சுறுசுற்ப்பாக இருக்கம் பழக்கத்தை அவர்களிடம் புகட்டுகிறது. சிறுவர்கள் மட்டும் ஓடி ஆடி விளையாடினால் போதாது. ஆடவர்களும் முதியோர்களும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நோய் வயதை பார்ப்பதில்லை. அதனால் எல்லா வயதினரும் உடற்பயிற்சி செய்வது இன்றிமையாததாகும். பெரியவர்களுக்கும் விளையாட்டு வசதிகள் உள்ளன. எல்லா குடியிருப்பு பேட்டைகளிலும், “ஆக்டிவ் ஸ் ஜூ” கூடங்கள் இருக்கின்றன. அவை ஆடவர்களுக்கு தகுந்த உடற்பயிற்சி வசதிகளை கொண்டுள்ளது. இவற்றில் உடற்பயிற்சி செய்வது இலவசம் என்பதால் தினமும் பல ஆடவர்கள் அங்கே உடற்பயிற்சி செய்வதை நாம் காணலாம். இவை குடியிருப்பு வட்டாரங்களுக்கு அருகிலேயே இருப்பதாலும் உடற்பயிற்சி செய்ய அதிக நேரம் வீண்டிப்பதைப் பற்றி ஆடவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. மூத்தவர்களுக்கும் தனியாக பூங்காக்களில் விளையாட்டு வசதிகள் உள்ளன. இவை மூத்தவர்களுக்கு ஏற்றவாறு எளியமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதற்கு உதவுகின்றன. மேலும் பூங்காக்களில் நிறைய மரங்ளும் செடிகளும் நடப்படுகின்றன. இது பூங்காவில் சுத்தமான காற்றை சுவாசிக்க உதவுகின்றது. இவற்றை தவிர்த்து, குடியிருப்பு பேட்டைகளில் ஆங்காங்கே பூப்பந்து கூடம், காற்பந்து திடல், கூடைப்பந்து கூடம் என பல அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை எல்லா வயதினரையும் பயன்படுத்துவதை காண்கிறோம். இவற்றில் பிள்ளைகள் மற்றும் இளைஞர்கள் கூடைப்பந்து, அல்லது காற்பந்து விளையாடுகிறார்கள். ஆடவர்கள் வந்து அங்கே மிதிவண்டி ஓட்டுவதையும் காணலாம். மேலும், அந்த இடத்தில் முதியோர்களுக்கு தாய்ச்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இவை எல்லாம் எல்லா வயதினரும் உடற்பயிற்சி செய்ய ஊக்குவிக்கின்றன. “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பதற்கு ஏற்ப, சிங்கப்பூர் மக்கள் அரசாங்கம் அமைத்துள்ள விளையாட்டு வசதுகளை பயன்படுத்தினால் தங்களின் ஊடலை சீராக வைத்துகொள்ள முடியும். சிங்கப்பூரில் பத்தில் மூன்று பேராவது உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர் என்று புள்ளி விவரம் கூறுகின்றது. இப்பிரச்சனையை தீர்க்க நமது அரசாங்கம் அயராது உழைக்கின்றது என்பதை குடியிருப்பு பேட்டைகளில் உள்ள விளையாட்டு வசதிகள் தெள்ளதெளிவாக காட்டுகின்றன. மக்களின் ஆரோக்கியத்தையும் நலத்தையும் விளையாட்டு பொருட்கள் மூலம் பாதுகாப்பத்தோடு அவை மக்களின் இடையே இருக்கும் பிணைப்பையும் வலுவாக்கிறது. சிங்கப்பூரில் பல இனத்தவர்கள் வாழ்கின்றன்ர். பல இனத்தவரை சேர்ந்த சமுதாயத்தில் நிச்சயமாக வெவ்வேறு விஷயங்களில் வேறுபாடுகள் இருக்கும். ஆனால் அதையும் மீறி சிங்கப்பூர் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். “இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிகலூக்கும் தன்மை யார்” என்பது திருக்குறள். அதற்கு ஏற்ப நமது வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு ஒற்றுமையுடன் வாழ்ந்தால்தான் சண்டே சச்சரவு இல்லாமல் வாழலாம். இதை அடைய சிங்கப்பூரின் குடியிருப்பு பேட்டைகளில் உள்ள விளையாட்டு வசதிகள் உதவுகின்றன. குடியிருப்பு பேட்டைகளிலுள்ள வசதிகள் அனைத்தும் அங்கு வாழும் மக்களால் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. அதனால், ஒரே நேரத்தில் பலரும் ஒன்றுகூடி விளையாடி, உடற்பயிற்சி செய்து மகிழ விளையாட்டு வசதிகள் உதவுகின்றன. விளையாட்டு கூடங்களில், பல இனத்தவரை சேர்ந்த சிறுவர்கள் வந்து ஒன்றாக விளையாடுகிறார்கள். இது சிறுவயதிலிருந்தே சிறுவர்களுக்கு மற்ற இன நண்பர்களை வைத்துக்கொள்ள ஊக்குவிக்கிறது . மேலும் விளையாட்டு கூடங்களிலுள்ள வசதிகளை சிறுவர்ள் பகிர்ந்துகொள்ள வேண்டும். அதனால் இது சிறுவர்களிடம் எதையும் மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டு ஒன்றினைந்து வாழ்வதைப்பற்றி கற்றுக்கொடுக்கிறது. முதுமை காலத்தில், முதியவர்கள் தனிமையில் வீட்டிலேயே இருப்பார்கள். இதை தவிர்ப்பதற்குதான் மூத்தவர்ளுக்கும் விளையாட்டு வசதிகள் உள்ளன. அங்கே மற்ற முதியவர்களைக் காணும்போது அவர்களும் நட்பு கொள்கின்றனர். “முகநக நட்பது நட்பென்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு” என்ற திருக்குறளுக்கு ஏற்ப மனதால் நேசித்தால் எந்த வயதிலும் நட்பு கொள்ளலாம். மேலும் விளையாட்டு வசதிகளில் மற்ற முதியவர்கள் துடிப்புடன் உடற்பயிற்சி செய்வதைப் பார்த்து அவர்களுக்கும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகின்றது. மேலும், முதியவர்களுக்கான விளையாட்டு பகுதியில் அங்கிருக்கும் வசதிகளை பயன்படுத்தி எவ்வாறு உடற்பயிற்சி செய்வது என்ற வழிமுறைகளை தமிழ், மலாய், சீனம், ஆங்கிலம் ஆகிய எல்லா மொழிகளிலும் எழுதியிருப்பார்கள். இது வெவ்வேறு இனத்தவர்கள் வந்து உடற்பயிற்சிகளைச் செய்ய ஊக்குவிக்கின்றது. வேறு இனத்தவரை சேர்ந்த முதியவர்கள் ஒன்றாக உடற்பயிற்சி செய்ய செல்வதை நாமும் நாள்தோறும் சமூதாயத்திலும் செய்திகளிலும் காண்கிறோம். வெவ்வேறு இனத்தவர்களை சேர்ந்தவர்களை ஒன்றுகூடி வாழ வைப்பதோடு, சிங்கப்பூரின் குடியிருப்பு பேட்டைகளில் உள்ள விளையாட்டு வசதிகள் பல வயதினரையும் ஒன்றிணைக்கிறது. ஒரே இடத்தில், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு கூடங்கள் பூங்காக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதனால் ஒரே நேரத்தில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒன்றாக பொழுதைக் கழிக்கின்றனர். குடும்பங்களாக வந்து விளையாட்டு வசதிகளை பயன்படுத்த ஊக்குவிக்கின்றது. குடும்பங்களாக வந்து இவ்விளையாட்டு வசதிகளை பயன்படுத்தும்போது, குடும்பங்களிடையே நல்லுறவு ஏற்படுகின்றது. அண்டைவீட்டாருடன் இருக்கும் உறவை மேம்படுத்துகிறது. இவை எல்லாம் சமூக நல்லினக்கத்தை மேம்படுத்த உதவுகின்றன. இது நம் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு துணைபுரியும். ஒன்றிணைந்த சமூதாயம் இருக்கும்போது நாடும் சீராக இயங்கும். ஆனால் சிங்கப்பூரின் குடியிருப்பு பேட்டைகளில் உள்ள வசதிகளை எல்லோரும் பயன்படுத்துவதில்லை. பரபரப்பு மிகுந்துவிட்ட வாழ்க்கை சூழலில் எல்லோரும் தங்களின் வேலைகளில் மும்மரமாக இருக்கின்றனர். பிள்ளைகள் பள்ளி வேலையினாலும் துணைப்பாடத்திறாலும் மற்ற பிள்ளைகளோடு விளையாட நேரம் இருப்பதில்லை. பெற்றோர்க்கும் அலுவலக வேலையுடன் இருக்கிறார்கள். வேலைக்கும் வீட்டிற்கும் செல்வதற்கே நேரம் உள்ளது.”நேரம் பொன் போன்றது” என்று கூறிவிட்டு எல்லோரும் வேலை செய்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதெல்லாம் வாரத்தில் ஐந்து நாட்களுக்கு மட்டுமே. வார இறுதி நாட்களின்போது, குடும்த்தோடு மற்றும் நண்பர்களோடு குதூகலமாக விளையாட்டு வசதிகளை பயன்படுத்தி நேரத்தை கழிக்கின்றனர். மேலும் இக்காலக்கட்டத்தில், உடல் நலத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் அதிக விழிப்புணர்வு இருப்பதால் பலர் விடுமுறைகளில் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு சிங்கப்பூரின் குடிருப்பு பேட்டைகளில் உள்ள விளையாட்டு வசதிகளை பயன்கடுத்துகிறார்கள். நேரம் கிடைக்கும்கோது நண்பர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பலர் அண்டைவீட்டார்களிடனும் நண்பர்களுடனும் அடிக்கடி சந்தித்து விளையாடுவதையும் காண்கிறோம். “சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்” என்பதை நம் முனைனோர்கள் குறியுள்ளனர். அதற்கு ஏற்ப, சமூதாயத்தில் வாழும் மக்கள் தானாகவே ஆரோக்கியத்தோடு பிறருடன் ஒன்றிணைந்து வாழ மாட்டார்கள். அவர்கள் குடியிருக்கும் இடம், அவர்களை ஒன்றுப்படுத்தும் வகையாக இருக்க வேண்டும். இதை அறிந்த நமது சிங்களப்பூர் அரசாங்கம் விளையாட்டு வசதிகளின் மூலம் மக்களை ஆரோக்கியத்தை கடைப்பிடிக்கவும் சமூக நல்லிணக்கத்தோடு வாழவும் ஊக்குவிக்கின்றது. இவை சமுதாயத்தை வலிமைப்படுத்தி, சந்தோஷமான வாழ்க்கையை சிங்கப்பூர் மக்களுக்கு அமைத்துக் கொடுக்கின்றது.

No comments: