Friday, November 5, 2021

ஓர் உணவகத்திற்குச் சென்ற நீ, உன் நண்பர்களுக்காகச் சில இடங்களை ஒதுக்கிவைத்துவிட்டு அவர்களது வருகைக்காகக் காத்துக்கொண்டிருந்தாய். அப்போது அவசரமாக வந்த வாடிக்கையாளர் ஒருவர், அவற்றுள் ஒன்றைத் தம் வசமாக்கிக்கொண்டார். அந்தச் சம்பவத்தையும் அதன்பின் நடந்தவற்றையும் பொருத்தமான வர்ணனைகளோடு விளக்கி எழுது

 CHEZHIAN NANDHANA - 2021

எனக்குப் பசி வயிற்றை கிள்ளுகிறது! நம் தேர்வுகள் அனைத்தையும் முடித்து விட்டோம். ஒரு உணவகத்திற்குச் சென்று சாப்பிடலாம்!” என்று நான் என் மூன்று தோழிகளான , கலா , ராதா மற்றும் ரதியிடம் கூறினேன். அவர்களும் உடனே என்னுடைய யோசனையை ஆமோதித்தனர். நாங்கள் அனைவரும் அன்று தான் எல்லா தேர்வுகளையும் முடித்து இருந்ததால் உணவகத்திற்கு சென்று சாப்பிட மிகவும் ஆர்வமாகவும் ஆவலாகவும் இருந்தோம்.

எங்களின் பள்ளி அருகில் உள்ள மிகவும் பிரபலமான ஒரு உணவகத்திற்கு நானும் என் தோழிகளும் சென்றோம். ஆனால் அந்த உணவங்காடியில் கூட்டம் அலை மோதியது. எந்த திசையில் திரும்பினாலும் மக்கள் தேனீக்களை போல பரபரப்பாக உணவு தட்டுகளை தூக்கி கொண்டு அங்கும் இங்கும் இருந்தனர். “மாலதி, உணவகம் இவ்வளவு கூட்டமாக இருக்கிறதே! நாம் வேறு இடத்திற்கு செல்வோமா?” என்று என் தோழி கலா என்னை வினவினாள். ஆனால் அந்த உணவங்காடியில் இருந்த அற்புத பிரியாணியின் வாசனை என்னை பிடித்துக்கொண்டு, “போகவேண்டாம்!” என்று கூறியது போலவே எனக்கு தோன்றியது. “வேண்டாம் கலா, நான் நாம் அமர ஒரு இடத்தை தேடுகிறேன். நீங்கள் அனைவரும் சென்று உணவை வாங்கி வாருங்கள்.” என்று ஆடம் பிடித்தேன். அவர்களும் அதிக பசியில் இருந்ததால் நான் கூறிய யோசனையை மறுக்கவில்லை . அப்போது நான்கு பேர் அமரும் படி ஒரு காலியான இடத்தை பார்த்த நான் ஓட்டமும் நடையுமாக அந்த காலியான இடத்தை நோக்கி ஓடினேன். நான் ஒரு நாற்காலியில் அமர்ந்து மற்ற மூன்று நாற்காலியிலும் திசு தாள்களை வைத்து அந்த இடத்தை ஒதுக்கி வைத்துக்கொண்டேன், பிறகு என் கைத்தொலைபேசியை பயன்படுத்த தொடங்கினேன்.

அப்போது ஒரு முதியவர் அவசர அவசரமாக உணவகத்திற்குள் நுழைந்தார். அவருடைய நெற்றியில் வியர்வை முத்துக்கள் வழிந்தன. சுற்றும் முற்றும் அமர இடத்தை தேடிய அவரின் கண்கள் நான் என் நண்பர்களுக்க்காக ஒதுக்கி வைத்த காலியான இடத்தின் மீது விழுந்தது. சற்றும் தாமதிக்காமல் அந்த காலியான இடத்திற்கு விரைந்து, நான் வைத்து இருந்த திசு தாளை தள்ளி விட்டு அங்கு அமர்ந்து தன் கைத்தொலைபேசியில் யாரிடமோ பேசத் தொடங்கினர். எனக்கு கோபத்தில் ரத்தம் கொதித்தது. நான் சிரமப்பட்டு தேடி பிடத்து வாய்த்த இந்த இடத்தை இந்த முதியவர் அப்பிடியே திருடி விட்டார் என்ற கோபம் என் கண்களை மறைத்தது. எரிச்சலும் கோபமும் என்னுள் சூறாவளியாக சுழன்றது. என்னுடைய நண்பர்கள் முன்பே வேறு இடத்திற்கு செல்லலாம் என்று கூறியும் நான் தந் இந்த உணவகத்திலேயே உண்ணலாம் என்று வற்புறுத்தினேன்.  ஆனால் இப்போது அவர்களுக்கு அமர இடம் கிடைக்கவில்லையென்றால் என் மீது தான்  கோபப்படுவார்கள் என்று நான் அறிந்தேன். நான் வைத்து இருந்த திசு தாளையும் அவர் தள்ளியது எனக்கு அதிக கோபத்தை உண்டாக்கியது. உடனே நான் எழுந்து, “உங்களுக்கு சற்றும் அறிவு இல்லையா? நான் என் நண்பர்களுக்காக வைத்து இருந்த இடத்தில் இருந்த திசு தலை தள்ளிவிட்டு என் இடத்தை திருடி வீட்டர்கள். உடனடியாக இங்கிருந்து எழுந்து செல்லுங்கள்என்று கண்களால் சுட்டெரிப்பது போல் அந்த முதியவரை முறைத்து பார்த்து கத்தினேன். உடனே அந்த முதியவரின் முகம் தக்காளியை போல் சிவந்தது. அவர் சுற்றும் முற்றும் மக்கள் அவரை பார்த்ததை கண்டு தலைகுனிந்து நின்றார். “என்னை மன்னித்து விடு சிறுமி... நான் அவசரத்தில் இந்த திசு தாளை பார்க்கவில்லை..." என்று திக்கி திணறி மெதுவாக கூறி எழுந்தார். நான் கோபத்தில் பதில் கூறாமல் அவரை முறைத்து பார்த்தேன். அப்போது தான் என் தோழிகளும் உணவுத்தட்டுகளை தூக்கிக்கொண்டு அந்த இடத்திற்கு வந்தார்கள். அவர்கள் என்ன நடக்கிறது என்று புரியாமல் கண்களில் கேள்விகளுடன் என்னையும் அந்த முதியவரையும் மாறி மாறி பார்த்தார்கள். அப்போது தீடீரெண்டு,  நிறுத்து! உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என் தந்தையை பார்த்து கத்துகிறாய்!” என்று ஒரு ஆத்திரம் நிறைந்த குரல் உணவகத்தின் நுழைவாயிலிலிருந்து கேட்டது. நான் அதிர்ச்சியில் உடனே திரும்பி பார்த்தேன். அங்கு கண்கள் கோவைப்பழம் போல் சிவந்த ஒரு பெண்மணியும் அவர் பக்கத்தில் தள்ளுவண்டியில் ஒரு சிறுவனும் இருந்தான். அந்த பெண்மணி என்னை நோக்கி வந்து, “நானும் என் மகனும் மருத்துவமனையிலிருந்து வருகிறோம். என் மகன் விழுந்து முட்டியில் ஒரு முறிவு இருப்பதால் அவனால் நடக்க முடியாது. தள்ளுவண்டியில் தான் இருக்க முடியும். நங்கள் இருவரும் காலையிலிருந்து சாப்பிடால் இருப்பதால் என் தந்தை நங்கள் அமர அவசர அவசரமாக ஒரு இடத்தை தேடி இருக்கிறார். அவர் ஒரு முதியவர் என்று கூட மதிக்காமல் அவரை பார்த்து கத்தி இருக்கும் உன்னை நினைத்தால் அருவெறுப்பாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இது போல் திசு தால் வைத்து இடம் பிடிப்பது சரியே இல்லை!” என்று அந்தப் பெண்மணி எடுத்தெறிந்து கத்தினார்.

அப்போது தான் அந்த சூழ்நிலையே எனக்கு புரிந்தது. தன்னுடைய மகளுக்கும் நடக்க முடியாத பேரனுக்கும் அமர இடம் தேடிய அவசரத்தில் இவர் திசு தாளை பார்க்கவில்லை. அது மட்டும் இல்லாமல் அவசரமாக சிறப்பு தேவைகள் உள்ள வாடிக்கையாளர்களும் உணவகத்திற்கு வருவார்கள் என்று அவர்களின் நிலைமையை பற்றி சற்றும் சிந்திக்காமல் நான் மூடத்தனமாக திசு தாளை வைத்து அமர இடம் பிடித்து இருந்தேன். 

வெட்கத்தில் தலைகுனிவதை தவிர வேறு என்ன செய்வது என்றே தெரியவில்லை. என் தவறு எனக்கு தெள்ள தெளிவாக புரிந்தது. ஒரு சூழ்நிலையை நன்கு புரிந்துகொள்ளாமல் ஆத்திரத்தை தாண்டவம் ஆட விட்டதால் வந்த விளைவுகளை தெள்ள தெளிவாக கண்டேன். “என்னை மன்னித்து விடுங்கள். நான் செய்தது பெரும் குற்றம் ஆகும். சிந்திக்காமல் இப்படி கத்திவிட்டேன்என்று கண்களில் கண்ணீர் மழுக அந்த முதியவரிடம் மன்னிப்பு கேட்டேன். அந்த பெண்மணியிடமும் மன்னிப்பு  கேட்டுக்கொண்டேன். ஆனால் அந்த முதியவரோ என்னை வெறுக்காமல் புன்னகை பூத்த முகத்தோடு, “பரவாயில்லை சிறுமி அனைவருக்கும் கோபம் வருவது மனித இயல்பு தான். ஆனால் ஒரு சூழ்நிலையை நன்கு ஆராய்ந்து நீ ஆத்திரத்தை ஒழித்து விட்டு சிந்தித்து நடந்துகொள்ள வேண்டும். மேலும் இது போன்று திசு தாளை வைத்து இடத்தை பிடிக்கும் பழக்கத்தை விட்டு விடு,” என்று கூறினார். நானும் இவர் கூறியதை முழுமையாக ஒப்புக்கொண்டு என்னை மன்னித்ததற்கு நன்றி கூறினேன். நானும் என் தோழிகளும் அதற்கு மேலும் அந்த உணவகத்தில் இருக்க வேண்டாம் என்று சாப்பிடாமல் உடனே கிளம்பிவிட்டோம்.

அன்று ஒரு கசப்பான சம்பவம்  நிகழ்ந்து இருந்தாலும் நான் அதிலிருந்து ஒரு பெரும் பாடத்தை கற்றுக்கொண்டேன்.  ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுஎன்ற பழமொழிக்கு ஏற்ப நான்  கோபத்தில் சற்றும் சிந்திக்காமல் செயல்பட்டது  எனக்கு புரிந்தது. மேலும் மற்றவர்களின் நிலையை பற்றியும் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று கற்றக்கொண்டேன். அந்த சம்பவம் என் மனத்தில் பசுமரத்தாணி போல் பதிந்தது.

 

 

 

 

 

No comments: