Wednesday, November 24, 2021

காணாமல் போன உன் செல்லப்பிராணி உனக்கு மீண்டும் கிடைத்துவிட்டது. இந்நிகழ்வுகளைப் பொருத்தமான வர்ணனைகளுடன் விளக்கி எழுதுக. - JANANI BALAMURUGAN 104- 2021

“ஜனனி! உன் அறையைச் சுத்தப்படுத்து! தீபவாளி வருகிறது!" என்று அம்மா சமையலறையிலிருந்து கூகுரலிட்டார். "சரி அம்மா!" என்று எரிச்சலுடன் கூறிவிட்டு என் அறையை சுத்தப்படுத்தத் தொடங்கினேன். தொடக்கநிலையிலிருந்து வைத்திருந்த புகைப்படங்கள், கடிதங்கள் முதலியவற்றை கண்டேன். அந்தக் கோப்பை எடுத்தபோது, அதிலிருந்து ஒரு புகைப்படம் விழுந்தது. அப்புகைப்படம் கசப்பான நினைவுகளை என் கண்முன் நிறுத்தியது. அப்படத்தில் நானும் மாலாவும் சிரித்துக்கொண்டிருந்தோம். தொடக்கப்பள்ளியின் இறுதி நாள். எங்கள் மலர்ந்த முகங்களைக் கண்டு எனது கண்ணிலிருந்து ஒரு கண்ணீர் விழுந்தது. என் எண்ண அலைகள் பின்னோக்கிச் சென்றன… நானும் மாலாவும் நகமும் சதையும் போல இருந்தோம். என் சகோதரியாக அவளை நான் கருதினேன். ஆறு வருடங்களாக நெருங்கிய தோழிகளாக இருந்தோம். ஒவ்வொரு நாளும் நாங்கள் இடைவேளையின்போது பள்ளி உணவகத்தில் அமர்ந்து கல கலவென்று சிரித்தவாறு நேர்த்தை செலவழித்தோம். தொடக்கப்பள்ளி முடிந்ததும் நாங்கள் பிரிந்தோம். நட்பைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ள நினைத்தோம். எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் பொறாமை அவளை அதன் கட்டுக்குள் இழுத்தது. அதன்பிறகு எங்களின் நட்பு … தொடக்கப்பள்ளி இருதியாண்டு தேர்வில் நான் சிறப்பாக செய்தேன். எனது மதிப்பெண்களைக் கண்டு நான் ஆனந்தக் கண்ணீர் விட்டேன். ஆனால் மாலாவோ, அவளவு நன்றாகச் செய்யவில்லை. என் மகிழ்ச்சியை நான் அடக்கிக்கொண்டு அவளுக்கு ஆறுதல் சொன்னேன். இருப்பினும் அவள் அன்று பள்ளியைவிட்டு அழுகையுடன் சென்றாள். புது உயர்நிலைப்பள்ளியில் நான் வகுப்புத் தலைவியாக நியமிக்கப்பட்டிருந்தேன். மாலாவும் தனது பள்ளியில் வகுப்புத் தலைவியாக இருக்க ஆசைப்பட்டாள். ஆனால் அவள் நியமிக்கப்படவில்லை. நான் எனக்குப் பிடித்த இணைப்பாட வகுப்பில் சேர்ந்தேன். மாலா அவள்ளது பள்ளிப் பாடல் குழுவை சேர விழைந்தாள். ஆனால் மறுபடியும் தோல்வியடைந்தாள். நான் வகுப்பினரிடம் உரையாடி சீக்கிரம் நண்பர்களைக் கண்டறிந்தேன். ஆனால் மாலா பள்ளியில் தனிமையில் வாடினாள். இருப்பினும் அவளுக்கு ஆதரவாக இருந்தேன். குறுஞ்செய்தி அனுப்பி, தொலைபேசியில் உரையாடி, அவளுக்கு உற்சாகம் அளித்தேன். என்னைச் சந்தித்தப்போதெல்லாம், இன்முகத்துடன் பேசினாள். சிறுவயதில் இருந்த மாலா மாறாததுபோல் இருந்தது. ஆனால் அவளுள்ளிருந்த கோபமும் பொறாமையும் என்னிடம் அவள் காட்டவில்லை. சூரியன் தன் செங்கதிர்களால் பூமியைச் சுட்டெரித்தான். நான் சனிக்கிழமை அதிகாலையில் எழுந்து என் நீச்சல் போட்டிக்குத் தயாரானேன். பள்ளியை நான் பிரதிநிதித்து பங்கேற்கும் முதல் போட்டி அது. பல நாட்களாக நான் அதற்கு அல்லும் பகலும் தயார் செய்துகொண்டு வந்திருந்தேன். அங்குள்ள அதிகாரி, "கோ!" என்று கூறியவுடன், நான் அசூர வேகத்தில் நீந்தினேன். என்னை ஒருமுகப்படுத்தி கவனத்தை நீந்துவதில் செலுத்தினேன். வெற்றி கோட்டை தாண்டினேன். பார்வையாளர்கள் கரவொலி எழுப்பினர். முதல் பரிசை வென்றுவிட்டேன்! மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து பரிசைப் பெற்றேன். வீட்டிற்குச் சென்றதும் என் இணையத் தளத்தில் என் வெற்றியைப் பற்றி பகிர்ந்துகொண்டேன். காலம் உருண்டோடியது. மறுநாள், நான் என் இணையப்பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்த புகைப்படத்தைப் பார்த்தேன். நிறைய நண்பர்கள் எனக்கு ஊக்கமளித்தனர். ஆனால் ஒரு குறிப்பு என் முகத்தை வாட வைத்தது. "ஜனனி மிகவும் கர்வம் கொண்டவள்! அவள் எப்பொழுதும் என்னைப்பற்றி கேவலமாக பேசுவாள்!" என்றது ஒரு குறிப்பு. அதை யார் எழுதியிருந்தார் என்று தெரியவில்லை. ஆனால் அது உண்மையன்று! முன்பு இணையப்பக்கத்தில் போட்டிருந்த புகைப்படங்களைப் பார்த்தேன். வெவ்வேறு மக்கள் என்னைப்பற்றி அவமதிக்கும் குறிப்புகளை எழுதியிருந்தார்கள். என் மனம் சுக்குநூறாக உடைந்தது. எனது முகம், உடம்பு, நண்பர்கள், குணம் அனைத்தையும் பற்றி புண்படுத்தும் குறிப்புகள் இருந்தன. என் கண்களிலிருந்து கண்ணீர் அருவிநீர் போல் வழிந்தோடியது. எனது உயர்நிலைப்பள்ளி நண்பர்கள் அக்குறிப்புகளை நம்பவில்லை. ஆனால் திடீரென்று என் தொடக்கப்பள்ளி தோழர்கள் என்னைவிட்டு விலகினார்கள். மாலாவிடம் இதைப்பற்றிக் கேட்டப்போது, அவள் தனக்கு ஒன்றும் தெரியாததுபோல் இருந்தாள். நாட்கள் போகப் போக, என் தொடக்கப்பள்ளி நண்பர்கள் என்னிடம் பேசவில்லை. நான் சோகத்தில் வாடினேன். ஆனால் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நாட்கள் உருண்டோடின. ஒரு வாரம் கழித்து எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. என் நெடுங்கால தோழி கவிதா ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தாள். மாலா என்னைப்பற்றி தவறாகப் பேசியாதாகக் கூறினாள். முதலில் நான் அதை நம்பவில்லை. என் நெருங்கிய தோழி ஏன் அவ்வாறு செய்வாள்? ஆனால் கவிதா மாலா என்னைப்பற்றி அவமதிக்கும் வகையில் பேசி, பொய்த் தகவல்களை பரப்பும் குறுஞ்செய்திகளைப் புகைப்படங்கள் எடுத்து எனக்கு அனுப்பினாள். அப்பொழுதுதான் நான் உணர்ந்தேன். எனது கவலைகளுக்குக் காரணம் மாலா தான். அந்தச் செய்தி என் மனதை உடைத்தது. தேம்பித் தேம்பி அழுதேன். அழுதும் மனம் ஆறுதல் அடையவில்லை. அன்று உலகமே இருண்டது போல் இருந்தது. இவ்வளவு நாட்களாக அவளுக்கு உதவி, தோழியாக இருந்த என்னை அவள் கைவிட்டுவிட்டாள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. ஒவ்வொரு குறிப்பும் என் மனதைக் குத்தும் கத்திப்போல் இருந்தது. துரோகத்தின் வலியை நான் அன்றுதான் முதன்முறையாக உணர்ந்தேன். "ஏன் மாலா இவ்வாறு செய்தாள்? நான் என்ன தவறு செய்தேன்?" என்று மீண்டும் மீண்டும் எண்ணியவாறு கண்ணீர்விட்டு உறங்கினேன். மறுநாள் மாலாவிடம் அதைப்பற்றி கேட்க ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். பதில் வரவில்லை. ஒரு வாரம் கடந்தது. பதில் வரவில்லை, ஆனால் எனது வலி அங்கேயே இருந்தது. ஒரு மாதம் கடந்தும் பதில் வரவில்லை. அதன்பிறகு நான் அவளிடமிருந்து விலக முடிவெடுத்தேன். என் இணையத்தலங்களிலிருந்து அவளை நீக்கினேன். என் உயர்நிலைப்பள்ளி நண்பர்களுடன் நெருக்கமானேன். என் வாழ்க்கையை மீண்டும் இன்பமாக வாழ முயற்சித்தேன். என் தொடக்கப்பள்ளி நண்பர்களிடம் பேசி, சிக்கலை எடுத்துரைத்தேன். அவர்கள் புரிந்துணர்வுடன் நடந்து, மன்னிப்புக்கூறி, எனக்கு ஆதரவு அளித்தார்கள். என் வாழ்க்கை மீண்டும் மகிழ்ச்சியாக இருந்தது. "ஜனனி! சாப்பிடவா!" என்று என் அம்மாவின் குரல் என்னை நிகழ்காலத்திற்கு இழுத்துவந்தது. மணி எட்டு. சாப்பிடும்போது மாலாவைப் பற்றி யோசித்தேன். அப்பொழுது அன்று ஆசிரியர் கூறிய ஒரு பழமொழி என் நினைவுக்கு வந்தது. "போகவிட்டு புறம் சொல்லி திரியவேண்டாம்" என்ற பழமொழிப்படி மாலா நடந்திருந்தால், அவளும் நானும் இன்றும் தோழிகளாக இருந்திருப்போம். ஆனால் அவளது பொறாமை அவளைத் தவறான பாதையில் அழைத்துச் சென்றது. இருப்பினும், நான் அவளை ஏன் வெறுக்கவேண்டும்? தோழிகளில்லை என்றாலும் நாங்கள் எதிரிகளாக இருப்பது சரியல்ல. நான் என் கைத்தொலைபேசியை எடுத்தேன். அவளது எண்ணை ஒரு நண்பரிடமிருந்து கேட்டறிந்து மாலாவிற்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினேன். "எப்படி இருக்கிறாய், மாலா?" அன்றிரவு நிம்மதியாக உறங்கினேன்.

No comments: