Friday, November 19, 2021

சிங்கப்பூரின் குடியிருப்புப் பேட்டைகளிலுள்ள விளையாட்டு வசதிகள், மக்கள் உடல் ஆரோக்கியத்தோடும் சமூக நல்லிணக்கத்தோடும் வாழ உதவியாக உள்ளன. கருத்துரைக்க.

கொண்டாரெட்டி இனியா - 208 - 2021 “சிங்கை நாடு, எந்தன் வீடு !’’ என்ற பாடலை மீண்டும் மீண்டும் பாடலாம்!” ஆனால், அது பாட்டு மட்டும் கிடையாது, நம் சிங்கப்பூரைப் பற்றிய நம் எண்ணங்கள் அந்த முத்து முத்தான எழுத்துகளில் பதிக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர் உலக வரைப்படத்தில் ஒரு ஊசியின் முனையைவிட சிறிதாக இருந்தாலும் நாம் கடந்த வருடங்களில் வளர்ந்த வளர்ச்சியே மற்ற நாடுகள் நம்மை ஆச்சரியத்துடன் பார்க்க செய்கின்றது. இந்த மண்ணில் பல மக்கள் வாழ்கிறோம், சுமார் 5 மில்லியன் குடிமக்கள். நம்முடைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் நாம் நம்மை சுற்றியிருப்பதைப் பார்த்து ரசிக்க கூட நேரமில்லை. இருப்பினும், சுற்றி பார்க்கும் அரிய தருனங்களில் சிங்கப்பூரின் குடியிருப்பு பேட்டைகளைப் பார்க்கிறோம். விளையாட்டு வசதிகள் அதிகமாக கானப்படும் இப்பேட்டைகள் மக்களுடைய உடல் ஆரோக்கியத்திர்க்கும் சமூக நல்லிணக்கத்துக்கும் பெரிய பங்கு வகிக்கின்றது என்பதைக் கவனிக்கலாம். இவ்வசதிகள் நம் குடிமக்கள் வாழ உதவியாக உள்ளன என்பதை என் தாழ்மையான கருத்து. அரசாங்கம் நிறுவிய விளையாட்டு வசதிகள் மக்களுக்கு எவ்வகையில் பலன் தருகின்றன என்று இக்கட்டுரையில் கவனிப்போம். முதலாவதாக, பல குடியிருப்புப் பேட்டைகளில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கபட்டிக்கின்றன. “விளையாடும் நேரத்தில் விளையாடு, படிக்கும் நேரத்தில் படி, ” என்பது நம் நாட்டில் போதியளவு வலியுறுத்தப்படவில்லை என்று நான் கருதுகிறேன். சிங்கையில் பல பெற்றோர் குழந்தைகளுக்குப் படிப்பின் முக்கியத்துவத்தை அறிவுறுத்திவிட்டு விளையாடுவது தவறு என்று சொல்கின்றனர். என் கண்ணோட்டத்தில் இது மிக தவறு என்று சொல்கின்றனர். மற்ற நபர்களைச் சந்திக்காமல் இளம் வயதிலிருந்தால் பெரியவரானதும் மற்ற கலாச்சாரம், வேறினத்தவர், மாற்றுத்திறனாளிகள் இவர்கள் யாரையும் அறியாத்தால் பாகுப்பாடுமிக்க மனம் உண்டாகலாம். இதைத் தவிர்க்கவே விளையாட்டு மைதானங்கள் இருக்கின்றன. இன்று, பல வடிவத்திலும் பல வண்ணங்களிலும் புதிய விளையாட்டு மைதானங்கள் நம் நாட்டின் பல குடியிருப்பு பேட்டைகளில் கட்டப்படுகின்றன. விளையாட்டு மைதானங்களில் சறுக்கு, ஊஞ்சல், போன்ற பல விளையாட்டுகள் சிறுவர்களையும் குழந்தைகளையும் காந்தமாய் ஈர்க்கின்றன. ஓடும் பாம்பை மிதிக்கும் வயதில் குழந்தைகள் குதூகலத்துடன் விளையாடும்போது அவர்கள் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. சுற்றி வளரும் பச்சை பசேலென்ற செடிகளையும் பச்சை இலை, தழைகளைப் பார்க்கும்போது மனம் சாந்தமடைவதோடு கண்களும் குளிர்ச்சி பெருகின்றன. அதோடு, ஓடியாடி விளையாடும்போது சிறுவர்களுக்கு ஒருவிதமான உடற்பயிற்சியும் கிடைக்கும். சூரிய வெளிச்சத்தின் கீழ் விளையாடும்போது உடலுக்கு ‘விட்டமின் டி’ என்ற சத்து கிடைக்கும் மற்றும் சுத்த காற்றைச் சுவாசிக்கும்போது உடல் புத்துணர்ச்சி பெரும். வட்ீ டிலேயே அடைந்து சிறை வாழ்க்கையை வாழும் சிறுவர்கள் வெளியே வந்து விளையாடுவதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று சொன்னால் அது மிகையாகாது. “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்பது போல சிறுவயதிலிருந்தே நல்ல பழக்கங்களை பெற்றோர் ஊக்குவிக்க, பிள்ளைகளை விளையாட அழைத்துச்செல்ல வேண்டும். விளையாட்டு மைதானம் என்பது எந்த குழந்தையும் வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாத நண்பர்களை கொடுக்கும் என்பது முற்றிலும் உண்மை. “வாழ வைப்பவன் இறைவன், வாழ தெரிந்தவன் மனிதன், விழ வைப்பது துரோகி, தூக்கி விடுபவன் நண்பன் ” என்பதுக்கு ஏற்ப நண்பர்கள் வாழ்வில் அவ்வளவு பெரிய முக்கிய பங்கை வகிக்கின்றனர். சமூகத்தில் ஒரு தனிப்பட்ட குழுவிடம் மட்டும் பழகாமல் எல்லோரிடமும் சிரத்தையுடன் பழகினால்தான் நல்லிணக்கம் வளரும்! சமுகம் என்பது ஐந்து விரல்கள் போன்று, ஒவ்வொறு விரலுக்குத் தனிப்பட்ட தகுதிகள் இருந்தாலும் எல்லா விரல்கள் இருந்தால்தான் நம் வாழ்க்கையில் எல்லாவற்றையும் செய்யலாம், ஒரு பேனாவை வைத்து எழுதுவதிலிருந்து உந்துவண்டி ஓட்டும் வரை. ஒற்றுமையே பலம்! அடுத்ததாக, அடுக்குமாடி கட்ட்டங்களின் கீழ்த்தளத்தைப் பற்றி பார்ப்போம். இந்த இடம் பார்க்க சிறியதாகயிருந்தாலும் முதியோர்களுக்குப் பிடித்த இடமாக விளங்குகிறது. கீழ்த்தளத்தில் வைக்கப்பட்டிருக்கும் மேசைகளில் அச்சடிக்கப்பட்ட சதுரங்கக அட்டை முதியோருக்கு நல்ல பொழுதுபோக்காக விளங்குகிறது. பல முதியோர்கள் தனியாகவே வாழ்வதால் தனிமை ஒரு அசுரனைப்போல் தாக்குகிறது. சதுரங்க விளையாட்டு அறிவை கூர்மையாக்குவதோடு சமூக நல்லிணக்கத்தை மேம்படுகிறது. சதுரங்கம் இரு- நபர் விளையாட்டு என்ற காரணத்தால் மற்ற பெரியவர்களுடன் விளையாடும்பொழுது நட்பு மலரும், அவரைப் பற்றி நன்கு அறியலாம். வேறுபாடுகளைத் தாண்டி பல உறவுகளை அமைப்பதற்கு இவ்விளையாட்டு வழியளிக்கிறது. அடுத்து, பூப்பந்து மற்றும் கூடைப்பந்து விளையாட்டுக்காக அமைக்கப்பட்ட இடங்கள். பல மக்கள் எல்லா நாட்களிலும் இங்கே வந்து விளையாடுவர். பரபரப்பான வாழ்க்கை சூழலால் நம்மில் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம், பள்ளியால் பாடச்சுமை கூண்டில் அடைக்கப்பட்ட கிளியைப் போல கிடக்காமல் வெளியே சென்று விளையாட இந்த இடங்கள் ஊக்குவிக்கின்றன. பூப்பந்தும் கூடைப்பந்தும் விளையாடும்போது உடல் ஆரோக்கியம் பல மடங்க மேம்பாடு. “நோய் வருமுன் காக்க வேண்டும்.” என்பதற்கு ஏற்ப நோயிலிருந்து பாதுகாத்து உடலை தெம்பாகவும் நலமாகவும் வைக்க உடற்பயிற்சி இன்றியமையாதது என்பது வெள்ளிடைமலை போல இருக்கிறது. இவ்விளையாட்டுகளை விளையாடும்போது வட்டாரத்தில் வசிக்கும் பல நபர்களைச் சந்தித்து அவர்களுடன் பேசியும் விளையாடியும் பிணைப்பு வலுவடையும் சமூகத்தில் பல வேறுபாடுகளிருந்தும் சில சில கண்ணும் காணாத விஷயங்களில் ஒரே விருப்பங்கள் இருக்கும், உதாரணத்துக்கு விளையாட்டு மீதிருக்கும் நாட்டம். கடைசியாக, குடியிருப்பு பேட்டைகளிலிருக்கும் சமூக மன்றங்கள் பல விளையாட்டு வசதிகளை வழங்குகின்றன. அதாவது, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் மக்கள் ஈடுப்படலாம். இது நல்ல உடற்பயிற்சி மற்றும் சமூக நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும். “நாடு என்பதை நாடு, நாடாவிட்டால் எது வடுீ ? “ என்பதற்கு ஏற்ப நம் அரசாங்கம் நமக்கு செய்துகொடுத்த வசதிகள் எல்லாவற்றையும் பாராட்ட வேண்டும். சிலர் அரசாங்கம் முயற்சி போட்டு விளையாட்டு வசதிகள் அமைக்கவில்லை என்று கூறலாம். ஆனால், இக்கருத்தை நான் மறுக்கிறேன். ஏனெனில், அரசாங்கம் சமூக நலனைக் கருதியும் நம்முடைய வாழ்க்கைமுறையும் கவனத்தில் வைத்தே நமக்காக, ஒரு காசு கூட கட்டாமல் அனுபவிக்ககூடிய விளையாட்டு வசதிகளை அமைத்த்தோடு சுற்று வட்டாரத்திலிருப்பதால் சுலபமாக பயன்படுத்தும்படியும் அமைத்திருக்கிறது. கடைசியாக, சிங்கப்பூரின் குடியிருப்பு பேட்டைகளில் உள்ள பலதரப்பட்ட விளையாட்டு வசதிகள் மக்கள் உடல் ஆரோக்கியத்துக்கும் சமூக நல்லிணக்கத்துக்கும் முக்கியத்துவமளித்து மக்கள் வாழ உதவியாக உள்ளன என்று சொன்னால் அது சற்றும் மிகையாகாது என்பது திண்ணம்! “நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்லது அன்றே மறப்பது நன்று ” என்பதை மறவாமல் நாம் நம் நாட்டின் வசதிகளுக்கு நன்றியுணர்வோடு இருப்போம். “நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே, நீநாட்டிற்கு என்ன செய்தாய் என்று கேள்! ” நாம் எல்லோரும் பொறுப்புடன் இவ்வசதிகளைப் பயன்படுத்துவோம்! நன்றி.

No comments: