Friday, November 19, 2021

சிங்கப்பூரின் குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள விளையாட்டு வசதிகள், மக்கள் உடல் ஆரோக்கியத்தோடும் சமூக நல்லிணக்கத்துடனும் வாழ உதவியாக உள்ளன. கருத்துரைக்க.

பெயர்:சாரா தர்மராசு - 2021 சிங்கார சிங்கை என்னும் பூந்தோட்டத்திலே, நாட்டு மக்களான பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பரக்க சிங்கப்பூர் அரசாங்கம் பல திட்டங்களை அமுலாக்கம் செய்து வழி வகுக்கிறது. “பெற்ற தாயும் பிறந்த நாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவை” என்ற கவிதைக்கு ஏற்ப சிங்கப்பூர் ஒரு சிறந்த அரசாங்கத்தைக் கொண்ட ஒரு சாலச்சிறந்த நாடு. ஆனால், அன்மையில் அது பல சவால்களை எதிர்நோக்கியுள்ளது. சிங்கப்பூர் ஒரு மூப்படையும் சமுதாயம் கொண்ட நாடு. இங்கு நிறைய வயதானவர்கள் இருப்பதால், நிறைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் கட்டாயம் நம் அரசாங்கத்திற்கு உண்டு. அவர்கள் ஒரு ஆரோக்கியமான வாழ்வை வாழ்வது மிகவும் முக்கியம். அது மட்டும் இல்லாமல், சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் சிங்கப்பூர்தான் ஆசியாவில் மிகச் சோர்வான நாடு என்று வெளியிடப்பட்டது. இதற்கு மேல், சிங்கப்பூரர்களுக்கிடையே நிறைய நபர்கள் நீரழிவு நோய் பிரச்சினையால் அல்லல்படுகின்றனர். இவ்வளவு சவால்களுக்கும் ஒரே தீர்வு, குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள விளையாட்டு வசதிகள்தான். சிங்கப்பூரின் குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள விளையாட்டு வசதிகள், மக்கள் உடல் ஆரொக்கியத்தோடும் சமூக நல்லிணக்கத்தோடும் வாழ உதவி புரிகிறது என்று கூறினால் அது மிகையாகாது. அந்த விளையாட்டு வசதிகள், அடுக்குமாடி வீடுகளுக்கு கீழே உள்ளதால், அதனை பயன்படுத்த வசதியாகவும் ஏதுவாகவும் உள்ளது. வயதானவர்கள் சுலபமாக இந்த விளையாட்டு வசதிகளை சென்றடையலாம். இந்த விளையாட்டு வசதிகள் எல்லா தலைமுறையினரும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு விளையாட்டு மைதானம், பதின்ம வயதினருக்கு ஓடியாடி விளையால ஒரு திடல், பெற்றோர்களுக்கு அமர இருக்கைகள், மற்றும் முதியவர்களுக்கு உடற்பயிற்சி செய்யும் இடம் உள்ளது. அதனால், குடும்பத்துடனும் ஒன்றாகச் சேர்ந்து இந்த விளையாட்டு வசதிகளை உபயோகப்படுத்தலாம். இது குடும்பத்துடன் நேரம் செலவழிக்கவும் வழி வகுக்கிறது. இந்த பரபரப்பான காலக்கட்டத்தில் நாம் சமூக ஊடகங்கள் மூலம் குடும்பத்தினருக்கு குறுஞ்செய்தி மட்டும் அனுப்புகிறோம். ஆனால், இது போன்ற விளையாட்டு வசதிகள் மற்றும் பூங்காக்களில் நாம் நம்முடைய குடும்பத்தினரோடு மனம்விட்டுப் பேசினால் நம்முடைய மன உளைச்சலும் குறையும் உறவும் வலுவாகும். நம்முடைய மன உளைச்சல் குறைவதால் நம்முடைய மன ஆரோக்கியம் மேம்படுகிறது. “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்ற பழமொழிக்கு ஏற்ப நோயில்லாம, சிறந்த ஆரோக்கியத்துடன் வாழ்ந்தால் அதற்கு ஈடாக எந்த செல்வமும் இல்லை. ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த நமது சிங்கப்பூர் அரசாங்கம் இந்த விளையாட்டு வசதிகளை அமைத்துள்ளது. அங்குள்ள உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். மருத்துவர்கள் வாரத்திற்கு இரண்டு முறையாவது உடற்பயிற்சி செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். அதனால், அடிக்கடி உடற்பயிற்சி செய்வதற்கு இந்த வசதி அனுசரணையாக உள்ளது. இவ்வாறு உடற்பயிற்சி செய்வதால் பல அனுகூலங்கள் உள்ளன.அதாவது உடற்பயிற்சி நம் உடலை வலிமையாக வைத்துக்கொள்ளும். நம்முடைய தசைகளை அது வலுப்படுத்தும் மற்றும் இரத்தவோட்டத்தை அதிகரிக்கும். பெரும்பாலான சிங்கப்பூரர்கள் வேலையிடங்களில் பெருவாரியான நேரம் அமர்ந்தே வேலை செய்கிறார்கள். அதனால், அவர்கள் மிகவும் சோம்பேறியாக இருக்கிறார்கள். அவர்களைத் துடிப்புடன் வைத்துக்கொள்ளவும், எறும்புகளைப் போல் சுறுசுறுப்பாக்குவதற்கும் இந்த உடற்பயிற்சி வசதிகள் துணை புரிகின்றன. மேலும், இந்த கிருமித்தொற்று காலத்தினால் கூண்டில் மாட்டிக்கொண்ட சிட்டுக்குருவிகளைப் போல் நாம் வீட்டில் மாட்டிக்கொண்டோம். ஆனால், மாலை நேரங்களில் புதிய காற்றை சுவாசித்து மன நிம்மதியைப் பெற இந்த உடற்பயிற்சி வசதிகள் உதவுகின்றன. நாம் சற்று நேரம் உடற்பயிற்சி செய்வஉ நம்முடைய மன உளைச்சலை போக்கும் மற்றும் நம் வாழ்வை மெருகூட்டும். சற்று நேரம் நம் வேலைகளிலிருந்தும் பரபரப்பான வாழ்கை முறையிலிருந்தும் விடைபெற்று, நமக்கென நேரத்தை ஒருத்துக்கி உடற்பயிற்சி செய்தால் நமக்கு மனநிம்மது கிடைப்பதுடன் புத்துணர்ச்சியுடனும் செயல்படுவோம். அதனால், நம்முடைய மன ஆரோக்கியமும் மேம்படுகிறது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நித்தமும் புது புது அலகாரங்களுடன் பவனி வரும் தொழில்நுட்ப சாதங்கள் பிள்ளைகளையும் இளையர்களையும் தன்வசம் ஈர்க்கிறது. அதனால், பெரும்பாலான நேரங்களில் அவர்கள் அச்சாதங்களையே பயன்டுத்துகிறார்கள். அவர்களை ஆட்டிப் படைக்கும் மந்திர சக்தியாக அது இயங்கி வருகிறது. அதனால், அவர்கள் நண்பர்களுடம் வெளியே செல்லாமல் வீட்டினுள்ளேயே ‘பப்ஜி' விளையாடுகிறார்கள். இது அவர்களுடைய கண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. மேலும், அவர்கள் ஓடுகிற பாம்பை மிதிக்கும் வயதில் சுறுசுறுப்பாக இல்லாமல் இருக்கிறார்கள். இது அவர்களுடைய உடல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கின்றது. மேலும், சிங்கப்பூரின் கல்வித் திட்டம் அவர்களுக்கு அதீத மன உளைச்சலைக் கொடுக்கிறது. ஒன்பது பாடங்களைக் கரைத்துக் குடிப்பதுடன், துணைப்பாட வகுப்பு, இணைப்பாட வகுப்பு என்று அவர்களுடைய வேலைகளிலேயே மூழ்கியிருக்கிறார்கள். இது அவர்களுடைய மன ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதுக்கின்றது. ‘சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியுமா?’ என்ற பழமொழிக்கு ஏற்ப, இந்த பிஞ்சு வயதில் அவர்கள் படித்து படித்து ஆரோக்கியத்தைக் கெடுத்தால், அவர்கள் படிப்பதில் பயனில்லை. ‘காலை எழுந்ததும் படிப்பு. பின்பு கனிவு தரும் பாட்டு. மால முழுதும் விளையாட்டு' என்ற மகாகவி பாரதியார் மொழிந்தார். இதுதான் பிள்ளைகளுக்கு சரியான வாழ்க்கை முறை. ஆனால், அவர்கள் அதைக் கடைபிடிப்பதில்லை இதையெல்லாம் உணர்ந்த நமது சிங்கை அரசாங்கம் இளையர்களையும் பிள்ளைகளையும் ஈர்க்கும் வண்ணம் விளையாட்டு இடங்களை அமைத்துள்ளது. அதனால், பிள்ளைகள் ஆர்வத்துடன் சென்று விளையாடி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிப்பார்கள். விளையாடுவது மன நிம்மதியைக் கொடுப்பதுடன் மன சோர்வையும் குறைக்கும். ‘ஐந்தில் வளையாதது ஐம்பத்தில் வளையுமா?’ என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த சிறு வயதில் அவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடித்தால்தான் அவர்கள் வளர்ந்த பிறகும் ஆரோக்கியமாக இருப்பார்கள். ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, இந்த சிறு வயதிலேயே விளையாடி உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தைக் கற்றுக்கொண்டால், அவர்கள் வாழ்நாள் முழுதவதும் அந்தப் பழக்கத்தைத் தொடர்வார்கள். அது மட்டும் இல்லாமல், பொதுவால இந்த விளையாட்டு வசதிகளுக்கு அருகே, அமர்ந்து மற்றவற்களுடன் உரையாடுவதற்கு இருக்கைகள் இருக்கும். அங்கு நிறைய மக்கள் அண்டைவீட்டாருடனும் நண்பர்களுடனும் மாறினாலும் நேரில் முகத்தைப் பார்த்து பேசுவதற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அவ்வாறு பேசும்போது நம்முடைய பிரச்சினைகளையும் மனக்கஷ்டங்களையும் அவர்களுடன் பகிர்ந்துகொள்வோம். நம்முள்ளையே பிரச்சினைகளை வைத்துக்கொள்ளாமல் அதை மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்ளும்போது நம்முடைய மன உளைச்சல் குறையும். ‘நல்லிணக்கம் அல்லது அல்லற் படுத்தும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, நல்லிணக்கம் நம்முடைய வாழ்வின் மிக தலையாய அம்சம். சிங்கப்பூருடைய தனி சிறப்பே அது ஒரு பல இன, மத சமுதாயம் கொண்டதுதான். நான்கு இன மக்களும் சந்தோசமாகாவும் நிம்மதியாகவும் வாழும் ஒரு நாடு நம் நாடு. இதற்கு காரணம், இந்த நான்கு இனத்தினருக்கு இடையே உள்ள புரிந்துணர்வுதான். இந்தப் புரிந்துணர்வை ஏற்படுத்துவது விளையாடும் வசதிகளே ஆகும். பல இன மக்களும் ஒன்று சேரும் இடம் அது. ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்ற பழமொழிக்கு ஏற்ப, நாம் இவ்வாறு ஒற்றுமையாக இருப்பது நம்முடைய வாழ்வை உன்னதமாக்குகிறது. நாம் அங்கு ஒன்று சேர்ந்து விளையாடுவதாலும் பேசுவதாலும் நமக்கிடையே உள்ள புரிந்துணர்வு அதிகரிக்கின்றது. நம்முடைய வேற்றுமைகளை உள்ள புரிந்துணர்வு அதிகரிக்கின்றது. நம்முடைய வேற்றுமைகளை மறந்து அவர்களுடன் நன்றாக அங்கே பேசி பழகுகிறோம். அது ஒரு பொது இடம் என்பதால், முன்பின் சந்திக்காதவர்களைக் கூட நாம் சந்தித்து பேசி தெரிந்துகொள்கிறோம். அதனால், அந்த வட்டாரத்தில் நமக்கு இன்னும் அதிகமான நண்பர்கள் கிடைப்பார்கள். இதனால், நம்மால் சமூக நல்லிணக்கத்துடன் வாழ இயலுகிறது. மேலும், அங்கு அமர்ந்து பேசும் வாய்ப்புகளும் நமக்கு கிடைப்பதால் நாம் அந்த வட்டாரத்தில் உள்ளவர்களிடம் பேச முயல்கிறது, பல உறவுகள் மலர்கிறது. பெரும்பாலான நேரங்களில் உடற்பயிற்சி செய்யும் இடமும் விளையாடும் இடமும் அருகில் இருக்கும். அதனால், வயதானவர்களும் சிறு பிள்ளைகளும் பழகுவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இதனால், தலைமுறை இடைவெளியும் குறைகிறது. அந்த விளையாட்டு வசதிகள் அமைந்திருக்கும் இடங்களில் உணவை பகிர்ந்து உட்கொள்கிறார்கல். உணவைப் பரிமாறும்ப்போது அவர்கள் அன்பையும் பரிமாறுகிறார்கள். நாம் அந்த வட்டாரத்தில் வசிப்பவர்களுடன் நெருங்கி பழகுவது சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துகிறது. ‘ ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?’ என்றா பழமொழிக்கு ஏற்ப, தனிமனிதனாக வீட்டிலேயே இருக்கும்போது மகிழ்ந்து பேசலோ, பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்ளவோ நண்பர்கள் இருக்கமாட்டார்கள். ஆனால், இதைப் போன்றா விளையாட்டு வசதிகளை பயன்படுத்தி மற்றவர்களுடன் நெருங்கி பழகும்போது ஒரு வட்டாரம் ஒரு ஆனந்தமான சமுதாயமாகிறது ஒரு குடும்பமாகிறது. ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்ற பாடல் போல் அந்த வட்டாரமும் சந்தோசமாகவும் ஒரு கூட்டு குடும்பம் போலவும் சமுக நல்லிணக்கத்துடன் இருக்கும். ஒரு ஆலமரத்தைப் போன்றுதான் இந்த விளையாட்டு வசதி. வித்தியாசமான கிளைகளான மக்கள் இருப்பார்கள், எல்லா கிளைகளும் வித்துயாசமான கிளைகளான மக்கள் இருப்பார்கள், எல்லா கிளைகளும் வித்தியாசமானவை. ஆனால், எல்லா கிளைகளும் சேர்ந்து ஒரு எழில்மிகு மரமாகிறது. இதில் அன்பு, பாசம், நட்பு, ஆரோக்கியம் என்று பல மலர்களும் பூக்கின்றன. ஒரு நீரோடையைப் போல் சலனமின்றி இருக்கும் வாழ்க்கையை, இது போன்ர விளையாட்டு வசதிகள் வானவில்லை போல் வண்ணமயமாக்கின்றன. இன்னும் பத்து இருபது ஆண்டுகள் நாம் இந்த வட்டாரத்தில் இருப்பவர்களுடன் ஆரோக்கியமாகவும் நல்லிணக்கத்துடனும், அன்பும் பாசமும் நிறைந்த வாழ்வை வாழ இந்த விளையாட்டு வசதிகள் துணை புரிகின்றன. அதனால், சிங்கார சிங்கையான பூந்தோட்டத்தில், சிங்கப்பூரின் குடியிருப்பு பேட்டைகளில் உள்ள விளையாட்டு வசதிகளில், பட்டாம்பூச்சிகளான மக்கள் ஒற்றுமையாகவும் ஆரோக்கியத்துடனும் சிரகடித்துப் பறக்கின்றன.

No comments: