Wednesday, November 24, 2021

உன் நண்பர் எப்போதும் எதிலும் பிடிவாதமாக நடந்துகொள்வார். ஆனால், அவரது வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் அது தவறென்பதை அவருக்கு உணர்த்தி அவரிடம் மாற்றத்தைக் கொண்டுவந்தது. அதுபற்றி விளக்கி எழுதுக. - SAMIKSHA GIRISH 105 -2021

“திங்கட்கிழமை வகுப்பு முடிவதற்குள் எல்லா கட்டுரைகளும் என் மேசைமீது இருக்கவேண்டும், ” என்று ஆசிரியர் கூற என் முகம் வாடியது. 'மறுபடியும் கட்டுறையா?' என்று நான் நினைத்துக்கொண்டே தலைப்பைப் படித்தேன். 'பிடிவாதம்' என்ற வார்த்தையைப் பார்த்தவுடன் என் எண்ணங்கள் கிளர்ந்தன. பல வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் என் நினைவுக்கு வந்தது. நான் வகுப்பைவிட்டு முன்நோக்கி நடக்க, என் எண்ணங்கள் பின்நோக்கி சென்றன… 'மாறன்! அந்தக் கைத்தொலைப்பேசியைப் பார்த்தாயா? எவ்வளவு அழகாக இருக்கிறது! எனக்கும் ஒன்று வேண்டும்,' என்று என் தோழன், கவின் கூறினான். அன்று வெள்ளிக்கிழமை கதிரவன் உச்சி வானத்திற்கு வந்துவிட்ட நடுப்பகல் நேரம். அப்போது மதிய உணவு உண்பதற்கான இடைவேளை நரம் என்பதால், பள்ளி உணவகத்தில் கூட்டம் அலைமோதியது. எங்கும் ஒரே ஆரவாரமும் ஆர்ப்பாட்டமுமாய் இருந்தது. சில மாணவர்கள் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு கடைகளிலிருந்து உணவு வாங்க வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள். மற்ற சில மாணவர்கள் எங்கு நடந்துகொண்டிருப்பதைக்கூட கவனிக்காமல் கைத்தொலைபேசியில் மூழ்கியிருந்தார்கள். சிலர் மேசைகளில் உட்கார்ந்து மும்முரமாக தங்கள் வீட்டுப்பாடத்தைச் செய்துகொண்டிருந்தார்கள். மற்ற சிலர் புன்னகைத் தவழும் முகங்களுடன் தங்கள் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார்கள். நான் கவினுடன் மேசையில் உட்கார்ந்து, என் உணவைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் அண்மையில்தானே நீ புதிய கைத்தொலைபெசியை வாங்கினாய்? அது இன்னும் சரியாகத்தான் வேலை செய்கிறது அல்லவா? பிறகு ஏன் உனக்கு புதிய கைத்தொலைபேசி தேவை?' என்று நான் வினவினேன். புதிய பொருள்களைப் பயன்படுத்தினால்தான் மற்றவர்கள் என்னிடம் பேசி பழகுவார்கள், என்று அவன் கூறிவிட்டு, நான் பதிலளிக்கும் முன் 'போகவேண்டும்' என்று சோல்லி சென்றுவிட்டான். கவின் மிகவும் பிடிவாதமான ஒருவன் ஏன்று நான் அறிந்திருந்தேன். அவனுக்கு ஏதாவது வேண்டுமானால், அது தன் கையில் கிட்டும்வரை அவன் விடமாட்டான் என்று எனக்குத் தெரியும். உடுக்கை இழந்தவன் கைப்போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. என்று திருவள்ளுவர் கூறியதற்கேற்ப ஒரு நல்ல நண்பனாக இருந்து அவனிடம் பிடிவாதமாக இருப்பது தவறு என்று எடுத்துசொல்ல நான் பலமுறை முயற்சி செய்திருந்தேன். ஆனால், ஒவ்வோரு முறையும், என்னுடைய வார்ததைகள் செவிடனின் காதில் ஊதிய சங்குபோல் வீணாகி போயின. மறுவாரம், நான் பள்ளிக்கு வரும்போது, கவின் எல்லோரிடமும் தன் புதிய கைத்தொலைபேசியை காட்டுவதை நான் கண்டேன். அவனுடைய பிடிவாத குணத்தைத் தாங்க முடியாமல் மறுபடியும் அவன் விரும்பியதை வாங்கித் தந்த அவனுடைய பெற்றொரை எண்ணி வருந்தினேன். அவர்கள் இப்படி செய்துகொண்டே இருந்தால் பிற்காலத்தில் கவின் என்ன ஆவான்? என் மனத்தில் பல எண்ண அலைகள் தோன்றின. அப்பொது, என்னைக் கண்ட கவினின் முகம் சூரியனைக் கண்ட தாமரையைப் பொல மலர்ந்தது. 'பார்! எனக்கு கைத்தொலைபேசி கிடைத்துவிட்டது! நான் இப்போது மட்டில்லா ஆனந்தத்தை அடைந்துவிட்டேன்!' ஏன்று உற்சாகமாக கூறினான். ஆனால், நான் சிரிக்கவில்லை. அவனுடைய செயல் தவறு என்று அறிந்ததால், 'கவின்...' என்று சொல்ல ஆரம்பித்தேன். ஆனால், நான் பேசி முடிப்பதற்குள் அவன் இன்னொரு தோழனிடம் சென்று தன் புதிய கைத்தொலைபேசியை காட்டத் தொடங்கினான். அந்த இரவு, நான் என் மெத்தை மீது படுத்துக்கொண்டு பள்ளியில் நடந்ததைப் பற்றி நினைத்துக்கொஙண்டிருந்தேன். அவனை எப்படி திருத்துவது? என்ற கேள்வி மனத்தில் தோன்றியது. அப்போது, 'கவின்' என்று யாரோ கூறுவது என் செவிகளுக்கு எட்டியது. நான் சத்தம் வந்த திசையை நோக்கி நடக்க, அவ்வார்த்தை கூறியது என் அம்மாதான் என்று உணர்ந்தேன். 'இன்று காலை கவினின் அம்மாவுடன் நான் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டேன். அவர் கண் கலங்கி விட்டார், தெரியுமா? அவர் அண்மையில் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். அவர் இப்போது வேலையைத் தேடிக்கொண்டிருக்கிறார். ஆனால் எதுவும் கிடைப்பதில்லை என்று சொன்னார். தன் கணவரின் சம்பளத்தை மட்டும் வைத்துக்கொண்டு குடும்பத்தை நடத்துவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்றும், அவர்கள் இருவருக்கும் மிகவும் மன உளைச்சளாக இருப்பதாகவும் கூறினார். அது மட்டுமில்லாமல், கவினின் பிடிவாத குணம் உயர்ந்திருக்கிறது என்றும் அவர் சொன்னார். சென்ற வாரம் அவன் ஒரு புதிய கைத்தொலைபேசியை வாங்கித் தரும்படி அடம்பிடித்தான். இப்போது, அவன் விலை உயர்வான ஒரு பையை வாங்கித் தரும்படி கூறுகிறான் என்று அவர் விளக்கினார். விரும்புவது எல்லாவற்றையும் வாங்கித்தர முடியாது என்று அவர்கள் சொல்லும்போது, அவன் கேட்காமல் பிடிவாதம் செய்கிறான் என்று அவர் கூறினார். தங்களிடம் பணமில்லை என்பதை எப்படி எடுத்துறைப்பது என்று அவர் வருந்துகிறார், ' என்று அம்மா அப்பாவிடம் கூறுவதை நான் செவிமடுத்தேன். அப்போது, எனக்கு எண்ணம் மின்னலெனப் பளிச்சிட்டது. கவினைத் திருந்தவைக்க என்ன செய்யவேண்டும் என்று நான் புரிந்துகொண்டேன். மறுநாள், நான் வகுப்புக்குள் நுழைந்தவுடன் கவின் என் அருகில் வந்து, அவனுடைய பெற்றோர் புதிய பையை வஅங்க முடியாது என்று சொன்னதைப் பற்றிப் புலம்பிக்கொண்டிருந்தான். அப்போத் நான் அவனைத் தடுத்து நிறுத்தினேன். 'கவின், தான் சோல்வதைக் கவனமாகக் கேள்,' என்று ஆரம்பித்து என் அம்மா கூறிய செய்திகளை அவனிடம் சொன்னேன். நடந்ததைக் கேட்ட அவன் வாயைப் பிளந்து சிலையாய் இருந்தான். முத்துக்கள் போல கண்ணீர் சொட்டுகள் அவன் கண்களிலிருந்து வடிந்தன. அவனுடைய உலகமே இருண்டது போல இருந்தது. எ...என் அம்மா வேலையிலிருந்து நீ...நீக்க...நீக்கப்பட்ட செய்தி எனக்குத் தெரியவில்லை! இவ்வளவு நாளாக என் பிடிவாத குணத்தால் அவரும் என் தந்தையும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள். நான் நிலைமையைப் புரிந்துக்கொள்ளாமல் இப்படி ஓரு முறையில் நடந்துகொண்டேன்!' என்று அவன் அணலில் விழுந்த புழுபோல துடித்தான். 'நீ நடந்துகொண்ட முறை தவறு என்று புரிந்துகொண்டாய் அல்லவா? இன்று வீட்டிற்கு சென்றவுடன் பெற்றோரிடம் மன்னிப்புக்கேள். மீண்டும் இதுபோல பிடிவாதமாக நடந்துகொள்ளாமல் தேவையுள்ளதை மட்டும் கேளு, சரியா?' என்று நான் அறிவுரை கூறினேன். அவன் அவமானத்தில் தலை குணிந்து நின்றான். அந்த நாளிலிருந்து, அவன் பிடிவாதமாக நடந்துகொள்வதை நிறுத்தினான். அந்தச் சம்பவம் உண்மையாகவே அவனுக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்தது. இதைப் பற்றியே கட்டுரை எழுதலாம் என்று முடிவு செய்து, நான் வீட்டிற்குச் சென்றேன்.

No comments: