Saturday, November 13, 2021

சிங்கப்பூர் இளையர்களுள் பெரும்பாலோர் பரிவுணர்வு மிக்கவர்கள். விவாதிக்க

இஷா (304) 2021 “அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு அன்புதோல் போர்த்த உடம்பு” இக்குறளைப் பள்ளியில் படித்ததுடன் நிறுத்தாமல் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் சிங்கப்பூர் இளையர்களை எண்ணும்போது நான் அளவுகடந்த பெருமையடைகிறேன். “சிங்கப்பூர் இளையர்கள் பெரும்பாலோர் பரிவுமிக்கவர்கள்” என்ற தலைப்பை ஆதரிக்கும் வகையில் நான் இத்தலைப்பை மூன்று கோணங்களிலிருந்து ஆராயவுள்ளேன். என்ற தலைப்பை இளையர்கள் என்பவர் தொடக்கப்பள்ளியில் படிப்பவர்கள் முதல் புதிதாக வேலையில் சேர்ந்தவர்கள் வரை குறிப்பிடலாம். இவர்கள் வாழ்கையின் உச்சியில் மிகுந்த உற்சாகத்துடன் இருப்ப்தால் இவர்களுக்கு சமுதாயத்திற்க்கு பெரிய அளவில் பங்களிக்க முடிகிறது.பரிவு அன்பது எல்லா உயிரினங்களின் மீதும் அன்பையும் கருணையையும் செலுத்துவதைக் குறிக்கிறது. சரி நம் இளையர்கள் அவ்வாறு இந்த உன்னதமான் வழுமியத்தைக் கடைபிடிக்கிறார்கள்? பள்ளி சார்ந்த நடவடிக்கைகள், சமுதாய அளவில் சேவை, மற்றும் அன்மைய கொவ்ட்-19 சூழ்னிலையில் இளையர் அளித்த பங்கு ஆகிய மூன்று கோணங்களில் நாம் இத்தலைப்பை அலசி ஆரய்வோம். “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்ற உண்மையை உணர்ந்தே நம் பள்ளிகளில் ‘சேவை வழி விழுமியம்’ என்ற திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்னால் துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சமூகசேவை செய்து சமூகத்திற்கு நன்றிகடன் செலுத்துகிறார்கள். அவர்கள் முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள் போன்ற இடங்களுக்குச் சென்று தங்கள் நேரத்தையும் சேவையையும் தொண்டூழியமாக அளிக்கிறார்கள். என்றோ ஆரம்பிக்கப்பட்டத் திட்டம் இன்றும் வரவேற்புடன் சிறப்புற்றுத் தொடர்கிறது என்பதைக் கேட்க சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இத்திட்டத்தின் நீடித்தத் தன்மைக்குக் காரணம், அதன் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் நம் சிங்கப்பூர் மாணவர்களே ஆவர். அவர்களின் சிறியச் செயல்கள் மற்றவர்களின் வாழ்வில் பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்து மாணவர்கள் சேவைச் செய்கின்றனர். இவ்விளையர்களின் பரிவுணர்வு கடலலைப் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது என்பதற்கு வேறு சான்று வேண்டுமா? இளையர்கள் பள்ளி முடித்ததும் சமுதாயத்திலும் பல மாற்றங்களை வித்தியாசமான வகைகளில் உருவாக்கி வருகின்றனர். சமூக ஊடகங்களின் தாக்கம் காட்டுத்தீப் போல் பரவி இன்றைய உலகையே ஆட்டிப்படைக்கிறது. நம் இளையர்கள் அப்படி இதை நன்மைக்காக பயன்படுத்தலாம் என்ற எண்ணத்தில் தங்கள் கணிணி சார்ந்த அறிவைப் பயன்படுத்தி பல பரிவுமிக்க முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர்.’இட்ஸ் ரெய்னிங் ரெய்ன்கோட்ஸ்’ என்ற அமைப்பு முக நூலின் வழி பிரபலம் அடைந்து பல இளையர்களை ஈர்த்து வெளி நாட்டு ஊழியர்களுக்குப் பல வழிகளில் தொண்டூழியமும் உதவிகளையும் அளித்து வருகிறது. இளையர்களின் உதவியால் பல ஊழியர்களின் வாழ்வில் புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டுவருகிறது.இவ்வமைப்பைத் தொடங்கிய இளையர்களும், ஆதரவு தங்த இளையர்களும் மற்றவர்கள் பதிவேற்றம் செய்யும் படங்களையும் காணொலிகளையும் பார்த்து நேரத்தை வீணாக்காமல் வெளி நாட்டு ஊழியர்களின் மீது உள்ள பரிவினால் தொண்டூழியம் செய்தனர். அண்மை காலத்தில் கொவிட் கிறுமித்தொற்று இளையர்களின் பரிவை வெளிக்காட்ட மேலும் வாய்ப்பை அளித்தது. பொது இடங்களில் பாதுகாப்பு இடைவெளியை கண்காணிப்பதற்கு உதவியாளர்கள் தேவை என்று அரசாங்கம் அறிவித்தபோது பல இளையர்கள் தங்கள் சொந்த நலனையும் துச்சமாக மதித்து தொண்டூழியம் செய்ய முன்வந்தனர்.அவர்களின் பரிவுமிக்க முயற்சி நம்மிடையே தொற்றை ஓரளவு குறைக்க உதவியது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு அல்லவா? இல்லை! இந்த இளையர்கள் நல்ல பெயர் வாங்க தான் இவ்வாறு தொண்டூழியம் புரிகிறார்கள் என்று ‘தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று அடம் பிடிப்பவர்களிடம் ஒரு கேள்வி. யாராவது இளையர்களை வற்புறுத்தினார்களா? இல்லையே! இச்சேவையை செய்பவர்கள் தங்கள் சொந்த முயற்சி கொண்டு சமுதாயத்தில் மாற்றம் ஏற்படுத்துகிறார்கள். ‘அன்பிலார் எல்லாம் தமக்குறியர் அன்புடையார் எல்லாம் உரியர் பிறர்க்கு’ நம் சிங்கப்பூர் இளையர்கள் மற்றவர்களின் வாழ்கைத் தரத்தை எவ்வளவோ உயர்த்தியுள்ளனர்.இவ்வளவு சான்றுகள் இருந்தும் இளையர்கள் பரிவில்லாதவர்கள் என்று கூறுவது மூடத்தனம்.

No comments: