Monday, September 15, 2008

Saranya`s Letter

பேருந்துகளில் இளையர் சிலர் நடந்துகொள்வது பொதுமக்களுக்கு இடையூறாகவும் எரிச்சல் ஊட்டும்படியும் இருக்கிறது. இது குறித்துத் தமிழ் முழக்கம் செய்தித்தாளுக்கு ஒரு கடிதம்.


அனுப்புநர்:

மதி
புளோக் 125, அங் மோ கியோ சாலை 12
# 10 – 888
சிங்கப்பூர் 560 125


26.08.08

பெறுநர்:

ஆசிரியர்
தமிழ் முழக்கம்
555, அங் மோ கியோ அவென்யூ 5
சிங்கப்பூர் 569555



மதிப்பிற்குரிய ஐயா,

கரு: பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாகவும் எரிச்சல் ஊட்டும்படியும் நடந்துகொள்ளும் இளையர்கள்


வணக்கம்! பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாகவும் எரிச்சல் ஊட்டும்படியும் பேருந்துகளில் நடந்துகொள்ளும் சில இளையர்களைப் பற்றிய எனது ஆதங்கத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவர ‘தமிழ் முழக்கம்’ செய்தித்தாள் உறுதுணையாயிருக்கும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். என்னுடைய பல நண்பர்களும் இதைப் ஓப்னறு இளையர்களின் நடவடிக்கைகளால் மனதளவில் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.


நான் ஓர் இல்லத்தரசி.சந்தைக்குச் சென்று வீடு திரும்பும் வழியில் சில இளையர்கள் நாஃன பயணம் செய்துகொண்டிருந்த பேருந்தில் ஏறினர். அவர்களில் பதினைந்து வயதுடைய இளம் பெண்ணும் இளம் பையனும் மிகவும் ஆபாசமான முஐறயில் கட்டித் தழுவிக்கொண்டிருந்தனர். பேருந்தில் உள்ள அனைவரும் அருவருப்புடனும் எரிச்சலுடனும் தங்களைப் பார்ப்பது தெரிந்தும் அவர்கள் அதைப் பொருட்படுத்தவேயில்லை. மேலும், அவர்கள் பள்ளிச் சீருடை அணிந்திருந்னர். தங்களின் பள்ளிக்கு அவமானம் கொண்டுவருவதை நினைத்துப் பார்க்காமல் அவர்கள் செய்த லீலைகள் என்னை ஆழ்ந்த வருத்தத்திற்கு உள்ளாக்கின. இவர்களால் மற்ற நலல் இளையர்களும் தவறான வழிக்குச் செல்ல வாய்ப்புண்டு. இரு இளையர்களின் தாயாகயிருப்பதால் இச்சம்பவம் என் மனத்திரையில் மறுபடியும் ஓடி என்னைத் தூக்கமிழக்கச் செய்துவிட்டது.

இவை தவிர இளையர்கள் செய்யும் அட்டூழியங்கள் பல. பேருந்து பொதுப்போக்குவரத்து என்பதைச் சுத்தமாக மறந்து பல இளையர்கள் அளவுக்கதிகமாகச் சத்தம் போடுகிறார்கள். அச்சத்தத்தால் பலர், குறிப்பாகக் காலையில் வேலைக்குச் செல்வதால் அயர்ந்து தூங்குபவர்களும் மழலைகளும் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், மிகவும் பணிவன்பு நிறைந்த நாடு சிங்கப்பூர் என்ற பெயரை மாற்றும் வண்ணம் வாயைத் திறந்தால் சொல்லத் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர் இவ்விளையர்கள். இதனால் அதிர்ந்துபோன பல சுற்றுலாப் பயணிகள், சிங்கப்பூரைப்பற்றி என்ன நினைத்திருப்பார்கள்? சில இளையர்கள், வேற்று மதத்தினரைப் பற்றியும் இழிவாகப் பெசிப் பலரின் கோபத்தைத் தூண்டுகிறார்கள்.

பேருந்தில் சாப்பிடக்கூடாது என்று தெரிந்தும் சாப்பிடும் இளையர்களுமுண்டு. இது அவர்கள் எந்த அளவுக்குப் பொதுவிதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது. சிறு பிள்ளைகள்தான் ஓடிப் பிடித்து விளையாடுவார்கள் என்ற கருத்துக்கு மாறாக, இளையர்களும் அவ்வாறு செய்கிறார்கள். இது கர்ப்பிணி பெண்களுக்கும் உடல் ஊனமுற்றோருக்கும் முதியோர்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.

இறுதியாக என்னை மிகவும் பாதித்தது இதுதான். சில இளையர்கள் பெரும் கும்பல்களில் ஒளிந்துகொண்டு தங்களுடைய ஈ சிலிங் அட்டைகளைப் பயன்படுத்தாமல் தப்பித்துவிடுகிறார்கள். இன்றைய இளையர்களுக்கு இப்படிப்பட்ட எண்ணங்கள் இருப்பது என்னை ஆழ்ந்த துக்கத்தில் மூழ்கடித்தது. அவர்களைத் தட்டிக்கேட்டாலும் தவறே செய்யாததைப் போல் பாசாங்கு காட்டுகின்றனர்.

சிங்கப்பூர் இளையர்கள் பொறுப்பானவர்கள், பக்குமடைந்தவர்கள் என்றெண்ணிய எனக்கு இச்சம்பவங்கள் ஒரு பெரும் அதிர்ச்சியாகவே வந்துள்ளன. ஒரு பக்கம் நமது இளையர்கள் பல போட்டிகளில் பதக்கங்களைக் குவிக்க மறுபக்கத்தில் இப்படிப்பட்ட இளையர்களிருப்பது வேதனையளிக்கிறது. அப்படியென்றால் இளையர்களைப் பற்றிய எனது கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டியதுதான். இவ்வாறு என் இளைய பிள்ளைகளும் பாதிக்கப்பட்டுவிடுவார்களோ என்று பயம் என்னை ஆட்கொண்டுள்ளது. உங்கள் செய்தித்தாளின் மூலமாவது இவ்விளையர்களின் மனங்கள்மாறி இனி இதைப் போன்று செய்ய நினைக்கும் இளையர்களுக்கும் இது ஒரு பாடமாக அமையும் என்று நம்புகிறேன்.

இப்படிக்கு
உங்கள் உண்மையுள்ள
மதி.
(291 சொற்கள்)
சரண்யா சரவணன் 4 HTL 2008

6 comments:

Prashan said...

HELLO. very well written and well planned piece of work. nigh flawless in approach in content.

However i felt that in was quite long winded and many points could have been minimized without lacking in detail.

PRASHAN

vishnu said...

Good sequencing of points but they could have been better described. Other than that it was a good letter.

Torrous said...

You explained each problem well and the consequences to each problem. Very organised.

Vivegan
4/2(2009)

Me said...

the points were very good. the feelings of others were explained. very nice.

VETRON said...

Introduction wasn't good. Could have been better. Other than that letter was well-organised.

Anonymous said...

other than poor intro, v gd