Monday, September 15, 2008

Janani`s Essay

நீவிர் ஓர் இரவு விருந்து நிகழ்ச்சிக்குச் சென்றீர். குதூகலமாகத் தொடங்கி நடந்துகொண்டிருந்த அந்த நிகழ்ச்சியின் இடையே எதிர்பாராத வகையில் ஒரு குழப்பம் ஏற்பட்டு எல்லாம் தலைகீழாகப் போய்விட்டது. அந்த நிகழ்ச்சியை விவரித்து எழுதுக.
இடம் முழுவதும் வண்ண வண்ண விளக்குகள் ஜொலித்தன. பாட்டுச் இசையும் ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டிருந்தது. எல்லோருடைய முகத்திலும் ஆனந்தம் அலை பாய்ந்தது. அன்று என் சித்தப்பா மகளின் கல்யாணத்தையொட்டி அவர், உற்றார் உறவினர் அனவைருக்கும் ஒரு சிறப்பு இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். ஆகவே, அந்நிகழ்ச்சியில் நானும் என் குடும்பத்தினரும் கலந்துகொள்ளச் சென்றிருந்தோம்.

மணப்பெண்ணாகத் தோற்றமளித்த என் சித்தப்பா மகள் ராதா, அழகான ஒரு புடவையில் அனைவரையும் கவரும் வகையில் காணப்பட்டாள். அவர் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த அவரது மாப்பிள்ளையும் ‘ஜம்’ என்று இருந்தார். அம்மாப்பிள்ளை, ராதா அமெரிக்காவில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது அவளைப் பார்த்தாராம். இருவருக்கும் கண்டதும் காதல் மலர்ந்தது. விரைவில் கல்யாணத்திற்கு மாப்பிள்ளை வற்புறுத்தியதால் ராதாவும் என் சித்தப்பாவின் சம்மதத்துடன் திருமணத்திற்குச் சம்மதித்தார். ராதா கண்ணைக் கவரும் அழகு படைத்தவள்; நற்குணங்கள் நிறைந்தவள். அவளுக்கு இப்படி ஒரு நல்ல வாழ்க்கை அமைந்துவிட்டது என்று என் பெற்றோர்கள் பேசிக்கொண்டதை நானும் கேட்டேன். ராதாவைப் போல் நானும் காதல் திருமணம் செய்துகொள்ள விரும்பினேன். நன்கு எனது ‘ஓ’ நிலைத் தேர்வை எழுதி முடித்து, பின்னர் ‘ஏ’ நிலைத் தேர்வையும் சிறப்பாக எழுதித் தேர்ச்சி பெற்று வெளிநாட்டிற்குச் சென்று படிக்க உறுதி கொண்டேன்.

இரவு விருந்து நிகழ்ச்சியில் உணவிற்றகு குறையே இல்லை. அனைத்தும் அற்புதம். விதவிதமான உணவு வகைகள் மலை போன்று தட்டுகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மேசைகள் சுமை தாங்க முடியாமல் உடைந்துவிடும் நிலையில் இருந்தது. நான் எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக்கொண்டு அமர்ந்து உண்டேன். ஆட்டம் பாட்டம் கலைகட்டிக்கொண்டிருந்தது. பெரியோர்கள் எல்லோரும் கல்யாணத்தை ஒட்டி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். பிள்ளைகள் அனைவரும் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தனர். நான் மட்டும் அந்த இடத்தில் பதின்ம வயதினராய் இருந்ததால் செய்வதறியாது தவித்தேன். சிறு வயதினிலே எனக்கு ஆட்டம் பாட்டத்தில் ஆர்வம் குறைவு. விருந்து நிகழ்ச்சி சிற்றப்பாவின் தரைவீட்டின் தோட்டத்தில் நடந்துகொண்டிருந்தது. எனவே, உள்ளே சென்று தொலைக்காட்சி காணலாம் என முடிவு செய்தேன்.

தொலைக்காட்சியில் செய்திகளின் சாரம் ஓடிக்கொண்டிருந்தது. என் சிற்றப்பாவின் வீட்டில். ‘சன் டி.வி’ இல்லாததால் நான் செய்திகளையே பார்க்க முடிவெடுத்தேன். செய்திகள் தான் இன்னும் பத்து நிமிடங்களில் முடிந்துவிடுமே என்று நான் செய்திகளின் முடிவை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தேன். அப்போது முக்கியச் செய்தி அறிக்கை ஒன்று வெளிவந்தது. காவலர்கள் ஒரு முக்கிய ஏமாற்றுக் கும்பலைத் தேடிக்கொண்டிருந்ததாம். அக்கும்பல் அழகான பெண்களாகத் தேடிப் பிடித்து ஆசை வார்த்தை காட்டி கல்யாணம் செய்துகொள்ளுமாம். பின்பு பெண்களின் பணம், சொத்து, நகைநட்டு முதலியவற்றையெல்லாம் சுருட்டிக்கொண்டு அப்பெண்களை அமெரிக்கா போன்ற நாட்டிற்குக் கூட்டிச்சென்று விபச்சார விடுதியில் அம்மாதுகளை விற்றுவிடுவராம். அவர்களைப் பற்றி எச்சரித்துக் காவலர்கள் பல புகைப்படங்களைக் காண்ப்பித்தனர். நான் சட்டென்று திடுக்கிட்டேன். என் கால்கள் என்னைச் சுமக்க முடியாமல் தவிப்பதைப் போல் ஓர் உணர்வு. தொலைக்காட்சியில் திருமண வேடங்களில் ராதாவின் வருங்கால மாப்பிள்ளை தோற்றமளித்தார்.

நான் செய்வதறியாது தவித்தேன். என் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. விரைவாகச் சென்று என் பெற்றோரை அழைத்து வந்தேன். அவர்கள் வாயடைத்துப் போனார்கள். சட்டென்று என் தந்தை காவலர்களுக்குத் தொடர்புகொண்டு விஷயத்தைத் தெரிவித்தார். பின்பு நாங்கள் மூவரும் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு எல்லோரிடமும் அமைதியாக நடந்ததைக் கூறினோம். கேள்விப்பட்ட என் சிற்றப்பா சீற்றம் கொண்டு மாப்பிள்ளையை இரண்டில் ஒன்று பார்க்கப்போவதாகக் கிளம்பினார். என் தந்தை மட்டுமே அவரைச் சமாதானப்படுத்தி, கவாலர்கள் வரும்வரை பொருத்திருக்கச் சொன்னார். யாரும் ராதாவிடம் நடந்ததைக் கூறவில்லை; கூறவும் மனசு வரவில்லை. ஆனந்தமாகச் சிரித்துக்கொண்டிருந்த தனது மகளைப் பார்த்துக் கண்ணீர் தேங்கி நிற்கும் விழிகளுடன் அவர் தாயார் தோற்றமளித்தார். என் மனமும் வாணியது.

காவலர்கள் விரைந்து வந்தனர். அதிர்ச்சியில் மாப்பிள்ளையினால் தப்பிக்க முடியவில்லை. கோழியை அமுக்குவதைப் போல் அவனை அமுக்கிக்கொண்டு காவலர்கள் விரைந்தனர். ராதா பல நாட்களாகத் தொடர்ந்து அழுதாள். தனக்கு நடக்கவிருந்த சம்பவத்தை அவளால் பல வருடங்களுக்கு மறகக முடியவில்லை. ஏழுவருடங்கள் கழிந்த பின்னரே தனது திருமணம் தனது பெற்றோர்கள் பார்த்த மாப்பிள்ளையையே மணம் புரிந்துகொண்டாள். நானும் என் காதல் கல்யாண ஆசையை மனதிலேயே புதைத்தேன். என் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையையே கட்டிக்கொள்ள முடிவெடுத்தேன். (416 சொற்கள்)

ஜனனி. SEC 4 HTL 2008

3 comments:

vishnu said...

It was a good descriptive essay. The story was well told from the start. However, the ending could have been more well described and could have been finished with some proverbs.

Unknown said...

well done, good use of vocabulary...
excellent...

Madhumitha Pandiaraja said...

Strong and unique plot.