Sunday, May 17, 2009

I want to ask the GOD!

நான் கடவுளிடம் கேட்க விரும்புபவை

R. அஸ்வினி . உயர் நிலை 4 உயர்தமிழ். 22.4.2009

கடவுள்! இந்த நான்கு எழுத்து வார்த்தைக்குள் தான் எத்தைனை அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன? பலர் கடவுள் ஓர் உயர்ந்த சக்தி என்கிறார்கள். ஆக, கடவுள் என்பது, உலகிற்கு அப்பால் உள்ள, அண்ட சராசரத்தில் வசிக்கும் ஆறறிவு படைத்த மனிதனையும் ஐந்தறிவு படைத்த மிருகங்களையும் ஆளும் ஓர் உயர் சக்தி என்பதுதான் ஐதீகம். உலகத்தில் பிறந்து, கல்வி கற்று, சக்தி என்ற வார்த்தைக்கான அர்த்தத்தைப் புரிந்துகொண்ட நான் அந்த உயர் சக்தியிடம் சிலவற்றைக் கோர இருக்கிறேன்.

முதலாவதாக மனிதனைப் படைத்தாளும் இந்த உயர் சக்தியே பல சமயங்களில் மனிதனைக் கைவிட்டது ஏன் என்பதைக் கேட்டு அறிய விரும்புகிறேன். சமீபத்தில் நாடுகளைத் தாக்கிப் பல உயிர்களை ஈவிரக்கம் இல்லாமல் பறித்துச் சென்ற அந்தச் சுனாமியிலிருந்து மனிதனைக் காக்க ஏன் கடவுள் வரவில்லை? பச்சிளம் குழந்தைகளும் சிறுவயது பாலர்களும் தங்கள் பெற்றோர்களை இழந்து வீதியில் கதறி அழுமாறு செய்த அந்தக் கொடிய ராட்சசனை ஏன் அவர் தடுக்கவில்லை? அப்படி என்றால், கடவுள் என்பவர் மனிதனைக் கடலில் தள்ளி வேடிக்கை பார்க்கும் கல்நெஞ்சம் கொண்டவரா? மனிதனைப் படைத்து அவனுக்கு மகிழ்ச்சி என்ற உயிர் நாடியை ஊட்டிய அவர், எவ்வாறு கல் நெஞ்சம் கொண்டவராக இருக்க முடியும்? இதனை அந்த உயர் சக்தியிடம் கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இரண்டாவதாக உலகத்தில் சட்டத்தைப் படைத்து நியாயத்தை நிலைநிறுத்த முற்பட்ட அவர் ஏன் மனிதனுக்குள் பிரிவினைகளை உண்டாக்க வேண்டும்? மதத்தால், மொழியால், கலாசாரத்தால், நிறத்தால் ஏன் மனிதர்களுள் வேறுபாடுகளை உண்டாக்க வேண்டும். பலவகையில் மனதளவிலும் சமூகத்தின் அளவிலும் வேறுபட்டுக் கிடக்கும் மனிதர்கள் எவ்வாறு ஒற்றுமையாக வாழ முடியும். இத்தகைய வித்தியாசங்களால் தங்களைச் சுற்றி ஒரு வட்டத்தை வரைந்துகொண்டு சிலர் ஒதுங்கிவிட, சிலர் தங்கள் வித்தியாசங்களைப் பெரிதாக எண்ணிக்கொண்டு சண்டையிடுகின்றனர். இதனால், புவியில் அமைதி என்பது குலைக்கப்பட்டுவிட்டது. ஒரு குழுவை அமைத்து அமைதியைத் தேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் நாம். இது ஏன்?

மூன்றாவதாக, பசி, பட்டினி, வறுமை என்ற கொடியவற்றை ஏன் படைக்க வேண்டும்? ஒருபக்கம் மைனாக்களைத் துரத்தி விளையாடும் சந்தோஷமான குழந்தைகள். மறு பக்கம் கழுகுகளால் துரத்தப்படும் பட்டினியால் எலும்பும் தோலுமான குழந்தைகள். இந்த இரு பக்கம் எதற்கு? அமுதத்தைப் படைத்த நீ, ஏன் ஆலகால விஷத்தையும் படைத்தாய்? ஏன்?எதற்காக? பட்டினியில் வாடி வதங்கும் பச்சிளம் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களுக்கு இவ்வளவு கடுமையான தண்டனை அவசியம் தானா? அவசியம் என்றால் அதற்கான காரணம் என்ன?

அடுத்ததாக, வியாதிகள். கண்களுக்குத் தெரியாத சிறு சிறு கிருமிகள் உண்டாக்கும் குணப்படுத்த முடியாத வியாதிகள். புற்றுநோய். எயிட்ஸ் போன்றவற்றை ஏன் கடவுள் உருவாக்கினார்? இந்த நோய்களுக்கு இன்றுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. சிறுசிறு நோய்கள் வந்துபோனால் உடல் மேலும் வலுப்பெறும் என்பது விஞ்ஞான உண்மையாகும். ஆனால், உயிரைப் பறிக்கும் நோய்களின் நோக்கம் என்ன? உலகு மிகவும் கூட்டமான இடமாக மாறுவதைத் தவிர்க்கக் கடவுள் கையாளும் ராட்சச வழிகளுள் இதுவும் ஒன்றோ. இந்த நோய்களின் நோக்கத்தை நான் கடவுளிடம் கேட்டு அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

கடைசியாக உலகில் நிறைய அநியாயங்கள் நடக்கின்றன. கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்று நிறைய அநியாயங்கள் உககெங்கும் எப்பொழுதும் நடந்துகொண்டே இருக்கின்றன. இவை நடப்பது மனிதர்களின் தீய எண்ணங்களாலும் குணங்களாலும்தான் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால், நான் கடவுளிடம் இவற்றைத் தடுக்கும் சக்தி வாய்ந்த ஆயுதத்தை உருவாக்கக் கூறுவேன். அநியாயங்களை இந்த ஆயுதம் ஒடுக்கும். அநியாயம் செய்பவர்களை இந்த ஆயுதம் தண்டிக்கும். அதுமட்டுமன்றி மனிதர்களுள் தீய எண்ணங்களும் குணங்களும் எழாமல் தடுக்கும். இப்டிப்பட்ட ஒர் மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதத்தைக் கடவுள் படைக்க நான் அவரிடம் கோருவேன்.

ஆயுதம் படைத்தால் மட்டும் போதுமா? அதனைப் பயன்படுத்த ஒருவர் வேண்டுமே? நான் ஒரு நியாயவாதி. அநியாயங்களைக் கண்டு, என் மனம் ஆத்திரத்தில் பொங்கி எழுந்தாலும் என்னால் அவற்றைத் தடுக்க முடியாத நிலை. என் எதிரிகளுக்குக் கூட நான் நன்மையையே நினைப்பேன். எந்த ஒரு சூழ்நிலையிலும் என் உணர்ச்சிகளுக்கு அதிக இடம் கொடாமல் என் அறிவைக் கொண்டு சிந்திக்கும் ஆற்றல் படைத்தவள் நான். ஆகவே, கடவுள் என்னிடம் அந்தச் சக்தி வாய்ந்த ஆயுதத்தை ஒப்படைக்குமாறு கோருவேன். அப்படி அவர் செய்தால், உலகில் அமைதி என்றும் நிலவும். அனைவரும் நல்ல வழியில் செல்வர் என்று, நான் அவருக்கு உறுதியளித்து அந்த ஆயுதத்தை என்னிடம் ஒப்படைக்குமாறு அவரிடம் வேண்டுவேன்.

நான் கடவளிடம் அதீத நம்பிக்கையுடையவள். தினமும் கடவுளை வணங்கும் ஒரு பக்தை நான். எனவே, என் பக்தியால் கடவுள் திருப்தி அடைய நிறைய வாய்ப்புகள் உள்ளன என்பதை இங்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அதனால், இன்று முதல் இக்கட்டுரையைப் படிக்கும், நீங்கள் அனைவரும் நியாயமாக நடந்துகொள்ளுங்கள். அல்லாவிடில் வெகுவிரைவில் என்னைச் சந்திக்க நேரிடலாம்!

11 comments:

Prashan said...

HELLO this is a very long interesting article. there are many strong points that accentuate the prowess of the author's spectrum of your vocabulary.

HOWEVER, i feel it would have been made better if you were more indepth in divulging the array of religions as an introduction to show the meaning of god.

Overall it was bad

With honour and grace and virtue for the blessed land India, PRASHAN(4/2 09)

Haritha M said...

Aswini's compo:

Nice touch, you thought of the various points at different angles.

It could have been made better by writing one paragraph on the good thing done by god. Maybe you could have quoted some figures on the death rate of the tsunami etc.

R.Arvindren said...

I like the essay very much.It has a unique story-line that varies from mine. Anyway,there has been many interesting phrases that has been used in the essay that seems appealing to me and leaves me yearning more of your essays.

Unknown said...

nice points and well-ordered...


But i disagree with your opinions...
u are blatantly blaming everything that
man made a mistake in, as god's fault...
if there were someone as god,he probably made this world with full of greens and nature, and its man's activities such as globalization and tinkering with mother nature that caused all this things u mentioned...

Thank you,
R Arvind(4/2 09)

10 people said...

The compo has many good words and phrases that enhance the appeal of the compo. Good job

mkr
4/2 (2009)

Dax :) said...

The compo was very interesting with many details which were very enlightening.

However, it is a bit complicated to understand at times and the stand should be made clearer.

solokia said...

Hello, nice essay with many good points touched on.

The essay can be improved by including more facts and figures to make the arguments more convincing.

Torrous said...

Very organised and smooth flowing. Nice vocabulary.

Vivegan
4/2(2009)

Me said...

many interesting points. and good vocabulary.

Lakshmi
4/1 09

VETRON said...

It was a well-written compo. Points were well-organised. Keep up the good work!

Anonymous said...

well written and organised points....but i personally did not enjoy it as it was deathly boring with little to no excitement. still, compos are nt meant to be interesting so gd job