அறிமுகம்
கதாக் காலட்சேபம்
தலைவர்: முன்னொரு காலத்திலே பாரத தேசத்திலே ஒரு கிராமத்திலே சரவணன் சரவணன்னு ஒரு இளைஞன் இருந்தான்.
குழுவினர்: ஆமாம். ஆமாம். இருந்தான்.
தலைவர்: சரவணனுக்கோ ஒரு குறையுமில்ல. ஆனால், அவனோட வயதான பெற்றோருக்கோ கண் இரண்டும் தெரியாது. அதனால, சரவணன்தான் அவாளுக்குப் பணியாள், பக்க துணை எல்லாம்.
இப்படி இருக்கையில ஒரு நாள் அவனோட பெற்றோருக்கு ஒரு ஆசை வந்துச்சு.
சின்ன சின்ன ஆசை. சிறகடிக்கும் ஆசை. முத்து முத்து ஆசை. முடிஞ்சு வைச்ச ஆசை.
குழுவினர்: என்ன ஆசை சொல்லுங்கோ
தலைவர்: காசி, ராமேஸ்வரம் போகனும்னு ஆசை. அதை மெதுவா சரவணன் காதுல போட்டாங்க. சரவணனுக்கோ பெத்தவங்களோட ஆசையை நிறைவேத்தனுமேன்னு கவலை. சிந்திச்சான்... சிந்திச்சான்.. ராத்திரியெல்லாம் சிந்திச்சான். விடிய காலையிலே வீட்டுப் பின் பக்கம் போனான். ஒரு பெரிய மூங்கில் கம்பை எடுத்தான்.
குழுவினர்: அடடா என்னன்னா? பெத்தவாளா அடிக்கப் போறானா?
தலைவர்: அபிஷ்டு. அபிஷ்டு
.. பெரிய கம்ப எடுத்து, அதுல முன்னாலயும் பின்னாலயும் ஒவ்வொரு பெரிய கூடைய வெச்சு
கட்டினான். அந்தக் கூடைக்குள்ள அவா ரெண்டு பேரையும் தூக்கி ஓக்கார வெச்சான். கிளம்பிட்டான்
காசிக்கு..
எப்படி புறப்பட்டான் தெரியுமோ?
தலைவரும் குழுவினரும்:
ஈஸ்வரா வானும் மன்னும்
கேண்ட் சேக் பண்ணுது
உன்னால் ஈஸ்வரா!
நீரும் நெருப்பும்
பிரண்ட்ஷிப் ஆனது
உன்னால் ஈஸ்வரா
மயிலையிலே கபாலீஸ்வரா
கயிலையிலே பரமேஸ்வரா
அப்படின்னு பாடிண்டே புறப்பட்டான்.
குழுவினர்: ஆமாம் ஆமாம் பாடிண்டே புறப்பட்டான்.
தலைவர்: சரவணனோ வயசால சின்னப் பையன். ஆனாலும் மனசால பெரியவன்... பெரியவன். குணத்தால சிறந்தவன். ஆகையினாலே காடு, கோடு, புல், மலை,மழை, ஆறு, வாய்க்கால், குளம், குட்டை இப்படி எல்லாத்தையும் கடந்து நடந்தான். ஆனால், பையன் கொஞ்சங்கூட அலுக்கலை, அசரல, அதாவது He never grumble lha.
குழுவினர்: ஏன்னா? அந்தப் பையனுக்கு எங்கேயும் தடங்கல் வரலியோ?
தலைவர்: வந்துது.
வந்துது. வராம இருக்குமோ?
அப்போல்லாம் என்ன பண்ணுவான் தெரியுமோ?
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா
தடைக்கல்லும் உனக்கு ஒரு படிக்கல்லப்பா
என்று பாடிக்கொண்டே போவான். அப்படி போய்க்கிட்டிருக்கிற வழியில, வழக்கம்போல ஒரு காடு வந்துச்சு. அந்தக் காட்டு வழியா போய்க்கிட்டிருந்தான். அப்போ அப்பாவும் அம்மாவும் குடிக்க தண்ணி வேணும்னு கேட்டாங்க. சரவணன் உடனே, அவா ரெண்டு பேரையும் கீழே உட்கார இறக்கி உட்கார வெச்சுட்டு தண்ணி கொண்டு வரப்போனான்.
குழுவினர்: எப்படின்னா புறப்பட்டான்?
தலைவர்: புறப்பட்டான் வீர
நடை கொண்டு புறப்பட்டான்
வெற்றி நடைகொண்டு புறப்பட்டான்.
நடந்தவன் ஒரு நீரோடையை அடைந்தான். கையில் இருந்த சொம்பைத் தண்ணீருக்குள் அமுக்கினான். தண்ணீர் சொம்புக்குள்ள பப். பட் என்ற pubbling sound ஓடு நிறைஞ்சது. அப்போ. அந்தக் காட்டுல ஒரு மரத்துக்குப் பின்னால, மறைஞ்சிருந்தான் ஒரு மக்கு ராஜா. மட சாம்பிராணி ராஜா. அவன், ஏதோ விலங்கு தான் தண்ணி குடிக்குதுனு தப்பா நினைச்சுட்டான். எடுத்தான் வில்லை. விட்டான் அம்பை.
ஆ.. அம்மா. என்ற சத்தத்தால் காடே அதிர்ந்தது. ஓடின மான்கள் மருண்டு நின்றன. பறந்த பறவைகள் பதறி சிறகடித்துக்கொண்டன.
குழுவினர்: அடடா! என்ன ஆச்சு? என்ன? ஆச்சு
சோதனை மேல் சோதனை போதுமடா
சாமி
வேதனைதான் வாழ்க்கை
என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை.
அம்பி சரவணன் அம்பு
தாக்கினதால குற்றுயிரும் குறையுயிருமாய் விழுந்தான்.
ராஜா ஓடோடி வந்தான். பையனைத் தூக்கினான்? நீ யாரப்பா? நீ யாரப்பா? என் இங்கு வந்தப்பா? ன்னு கேட்டான். பையன் நடந்ததை எல்லாம் சொன்னான்.
நானொரு முட்டாளுங்க.
நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க.
நானொரு முட்டாளுங்க நானொரு முட்டாளுங்க
என்று அரற்றியபடி அரசன் பையனிடம் அவனோட கடைசி ஆசை என்னன்னு கேட்டான். பையன் தன் பெற்றோரின் தண்ணீர் தாகத்தைச் சொன்னான். அவர்களின் புனிதப் பயணத்தை நிறைவேத்தி வைக்கச் சொன்னான். பொசுக்குன்னு உயிரையும் விட்டான்.
ராஜா ஆறா மனத்துயரோடு
சரவணின் ஆசைகளை நிறைவேற்ற உத்தரவிட்டான்.
இத்தோட கதை முடியறது. இதுவரைக்கும் காதுகொடுத்துக் கதை கேட்டவாளுக்கும். என்னோட கதை சொன்னவாளுக்கும் நன்றி. நன்றி.
தலைவரும் குழுவினரும்:
வாழிய வாழியவே!
சரவணன் நாமம்
வாழிய வாழியவே வாழியவே!
வாழிய வாழியவே வாழியவே!
*********************************
No comments:
Post a Comment