மாணவர்களே சில செய்யுள்களை இங்கே கொடுத்துள்ளேன். அவற்றை நீங்கள் உங்கள் கட்டுரைகளில் மேற்கோள்களாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதைவிடச் சற்று நீளமான செய்யுள்களை அடுத்த முறை தருவேன்.
செய்யுள் - கொன்றை வேந்தன்
1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
( நாம் நம் பெற்றோர்களை வணங்க வேண்டும். அவர்களே முதலில் வணங்கத் தக்கப் பெருமை உடையவர்கள்)
2. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்.
( கல்வி ஒருவர் உலில் உள்ள உறுப்புகளிலேயே மதிப்பு மிக்க கண்ணைப் போன்றது. எனவே, அக்ல்வியை மதித்துப் போற்ற வேண்டும்)
3. கீழோர் ஆயினும் தாழ உரை.
(நாம் நம்மைவிட அறிவிலோ செல்வத்திலோ வயதிலோ குறைந்த ஒருவரிடம் பேசினாலும் அவரை அலட்சியப்படுத்தாமல் பணிவாகவே பேச வேண்டும்.)
4. சூதும் வாதும் வேதனை செய்யும்.
(வஞ்சகமான செயல்களைச் செய்யக்கூடாது. ஏனென்றால் அவை நமக்குத் துன்பத்தையே உண்டாக்கும்.)
5. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்.
(சோம்பேறிகள் வாழ்க்கையில் முன்னேற முடியாது.
அவர்கள் தம் வாழ்வில் துன்பம்தான் மிஞ்சும். அதனால்
அவர்கள் வருந்த நேரிடும்.)
6. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
(ஒருவருக்கு அவருடைய அப்பாவின் அறிவுரையே மேலானது.)
7. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை.
(அம்மாவைவிட வணங்கத் தக்க வேறு ஒரு கோவில் இல்லை. அதாவது அம்மாவை மதித்துப் போற்ற வேண்டும்.)
8. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.
(கடல் கடந்தும் வெளிநாடுகளுக்குச் சென்று பொருட்செல்வத்தைச் சம்பாதித்து வரவேண்டும்.)
9. தீராக் கோபம் போராய் முடியும்.
(ஒருவர் மேல் நாம் கொண்ட கோபத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து இறுதியில் அந்தக் கோபத்தை மறந்தே விடவேண்டும். அதற்கு மாறாக மேலும் மேலும் அவர் மேல் கோபத்தை வளர்த்துக்கொண்டே போனால், சண்டையே ஏற்படும். அது தீராப் பகையாய் முடிந்துவிடும்.)
10. நல்லிணக்கம் அல்லல் படுத்தும்.
(நல்ல இணக்கத்தோடு பழகாவிட்டால் துன்பமே ஏற்படும்.)
11. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்.
(பாலோடு உண்ணும் எளிய உணவே ஆனாலும், உண்ண வேண்டிய காலத்தில் உண்ண வேண்டும்.)
12. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்.
(பெரிய செல்வந்தன் ஆனாலும், முன்பு உண்ட உணவு நன்றாகச் செறிக்கச் செய்து அதன்பிறகு உண்ண வேண்டும்.
பெரிய செல்வந்தன் ஆனாலும், உணவுக்காக அதிகம் செலவிடாமல், தன் செல்வ நிலை அறிந்து அளவோடு செலவு செய்து உண்பாயாக.)
Subscribe to:
Post Comments (Atom)
ஒருவர் ஆற்றல் மிக்க தலைவராகத் திகழ்வதற்குப் பண்புகளைவிடத் தலைமைத்துவத் திறன்களே தேவை. விவாதிக்க.
லக்ஷணா ராஜதுரை உயர்நிலை 3 - 2024 ஆம், ஒருவர் ஆற்றல...
-
மொழி மனிதன் பேசுவதற்கும் எழுதுவதற்கும் படைத்துக்கொண்ட மொழி இல்லை என்றால், இன்றைய நாகரிக வளர்ச்சியே இல்லை. உலகின் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கு...
-
இங்குக் கூடியிருக்கும் அவையோர் அனைவருக்கும் எனது முத்தமிழ் வணக்கங்கள். நீங்கள் எப்போதாவது உலகத்திலுள்ள பல நாடுகளை ஆராய்ந்து பார்த்திருக்கிறீ...
No comments:
Post a Comment