பாண்டியன்
மல்லிகா ஶ்ரீ - 405
- 2025
எல்லாத்துறைகளிலும்
சிறப்பாகச் செய்யும் நாடுகளில்,
அமெரிக்க, ஜப்பான், பின்லாந்து,
சிங்கப்பூர் போன்ற பற்பல நாடுகள் அடங்கும். இந்நாடுகள், எல்லாத்துறைகளிலும் சிறப்பாகச் செய்வதால், அந்நாட்டு
மக்கள் மனநிறைவு அடைகிறார்களா? முதலில், மனநிறைவு எப்படி நம் வயிறு நிரம்பியவுடன் போதும் என்று தோன்றுகிறதோ,
அவ்வாறு மனம் கிடைத்ததை வைத்து நிறைவு அடைவது ஆகும். ஆனால், எல்லாத்துறைகளிலும் சிறப்பாகச் செய்யும் நாடுகளில், போட்டித்தன்மை,
விலைவாசி உயர்வு, அதிகரித்த எதிர்பார்ப்புகள்,
மனஅழுத்தும் போன்ற காரணங்களால் அந்நாடுகளில் வாழும் மக்கள் எளிதில்
மனநிறைவு அடைவதில்லை என்பது என் ஆணித்தரமான கருத்தாகும். இக்கட்டுரையில், எல்லாத்துறைகளிலும் சிறப்பாகச் செய்யும் நாட்டில் வாழும் மக்கள் எளிதில்
மனநிறைவு அடையாததன் காரணங்களை விளக்குகிறேன்.
முதலாவதாக, போட்டித்எண்மை
அதிகரிப்பு. எல்லாத்துறைகளிலும் சிறப்பாகச் செய்யும் நாடுகளில், எடுத்துக்காட்டாக, தொழில் நுட்பம் அதிவேகத்தில்
வளர்ச்சி அடைந்து வருகிறது. அசுரவளர்ச்சி அடைந்து வரும் தொழில்நுட்பத்திற்கேற்ப
தம்மை மாற்றிக்கொள்ள இயலாதவர்களால், போட்டித்தன்மை மிகுந்த
உலகில் முன்னேற இயலாது. இம்மாதிரியான போட்டித்தன்மையால், குறைந்த
வாய்ப்புகள் ஏற்படுகின்றன. அதோடு, வேலை செய்பவர்களும்
தொடர்ந்து தங்கள் வேலைகளைச் சிறப்பாகச் செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதனால்,
வேலை வாய்ப்புகளைத் தேடும் நபர்களும் வேலை வாய்ப்பை நழுவவிடாமல்
கடினமாக உழைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும் நபர்களும் போட்டித்தன்மையால்
மன அழுத்தத்திற்கு ஆளாகுகின்றனர்.
உதாரணமாக, 2024 ஆம் ஆண்டில்,
எல்லாத்துறைகளிலும் சிறப்பாகச் செய்யும் ஒரு நாடாக திகழும்
சிங்கப்பூர், போட்டித்தன்மைத் தரவரிசையில் மீண்டும் முதலிடம்
பெற்றதாக 'தமிழ் முரசு குறிப்பிட்டது. மேலும், சிங்கப்பூரில், மன அழுத்த சதவீதம் 2021 ஆம் ஆண்டு முதல் படிப்படியாக அதிகரித்து வருகிறது என்றும், 87 சதவீதம் சிங்கப்பூரர்கள் மன அழுத்தத்தை உணர்ந்ததாக
தெரிவித்துள்ளனர் என்று 'CNA' தெரிவித்துள்ளது.
இதனால், சிங்கப்பூரில் கல்வித்துறை சிறந்து விளங்குவதால்,
அனைத்து மாணவர்களுக்கும் போதுமான கற்றல் பாடங்கள் வழங்கப்படுகின்றன.
இதனால், அனைத்து மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க,
கடினமாக உழைத்து கற்றுக்கொள்கிறார்கள். சிங்கப்பூர் மாணவர்கள்
தேர்வுகளில் சிறப்பாகத் தேர்ச்சிபெறாமல் இருந்தால், மன
உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர்.
‘NTU’ வெளியிட்ட
தகவலின்படி, 86 சதவீதம் சிங்கப்பூர் மாணவர்கள் மன
உளைச்சலுக்கு ஆளாகின்றனர். கல்வித்துறையில் அல்லது எல்லாத்துறைகளிலும் சிறந்து
விளங்கும் நாடுகளில் போட்டித்தன்மை அதிகரிப்பால் அந்நாட்டு மக்கள் மனநிறைவு
அடைவதில்லை. பொருளாதார உயர்வுக்கும் காரணமாக அமைந்துள்ளது. ஒரு நாடு எல்லாத்துறைகளிலும்
சிறந்து செயல்படுவதால், அதனுடைய பொருளாதாரமும் உயரும்.
அந்நாட்டில் பொருளாதாரம் அதிகரிப்பால், விலைவாசியும்
உயருகிறது. விலைவாசி உயர்ந்தாலும், மக்களது சம்பளம்
அதிகமாகாமல் இருப்பதால், மக்கள் பணப்பற்றாக்குறையால்
பாதிக்கப்படுகின்றனர். வாழ்க்கையின் தினசரி தேவைகள் படிப்படியாக உயர்கின்ற
நிலையில், பணப்பற்றாக்குறை ஏற்படுவதால், மக்கள் மேலும் கடினமாக உழைக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
இதனால், மக்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகிவிடுகின்றனர்.
எடுத்துக்காட்டாக, மருத்துவத்திலும்
சிறந்து விளங்கும் நாடாகத் திகழும் சிங்கப்பூரில், மருத்துவ
சேவைகளின் செலவுகள் மிகவும் விலையுயர்ந்ததாக இருக்கின்றன. மருத்துவ சேவைகளின் தரம்
உயர்ந்ததாக இருப்பதால், கட்டணங்களும் அதிகரிக்கின்றன. இதனால்,
மக்கள் மருத்துவச் செலவுகளைக் கண்டு மன உளைச்சலுக்கு
உள்ளாகின்றனர்.இதனால், எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்கும்
நாட்டில் வாழும் மக்கள், விலைவாசி உயர்வால், மனநிறைவு அடைவதில்லை.
மூன்றாவதாக, அதிகரிக்கும்
எதிர்ப்பார்ப்புகள். எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்கும் நாடுகளில், பெரும்பாலான சேவைகளும் வசதிகளும் சிறந்த
தரத்தில் இருக்கும். இவையெல்லாம் மந்திரத்தினால் வருவதில்லை, அந்நாட்டில் உள்ள உழைப்பாளர்கள் கடினமாக உழைத்து நாட்டின்
பொருளாதாரத்தை
உயர்த்தியும், அரசாங்கத்தின் நல்ல அணுகுமுறைகளாலும் திட்டங்களாலும் உருவாக்கப்படுகின்றன.
எல்லாத்துறைகளிலும் சிறந்து செயல் படுகின்ற நாடாக உலகளவில் தோன்றுவது அந்நாட்டின் மக்களுக்குப் பெருமையாக இருப்பதோடு மற்ற
நாடுகளுக்கும் அந்நாடு ஒரு முன்மாதிரியாகத் திகழும். எல்லாத்துறைகளிலும் சிறந்து
விளங்கும் நாடு என்ற முத்திரையை ஒரு நாடு அடையும்போது, அதைப்
பல வருடங்களுக்கு தக்கவைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று அந்நாட்டு மக்களும்
அரசாங்கமும் ஆசைப்படும். இதனால், இம்முத்திரையை நிலைக்க
வைக்க, அந்நாட்டு மக்கள் மேலும் தங்களது. வேலைகளில் சிறந்து
செயல்பட்டு, மேலும் கடினமாக உழைக்கவேண்டிய நிலைக்குத்
தள்ளப்படுகிறார்கள். இம்மாதிரியான எதிர்பார்ப்புகளால், எல்லாத்துறைகளிலும்
சிறந்து செயல்படும் நாட்டில் வாழும் மக்கள் மனநிறைவு அடைவதில்லை.
"மனநிறைவு
என்பது இயற்கையாகவே நம்மிடம்
உள்ள செல்வம். ஆடம்பரம்
என்பது நாமே
தேடிக்கொள்ளும் வறுமை”
என்று சாக்ரடீஸ்
கூறியதுபோல, மனிதர்களாகிய நாம், நம்மிடம் இருப்பதை வைத்து
எந்நேரமும் மகிழ்ச்சியாகவோ மனநிறைவாகவோ இருந்ததில்லை. நாம் எப்பொழுதும் முன்னேறப்
பார்க்கிறோம். இதனால், நம்மிடம் இருக்கும் செல்வத்தை நாம்
பொருட்படுத்தாமல், மற்றவர்களின் வளர்ச்சியைக் கண்டும்,
நம்மை நாமே மாற்றிக்கொள்கிறோம்.
இதனால், எல்லாத்துறைகளிலும்
சிறந்து செயல்படும் நாடுகளில் இருக்கின்ற மக்கள், தங்களது
நிலையின் மதிப்பை அறியாமல் நன்றியற்றவராக இருக்கின்றனர். எல்லாத்துறைகளிலும்
சிறந்து செயல்படாத நாடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலையை ஒப்பிடும்போது,
எல்லாத்துறைகளிலும் சிறந்து செயல்படும் நாடுகளில் வாழும் மக்களின்
நிலை ஓரளவிற்கு மேம்பட்டு இருக்கும். ஆனால், இதை அந்நாட்டு
மக்கள் புரிந்துகொள்ளாததாலும், அந்நாடு வழங்கும் வசதிகளையும்
சேவைகளையும் பொருட்படுத்தாததாலும், அந்நாட்டு மக்கள்
மனநிறைவு அடைவதில்லை. தங்களிடம் இருக்கும் செல்வத்தை வைத்து அவரவர்கள்
மகிழ்ச்சியுடன் இருந்தாலே, அவர்கள் எப்பொழுதும் மனநிறைவாக
இருப்பார்கள். இதனால், எல்லாத்துறைகளிலும் சிறந்து
செயல்படும் நாடுகளில் வாழும் மக்கள், மனிதனின் ஆசைப்படும்
குணத்தால் மனநிறைவு அடைவதில்லை.
இக்கட்டுரையில், எல்லாத்துறைகளிலும்
சிறந்து செயல்படும் நாடுகளில் வாழும் மக்கள் மனநிறைவு அடையாததற்கான காரணங்களைப் பற்றி என் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன். சுருக்கமாக,
அதிகரிக்கும் போட்டித்தன்மையினால் ஏற்படும் மன அழுத்தம், பொருளாதார உயர்வால் விளையும் விலைவாசி உயர்வு, 'எல்லாத்துறைகளிலும்
சிறந்து செயல்படும் நாடு' என்ற எதிர்ப்பார்ப்பைத்
தக்கவைப்பது மற்றும் மனிதனின் ஆசைப்படும் குணம் ஆகிய காரணங்களால்
எல்லாத்துறைகளிலும்,சிறந்து செயல்படும் நாடுகளில் வாழும்
மக்கள் மனநிறைவு அடைவதில்லை, என்ற எனது ஆணத்தரமான கருத்தை
இக்கட்டுரையில் முன்வைத்துள்ளேன்.
****************
No comments:
Post a Comment