Monday, November 6, 2017

மனித மனங்களைப் பண்படுத்தும் கலைகள்

May 3, 2011
    (  நன்றி:    http://www.tamilhindu.com/2011/05/arts-culturing-human-minds/)


பண்டைய காலத்தில் மனிதனின் செயல்பாடு குறிப்பிட்ட எல்லைக்குள் அமைந்திருந்தன. இன்றுபோல நினைத்த மாத்திரத்தில் உலகத்தைச் சுற்றிவரும் வசதிகள் இல்லாததால் சுற்றுப்புறத்திலுள்ள சில கல் தொலைவுக்குள் அவன் செயல்பாடுகள் நின்றுவிட்டன. அவனுக்கு இட்ட தொழிலைச் செவ்வனே செய்து கொண்டு, எஞ்சிய நேரத்தில் இறைவனை நினைத்து அவனுக்குத் தெரிந்த முறையில் வழிபாடு, ஆலயங்களுக்குச் செல்லுதல், பண்டைய கலைகளைப் பேணிப் பாதுகாத்தல், புதிய தலைமுறைகளுக்கு அவற்றைச் சொல்லிக் கொடுத்தல் என வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொண்டான்.
மனிதனுடைய செயல்பாடுகளுக்கு மையமாகப் பயன்பட்டது ஆலயங்கள். ஆலயங்களை இன்றைய பல்கலைக்கழகங்களோடு ஒப்பிடலாம். அந்த வகையில் இறை வழிபாடு முதன்மையிடம் பெற்றிருந்தாலும் ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் பேணிப் பாதுகாத்தது நமது ஆலயங்களே. இதனால்தான் அன்றைய மன்னர்கள் ஒவ்வொரு ஊரிலும் வானளாவிய கோபுரங்களை அமைத்து இறைவனுக்கு ஆலயங்களை எடுப்பித்தார்கள்.
(கங்கை கொண்ட சோழபுரம் -  முதலாம் இராஜ இராஜ சோழனுடைய மகன் இராஜேந்திர சோழனால்  கட்டப்பட்டது.) 


இறை வழிபாட்டில் பூசனைகள் தவிர, வேதம் ஓதுதல், தேவாரம் ஓதுதல், இசை, நடனம் போன்ற நளின கலைகளை வளர்த்தல், சிற்பம், சித்திரம் வரைதல் போன்ற அனைத்தும் மையமாக வைத்து வளர்ந்தது இதுபோன்ற ஆலயங்களில்தான். இன்று உலக மக்கள் அனைவரும் பார்த்து வியந்து பாராட்டும் வகையில் இந்தியப் பாரம்பரியப் பண்பாட்டைப் பறைசாற்றி வரும் சிற்பக் கலைக்கு எத்தனை ஆலயங்களைக் குறிப்பிடலாம்.
(குடைவரக் கோயில் - மாமல்லபுரம்)
தமிழவேள் கோசா
டாக்டர் சுப. திண்ணப்பன்
சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம்
சிங்கப்பூர்

 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றிச் சிங்கப்பூர் மலேசியாவில் தமிழர்கள் வாழ்வு சிறக்கப் பணியாற்றிய பெருந்தகை கோ. சாரங்கபாணி (கோசா)அவர்களுக்கு 1955இல் கோலாலம்பூரில் நடந்த அருள்நெறி மாநாட்டில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழவேள் என்னும் பட்டம் அளித்துச் சிறப்பித்தார். அந்தப் பட்டத்தின் பெயராலேயே - அதாவது தமிழவேள் என்னும் பெயராலேயே மலேசிய சிங்கப்பூர் மக்களால் கோசா இன்றும் அழைக்கப்படுகிறார். அவர் எத்தனையோ பட்டங்கள் பெற்றிருந்தாலும் தமிழவேள் என்னும் பட்டமே தலைமையாய்த் திகழ்கிறது. இந்தத் தமிழவேள் என்னும் பெயருக்குக் கோசா பல்லாற்றானும் தகுதி உடையவர் என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.


 தமிழவேள் என்னும்தொடர் தமிழ். வேள் என்னும் இரண்டு சொற்கள் இடையே அகரச் சாரியை பெற்று வந்த ஒரு தொடராகும். தமிழென் கிளவியும் அதனோரற்றே” என்று தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் (சூ 386) இவ்வாறு தமிழ் அகரச் சாரியை பெற விதி கூறப்படுகிறது. தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமைநீர்மைஇயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் என மூவகையாக விளங்கும் மொழிதமிழ் நூல்தமிழர்தமிழ்நாடு என்னும் ஆறு பொருள்களைத் தருகிறது சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி. (தொகுதி பக் 1756). வேள் என்பதற்குக் கலியாணம்விருப்பம்மன்மதன்முருகன்வேளிர்குலத் தலைவன்சளுக்கவேந்தன்சிற்றரசன்சிறப்புப் பெயர்சிறந்த ஆண்மகன்மண் எனப் பத்துப் பொருள்களை அவ்வகராதி கூறினாலும் தலைவர்ஆண்தகை என்ற பொருள்களையே இத்தொடர்க்கு ஏற்றவையாகக் கொள்ள வேண்டும்.


இனிமைப் பண்பால்

 ‘இனிமையும் நீர்மையும் தமிழெனலாகும்’ என்று பிங்கல நிகண்டு தமிழுக்குப் பொருள் தருகின்றது. எனவே தமிழவேள் என்னும் தொடர் முதலில் இனிமையும் பண்பும் மிக்க தலைவர் என்பதை உணர்த்தும். கோசா அவர்களை நான் 1970இல் சிங்கப்பூரில் முதன்முதலாகச் சந்தித்தேன். அப்போது சிங்கை வானொலித் தமிழ்ப் பிரிவுத் தலைவராகப் பணியாற்றிய திரு அ. முருகையன்  என்னைக் கோசா இல்லத்திற்கு அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தினார். கோசா அவர்கள் தோற்றத்தால் நெடிய உருவமும்பாகவதர் போன்ற தலைமுடியும்புன்னகை தவழும் நன்முகமும் கொண்டவர். பணிவுடையன்இன்சொலன் என்னும் அணிகலன்களை அணிந்த பண்பாளர். நின்ற சொல்லர் நீடு தோன்றினியர்’ என்னும் நற்றிணை அடிக்கு எடுத்துக்காட்டாக இலங்கியவர் செல்விருந்தோம்பி நல்விருந்து பார்த்திருக்கும் செம்மல்” என்பதை நான் அன்று நன்குணர்ந்தேன். இவர் எப்போதும் வெள்ளை வேட்டியும் வெள்ளை ஜிப்பாவும் அணிந்து காட்சி அளிப்பார். எனவே இவர் காட்சிக்கு எளியர். கடுஞ்சொல் கூறாத ஒரு வெள்ளுடை மன்னர். இவர்க்கு வழிகாட்டிய பெரியாரோ வெண்தாடி வேந்தர். அவரைப் பற்றிக் கோசா பெரியார் அறிஞர்க்கு எல்லாம் தந்தைஅறியாதவர்க்கு எல்லாம் விந்தை” என்று குறிப்பிட்டார்.

இன்றமிழ்ப் பணியால்

  ‘தமிழ் கூறும் நல்லுலகம்’ என்னும் தொல்காப்பியப் பாயிரத் தொடரும், ‘செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலனும்’ என்னும் தொல்காப்பிய நூற்பாத் தொடரும் ( 885) ‘தமிழ் கெழு கூடல்’ என்னும் புறநானூற்றுத் தொடரும் ( 58:13) தமிழ் என்பது மொழியைக் குறிக்கும் என்பதை எடுத்துரைக்கும். எனவே தமிழ்மொழிக்குத் தலைவர் என்பது தமிழவேள் என்னும் தொடர் தரும் பொருளாகும்.  


யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்னும் பாரதியாரின் பாடலுக்கேற்பத் தமிழின் இனிமையையும் ஏற்றத்தையும் மலேசிய சிங்கைத் தமிழர்களுக்குக் கோசா தம் எழுத்தாலும் பேச்சாலும் வலியுறுத்தியதோடு தமிழர் திருநாள்” என்னும் ஒரு சிறந்த நிகழ்ச்சியையும் ஆண்டுதோறும் நடத்திக் காட்டினார். அவ்விழாவிற்குத் தமிழகம், இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து தமிழறிஞர்களை அழைத்துப் பல ஊர்களில் சொற்பொழிவுகள் செய்ய ஏற்பாடு செய்தார். இதனால் தமிழார்வமும் தமிழறிவும் இப்பகுதியில் பலர் பெற்றுத் தமிழ்த் தொண்டாற்றிட முன்வந்தனர்.

தமிழ்க் கல்வி நாட்டத்தால்

  சிங்கப்பூரில் தமிழ் ஓர் அதிகாரத்துவ மொழியாக அமைந்ததற்குக் கோசா பெரும்பங்காற்றியுள்ளார். மேலும் அவர் காலத்திலிருந்த தமிழ்ப் பள்ளிகளை ஒருங்கிணைத்துத் தமிழ்க் கல்விக் கழகம் என்ற ஓர் அமைப்பை உருவாக்கித் தமிழ்க்கல்வி முன்னேற்றம் காண அவர் பாடுபட்டார். தென்கிழக்காசியாவிலேயே தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்ட ஓர் உயர்நிலைப் பள்ளி என்னும் பெயரைப் பெற்றிருந்த உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளி உருவாவதற்கு கோசா உதவி செய்தார். 1956இல் மலேயாப் பல்கலைக் கழகத்தில் தோன்றிய  இந்திய இயற்பகுதி தமிழ்த் துறையாக அமையக் காரணமாக இருந்த பெருமகன் கோசா அவர்களே என்பதை நாடறியும். வரலாற்றுப் பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாத்திரியார் இப்பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதப் பகுதி தொடங்கப் பரிந்துரை செய்தபோது அதனை எதிர்த்துத் தமிழ் எங்கள் உயிர் என்னும் பெயரில் நிதி திரட்டி மக்கள் ஆதரவையும் பெருக்கிக் கோசா செய்த போராட்டத்தின் விளைவே மலேயாப் பல்கலைக் கழகத்தில் இந்திய இயற்பகுதி தமிழ்த் துறையாக அமையக் காரணமாக
ஆயிற்று. இந்தத் துறை சிங்கப்பூரில்தான் தொடங்கப்பட்டது. கோசாவின் இந்த உதவி இப்பகுதி மக்களுக்குக் காலத்தினால் செய்த பேருதவியாகக் கருதப்படுகிறது. இதனால் தமிழில் பலர் பட்டம் பெறவும்ஆய்வுகள் நடத்தவும் வழி ஏற்பட்டது. இந்தத் துறைதான் உலகத் தமிழ் மாநாடுகள் நடத்த வழிகாட்டியது. அதற்கும் உறுதுணையாக இருந்தவர் கோசாதான்.

இதழியற்பணியால்

  மலேசியா சிங்கைப் பகுதியில் தமிழை வாழ்விக்கக் கோசா தமிழ் முரசு
இதழைத் தொடங்கி நடத்தினார். தமிழாற்றல் மிக்கவர்களைத் துணையாசிரியர்களாக்கினார். பயன் தரும் தலையங்கங்கள் பலவற்றை எழுதினார். இதனால் இப்பகுதியில் நல்ல தமிழ் மணம் வீசியது. தமிழர் வாழ்வில் எத்தனையோ நன்மைகள் ஏற்பட்டன. அறுபது  ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி இன்று சிங்கையில் பீடுநடை போடும் ஒரேஒரு தமிழ் நாளிதழ் தமிழ் முரசு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் முன்னேற்றம்’, ‘சீர்திருத்தம்’, ‘தேச தூதன்என்ற தமிழ் இதழ்களும் Reform, Indian Daily என்ற ஆங்கில இதழ்களும் நடத்தித் தமிழ் மொழிதமிழர் நலம் மேம்பட முயன்றார். இத்தகைய இதழியல்பணியும் கோசா செய்துள்ளார். தமிழின் பெருமையையும் தமிழர் சிறப்பையும் தரணிக்குப் பறைசாற்றத் தலைப்பட்ட ஒருவரைத் தமிழ் மொழித் தலைவர்-தமிழவேள் எனக் கூறுவதில் தயக்கம் ஏற்பட வழி இல்லையே.

முத்தமிழ்க் காப்பால்

  இயல்இசைநாடகம் எனத் தமிழை மூவகையாகப் பகுத்து முத்தமிழ்
எனப் பெயரிட்ட பெருமை தமிழர்களைச் சாரும். இயற்றமிழ் எண்ணத்தை வளர்க்கும். இசைத்தமிழ் உள்ளத்தை உருக்கி ஒரு முடிவுக்கு வரச் செய்யும்.நாடகத்தமிழ் நடந்துகாட்டி மக்களை நல்வழிப்படுத்தும்” என்பார் கி.ஆ.பெ.விசுவநாதம். இம் மூவகைத் தமிழும் மலேசிய சிங்கைப் பகுதிகளில் மலரக் கோசா பாடுபட்டார். தமிழர் திருநாளில் இயற்றமிழ்ப் பகுதியைச் சார்ந்த பேச்சுப்போட்டிகதை கவிதை கட்டுரை எழுதும் போட்டிகள் நடத்திப் பலரை ஈடுபடச் செய்தார். பாட்டுப்போட்டி வாயிலாக இசைத்தமிழும்நாடகங்கள் பலவற்றைத் தமிழர் திருநாளின்போது நடத்தியதால் நாடகத்தமிழும் வளர்ச்சி கண்டன. எனவே தான் அவருக்கு 16-1-1966இல் நடைபெற்ற தமிழர் திருநாள் நிகழ்ச்சியின்போது திருமதி சௌந்தரா கைலாசம்பேராசிரியை சோ. பாகிரதி ஆகியோர் சார்பில் தவத்திரு தனிநாயக அடிகளார் அவர்களால் முத்தமிழ்க் காவலர் என்னும் பட்டம் வழங்கப்பட்டது.

 இலக்கியப் பணியால்

  தமிழ் என்பது தமிழ் நூல்தமிழ் இலக்கியம் ஆகியவற்றையும் குறிக்கும். ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்தற்குக் கபிலர் குறிஞ்சிப்பாட்டு பாடியதாகச் சங்க இலக்கியக் குறிப்பு ஒன்றுண்டு. இந்த இடத்தில் தமிழ் என்பது குறிஞ்சிப் பாட்டாகிய இலக்கிய நூலைக் குறிக்கிறது அல்லவாஇந்த வகையில் பார்த்தாலும் கோசா மலேசிய சிங்கைப் பகுதியில் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தன்னாலியன்ற வகையில் எல்லாம் தளராது பாடுபட்டுள்ளார் எனலாம். அவர் தமிழ் முரசு இதழில் மாணவர் மணிமன்ற மலர் என்னும் பகுதி 1953இல் தொடங்கி அதில் இங்குள்ள தமிழ் மாணவர்களையும் இளைஞர்களையும் கதை,கட்டுரை,கவிதை முதலிய படைப்பிலக்கியங்களையும் எழுதத் தூண்டினார். வெண்பாப் போட்டி போன்றவற்றை நடத்தி ஆர்வமூட்டினார். இன்று மலேசிய சிங்கைத் தமிழ் இலக்கியப் படைப்புகளை உருவாக்கும் எழுத்தாளர் பலர் இதனால் ஊக்கம் பெற்றவர்களே ஆவர். மலேசிய சிங்கைப் பகுதியில் தமிழ் இலக்கிய நூல்கள்இதழ்கள் உருவாக உழைத்த உத்தமரைத் தமிழ வேள் என்று உரைப்பது பொருத்தம்தானே

தமிழர் தமிழ் பிணைப்பால்


  தமிழ் என்னும் சொல் தமிழரையும் உணர்த்தும், 'அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர்என்னும் சிலப்பதிகாரத் தொடர்(26:161) இதனை வலியுறுத்தும். தமிழும் தமிழரும் உயிரும் உடலும் போன்ற உறவுடைய சொற்கள். ஒன்றின்றி ஒன்றில்லை என்பதை நன்குணர்ந்த கோசா தமிழர் சிறந்தால்தான் தமிழ்மொழி சிறக்கும்தமிழ்மொழி வாழ்ந்தால்தான் தமிழர் வாழ முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவராய் இருந்தார். எனவேதான் எழுத்தாளர்களை எதனை எழுதினாலும் முதலில் "வாழிய செந்தமிழ்,வாழ்க நற்றமிழர்" என்னும் பாரதியின் அடிகளை முதலில் எழுதிவிட்டுத்தான் தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

 ஒற்றுமை கண்டதால்

  சாதியால்சமயத்தால்ஊரால் பிரிந்து வாழ்ந்த தமிழரைப் பிணைப்பதற்காகக் கோசா 1951இல் கண்ட ஓர் அமைப்பே தமிழர் பிரதிநிதித்துவ சபை எனப்படும் தமிழர் பேரவை ஆகும். "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வுநம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே" என்ற பாரதி வாக்கே அவர் பணிகளுக்கெல்லாம் அடிப்படை நோக்கமாக இருந்தது. சிறுசிறு அமைப்புகளாகச் சிதறிக் கிடந்த சங்கங்களை எல்லாம் ஒன்று சேர்த்து உருவாக்கிய அமைப்பே தமிழர் பேரவையாகும். ஒற்றுமை என்னும் உயர்ந்த நோக்கத்தை நிறைவேற்றும் மற்றொரு முயற்சியே தமிழர் திருநாளாகும். மொழியை முன்னிறுத்தி
ஒற்றுமைப்படுத்த விழைந்த வேட்கை அது. "வெள்ளம்போல் தமிழர் கூட்டம்வீரங்கொள் கூட்டம்அன்னார் உள்ளத்தால் ஒருவரேமற்று உடலினால் பலராய்க் காண்பார்கள்ளத்தால் நெருங்கொணாதே என வையம் கலங்கக் கண்டு துள்ளும் நாள் எந்நாள்உள்ளம் சொக்கும் நாள் எந்தநாளோ?" என்று பாரதிதாசன் கனவு கண்ட நாளே தமிழர் திருநாளாகும்.


சீர்திருத்தச் செயலால்

 தமிழர் முன்னேற்றத்துக்குத் தடையாக இருந்த சாதி வேற்றுமைமூட நம்பிக்கைமத நம்பிக்கைபகுத்தறிவுக்குப் புறம்பான பழக்கவழக்கங்கள்குடிப்பழக்கம் முதலானவற்றைக் களையக் கோசா அயராது பாடுபட்டார். பெரியார் ஈ வெ ரா அவர்களை மலேசியாசிங்கைக்கு இருமுறை வருமாறு செய்து இங்குள்ள தமிழ் மக்களுக்குப் பகுத்தறிவுச் சிந்தனைகளை அவர் வாயிலாக எடுத்துணர்த்துமாறு செய்தார். மேலும் தமிழர் சீர்திருத்த சங்கம் 1930இலேயே தொடங்கினார். 1939இல் அகில மலேயா தமிழர் சங்கம் என்னும் அமைப்பை உ. இராமசாமி நாடார் தலைமையில் ஆரம்பித்து வைத்தார். படிப்பகம்நூலகம் பலவற்றைத் திறக்க வழி செய்தார். 1956இல் மலேசியத் தமிழ் இளைஞர் மணி மன்றம் தொடங்க ஆவன செய்தார். இத்தகைய அமைப்புகள் வழி இவர் மேற்கொண்ட செயலாற்றலால் சாதி வேற்றுமை குறைந்தது. கலப்புத் திருமணங்கள் பெருகின. சுயமரியாதைத் திருமணங்கள் நடத்திவைக்கப்பட்டன. தமிழர்கள் தம் திருமணங்களைப் பதிவு செய்துகொள்ள வழிசெய்தார். சொல்லுதல் யார்க்கும் எளியஅரியவாம் சொல்லிய வண்ணம் செயல்” என்பது குறள். ஆனால் கோசா தாமே ஒரு சீனப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். குடி குடியைக் கெடுக்கும்” என்பதை எடுத்துரைத்துத் தமிழ்ச் சமுதாயத்தை திருத்தினார். மேலும் "கேடில் விழுச் செல்வம் கல்வி" என்பதைத் தமிழ் மக்கள் உணர்ந்து பின்பற்றும்படி செய்தார். ஏழைத் தொழிலாளர் நலம்பெறவும்தமிழ்ப் பெண்கள் பல உரிமைகளைப் பெறவும் தக்கன செய்தார். பெண்கள் நாடாளு மன்ற உறுப்பினர்களாக வர வேண்டும் என்று தலையங்கங்கள் எழுதினார். இங்குள்ள கோயில்களில் உயிர்க்கொலை செய்வதைத் தடுக்க ஆவன செய்தார்.

குடியுரிமை முயற்சியால்

  எல்லாவற்றுக்கும் மேலாக 'ஆற்றில் ஒருகால்சேற்றில் ஒரு கால்என்பதற்கேற்பத் தமிழகத்தில் ஒருகாலும் சிங்கப்பூரில் ஒருகாலும் வைத்துத் தடுமாறிக்கொண்டிருந்த தமிழ் மக்களைச் சிங்கைக் குடிமக்களாக ஆக்குவதற்குக் கோசா எடுத்துக்கொண்ட முயற்சிகளைக் குறிப்பிட வேண்டும். இம்முயற்சியின் விளைவாக இன்று சிங்கப்பூரில் செல்வச் செழிப்புடன் தமிழர்கள் வாழ்வதற்கு வழிசெய்த கோசா அவர்களைத் தமிழர் தலைவர்- தமிழவேள்-என்று கூறத் தடை ஏதேனும் உண்டாகூறீர்.


நாட்டுப் புகழ் நாட்டியதால்

  இறுதியாகத் தமிழ் என்னும் சொல் நாட்டையும் உணர்த்தும் நிலையில் தமிழ வேளைக் காண்போம். "தண்டமிழ் பொதுவெனப் பொறாஅன்" என்னும் புறநானூற்றுத் தொடரில்(51:5) தமிழ் என்பது தமிழ் நாட்டைக் குறிக்கிறது. தமிழ் நாட்டின் பெருமையைத் தரணி அறியச் செய்வதற்கும் கோசா பாடுபட்டார். தமிழ் நாட்டின் பெருமையைப் பாரதியார் " வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று ஓரடியில் கூறிவிட்டார். தமிழர்கள் தரணிக்கு வழங்கிய நன்கொடைகளில் தலையாய நன்கொடையாகிய 
திருக்குறளையும் அந்நூலை ஆக்கிய திருவள்ளுவரையும் தமிழர்களிடையேயும் மற்றவர்களிடையேயும் பரப்பும் நோக்கத்தில் திருக்குறள் விழாதிருவள்ளுவர் விழா ஆகியவற்றைக் கொண்டாட வழிசெய்தார். திருக்குறள் மனனப் போட்டிகள்கதைகள்வகுப்புகள்சொற்பொழிவுகள் நடக்க ஆவன செய்தார். மேலும் தமிழ் முரசில் திருவள்ளுவராண்டு இடம் பெறச் செய்தார். ஏனைய தமிழ் இலக்கியம்தமிழ்ச் சான்றோர்கள்கவிஞர்கள் பற்றிச் சிங்கை மக்கள் அறியப் பத்திரிகைஅமைப்புகள் வாயிலாகப் பல நடவடிக்கைகள் மேற்கொண்டார். பாரதிதாசனைப் பற்றித் தமிழர்கள் அறியவும் அவர்க்கு நிதி சேர்த்துதவும் முயன்றார் கோசா. இவ்வாறு தமிழ் நாட்டின் பெருமையையும் போற்ற அவர் தவறவில்லை. 

முடிவுரை

 தமிழவேள் என்னும் தொடரிலுள்ள தமிழ் என்னும் சொல்லுக்கு அகராதி உணர்த்தும் இனிமைநீர்மைமுத்தமிழ்மொழிஇலக்கியம்,தமிழரினம். தமிழ்நாடு ஆகிய அறுவகைப் பொருள் நோக்கிலும் பெரும்பணி செய்து வாழ்ந்து மலேசிய சிங்கைத் தமிழர்க்கு வழிகாட்டிய ஒளிவிளக்கே தலைவர் கோசா எனப்படும் தமிழவேள் கோ சாரங்கபாணி ஆவார். அவரைத்  தமிழவேள் என்ற பெயராலேயே அழைப்பதை மறுப்பார் உண்டோஇல்லை என்றே உறுதியாக இயம்பலாம். சாரங்கபாணி செய்த சாதனையை இனி ஆரங்கே செய்வார்சாற்றுங்கள். 

(கட்டுரையை வடிவமைத்து வலைப்பூவில் பதிவேற்றம் செய்திட்ட பேராசிரியர் ஐயா திண்ணப்பன் அவர்களுக்கு நன்றி)


Thursday, February 9, 2017

Dr. Radha Krishnan

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தலைவர்கள்JUNE 5, 2013 Radhakrishnan ‘வீ. ராதாகிருஷ்ணன்’ என்றழைக்கப்படும் ‘சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்’ அவர்கள், சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கி, எண்ணற்ற டாக்டர் பட்டங்கள் பெற்று, நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளே ‘ஆசிரியர் தினமாக’ செப்டம்பர் 5-ம் தேதி, ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. ஒரு ஆசிரியராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பாரத நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

 பிறப்பு: செப்டம்பர் 5, 1888
 பிறப்பிடம்: சர்வபள்ளி கிராமம், திருத்தணி, தமிழ்நாடு, இந்தியா
 இறப்பு: ஏப்ரல் 17, 1975
தொழில்: அரசியல்வாதி, தத்துவவாதி, பேராசிரியர் 
நாட்டுரிமை: இந்தியா


 பிறப்பு :

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், 1888 செப்டம்பர் 5-ம் தேதி திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில், ஏழ்மையான  குடும்பத்தில், சர்வபள்ளி வீராசாமிக்கும், சீதம்மாக்கும் மகனாகப் பிறந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கையும், கல்வியும் :

தெலுங்கு மொழியைத் தாய்மொழியாக கொண்ட ராதாகிருஷ்ணன் அவர்கள், தம் இளமைக்காலத்தைத் திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்ததால், அவரது கல்வியை உதவித்தொகை மூலமாகவே தொடர்ந்தார். தனது ஆரம்பக் கல்வியைத் திருவள்ளூரிலுள்ள ‘கௌடி’ பள்ளியிலும், பின்னர் திருப்பதியிலுள்ள ‘லூத்தரன் மிஷன் உயர் பள்ளியிலும்’ படித்தார்.

அவர் வேலூரிலுள்ள ஊரிஸ் கல்லூரியில் முதலில் சேர்ந்தார். பிறகு, சென்னையிலுள்ள கிறிஸ்துவர் கல்லூரிக்கு மாறினார். தத்துவத்தை முதல் பாடமாக தேர்ந்தெடுத்த அவர், அதில் இளங்கலை (பி.ஏ) மற்றும் முதுகலைப் பட்டமும் (எம்.ஏ) பெற்றார்.

இல்லற வாழ்க்கை :

ராதாகிருஷ்ணன் அவர்கள், தமது தூரத்து உறவினரான சிவகாமு, என்பவரை தனது பதினாறாவது வயதில் மணமுடித்தார். இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகளும், சர்வபள்ளி கோபால் என்ற மகனும் உள்ளனர். சர்வபள்ளி கோபால், இந்திய வரலாற்றுத் துறையில் மிக முக்கியமான ஒருவர். 1956-ம் ஆண்டு, ராதாகிருஷ்ணன் அவர்களின் மனைவி சிவகாமு இறந்தபோது, அவரது இல்லற வாழ்க்கை 56 ஆண்டு காலத்தைக் கடந்தது.

ஆசிரியராக அவருடைய பணி:

  முதுகலைப் பட்டம் பெற்ற ராதாகிருஷ்ணன் அவர்கள், 1909ல் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராக பணியேற்றார். கல்லூரியில், அவர் இந்துமத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத் கீதை, பிரம்மசூத்ரா, மற்றும் சங்கரா, ராமானுஜர், மாதவர் போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அவர் புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, இந்திய நாட்டில் அறிமுகப்படுத்தினார். மேலை நாடுகளுக்குச் செல்லாமல், இந்திய நாட்டிலேயே படித்த ஒருவர் என்ற பெருமையுடைய சர்வபள்ளி ராதாக்ருஷ்ணன் அவர்களை, பல நாடுகள் கவர்ந்து இழுத்தன. தத்துவமேதையான அவர், இந்திய மோகத்தை அன்றைய நாளிலே அந்நிய மண்ணில் விதைக்கக் காரணமாக இருந்தார்.

தத்துவத் துறையில் அவரது பங்கு:

1918ல், மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவ பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார், ராதாகிருஷ்ணன் அவர்கள்.
1921ல், கல்கத்தா பல்கலைக்கழகத்தில், தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார்.  1923ல், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது.  இப்புத்தகம், பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலைசிறந்தப் படைப்பாகும். இந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. பல மேடைகளில், அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார். மேற்கத்திய சிந்தனையாளர்களின் அனைத்து கூற்றுகளும் பரந்த கலாச்சாரத்தில் இருந்து இறையியல் தாக்கங்கள் சார்புடையதாகவே உள்ளன என்று வாதிட்டார். இந்திய தத்துவங்களைத் தரமான கல்வி வாசகங்கள் உதவியுடன் மொழிபெயர்த்தால், மேற்கத்திய தரங்களையும் மிஞ்சி விடும் என்றுரைத்தார். இவ்வாறு இந்திய தத்துவத்தை, உலக வரைபடத்தில் வைத்த ஒரு தத்துவஞானி என்று அவரைக் கூறலாம்.

அவர் வகித்த பிற பணிகள்:

 1931 ஆம் ஆண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1939 ஆம் ஆண்டு, பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார்.
1946ல், அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார்.
சுதந்திரத்திற்குப் பின், 1948ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை, பல்கலைக்கழகக் கல்வி த்துறை , ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது. இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவின
.
அரசியல் வாழ்க்கை:

டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், 1949 ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் தூதராக நியமிக்கப்பட்டார். இது சோவியத் யூனியனுக்கு ஒரு வலுவான உறவு அடித்தளம் அமைக்க உதவியது.
1952ல், இந்தியாவின் முதல் துணைத் தலைவராக ராதாகிருஷ்ணன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1954ல், இந்திய அரசு அவருக்கு ‘பாரத ரத்னா’ விருதினை வழங்கி கௌரவித்தது.
இரண்டு முறை துணை ஜனாதிபதியாகப் பணியாற்றிய பிறகு, 1962ல் இந்திய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் இந்திய ஜனாதிபதியாக இருந்த பதவிக்காலத்தின் போது, இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தானுடன் யுத்தம் நடத்தியது. ஜனாதிபதியாக அவர் எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் நாட்டிற்கும், இந்திய மக்களுக்கும் பெரிதும் உதவின. 1967ல், ஜனாதிபதி பதவியிலுருந்து ஓய்வு  பெற்று சென்னையில் குடியேறினார்.
இறப்பு :  டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், தனது 86வது வயதில், ஏப்ரல் 17, 1975 ஆம் ஆண்டு சென்னையில் காலமானார்.

காலவரிசை :
 1888: திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில், செப்டம்பர் 5-ம் தேதி பிறந்தார்.
 1918: மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவ பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார்.
 1921: கல்கத்தா பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். 
1923: அவரின் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது.
 1931: ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
1939: பெனாரஸ் இந்து மதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார்.
 1946: அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார்.
 1948: பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது.
 1949: சோவியத் யூனியன் தூதராக நியமிக்கப்பட்டார்.
 1954: ‘பாரத ரத்னா’ விருது பெற்றார். 1962: இந்திய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967: ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுப் பெற்றார்.
 1975: தனது 86வது வயதில், ஏப்ரல் 17, 1975 ஆம் ஆண்டு சென்னையில் காலமானார்.
 நன்றி : http://www.itstamil.com/sarvepalli-radhakrishnan.html

Friday, February 24, 2012

நூறு பூக்கள் - சூர்யா

'குறிஞ்சிப் பாட்டு', காதலன், காதலியின் நீண்ட பயணம் ஒன்றைச் சொல்லும் சுவையான புத்தகம். எழுதியவர் கபிலர்.

இந்நூலின் 61வது வரியில் தொடங்கி, 95வது வரிவரையிலான பகுதியில், அந்தக் காலப் பூக்களின் விரிவான பட்டியல் வருகிறது :

உள்ளகம் சிவந்த கண்ணேம் வள்இதழ்
ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண்கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கோடு வேரி, தேமா, மனிச்சிகை,
உரீஇநாறு அவிழ்தொத்து உங்தூழ், கூவிளம்,
எரிபுரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான்பூங்குடகம்,
எருவை, செருவிளை, மணிப்பூங்குடசம்,
பயினி, வானி, பல்இனர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல்இணர்க் காயா,
விரிமலர் ஆவிரை, வேரல், சூரல்,
குறீஇப்பூளை, குறுநறுங்கண்ணி,
குருசிலை, மருதம், விரிபூங்கோங்கம்,
போங்கம், திலகம், தேங்கமல் பாதிரி,
செருத்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,
கரந்தை, குளவி, கடிகமழ் கலிமா,
தில்லை, பாலை, கல்இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள்நறு நெய்தல்,
தாழை, தளவம், முள்தாட் தாமரை,
ஞாழல், மௌவல், நறுந்தாண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குழலி,
கோடல், கைதை, கொங்குமுதிர் நறுவழை,
காஞ்சி, பனிக்குலைக் கள்கமழ் நெய்தல்,
பாங்கர், மாரவும், பல்பூந் தணக்கம்,
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அரும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
தும்பை, துழாஅய், சுடர்பூந் தொன்றி,
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங்குருங்கத்தி,
ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
மாஇருங்குருத்தும், வேங்கையும்,. பிறவும் ....

இத்தனை பூக்களையும் பார்த்து மயங்கி, அவற்றை ஆசையாகப் பறித்து, மழை கழுவித் தூய்மையாக்கிய பாறையில் குவிப்பதாகக் காட்சி.





Sunday, February 19, 2012

வெற்றி மீது வெற்றி வந்து




மாணவியரே! இங்குள்ள பாடலைக் கேட்டு ரசிக்கவும். பின் உங்களிடம் வழங்கப் பட்டுள்ள பயிற்சியைக் குழுவினரோடு சேர்ந்து செய்து ஒப்படைக்கவும்.

Sunday, February 12, 2012

tamil99 keyboard இலவசம்

இவ்விணையத் தளங்களுக்குச் சென்று பார்த்தால், தமிழில் தட்டச்சு செய்ய வசதி உள்ளது. எல்லாம் இலவசம். பணம் செலவிட வேண்டியதில்லை. இவற்றுள் மூன்றாவதாக இடம் பெற்றுள்ள இணையத்தளம் மிகச் சுலபமாக உள்ளது. அங்குத்தான் tamil99 keyboard வசதி உள்ளது. Tamil 99 key boardஐத்தான் நாம் பின்பற்ற வேண்டும்.


http://tamil.sg/

http://www.keymanweb.com/go/tam/ekwnewtwuni

http://wk.w3tamil.com/

http://www.kuralsoft.com/ikural.htm

http://www.branah.com/tamil

குழுமப் பள்ளிகளுக்கு இடையே நடைபெறுகின்ற ஒரு பேச்சுப்போட்டியில், ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக்கொண்டாட்டங்கள் அவசியம்’ எனும் தலைப்பில் நீவிர் ஆற்றும் சொற்பொழிவு.

  சப்ரினா கான் (302) அவைக்கு முதற்கண் என் வணக்கம்!   இப்போட்டியில் ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக் கொண்டாட்டங்கள் அவசியம்’ என்ற தலை...